நாலடியார்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நாலடியார் ----------- நூல்களுள் ஒன்றாகும்.
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். .
2. ‘நாலும் ---------- சொல்லுக் குறுதி’ என்பது பழமொழி.
‘நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’ என்பது பழமொழி. .
3. நாலடியாரை ----------- என்றும் கூறுவர்.
நாலடியாரை நாலடி நானூறு என்றும் கூறுவர்.
4. நாலடியார் ------------ பலரால் பாடப்பெற்றதாகும்.
நாலடியார் சமண முனிவர் பலரால் பாடப்பெற்றதாகும்.
5. சமண முனிவர்கள் பற்றிய --------- கிடைக்கவில்லை.
சமண முனிவர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை.
6. பாண்டி நாட்டை விட்டு நீங்கும்போது ஒவ்வொருவரும் ஓலையில் ஒரு ---------- எழுதி விட்டுச் சென்றனர் எனக் கூறப்பெறுகிறது.
பாண்டி நாட்டை விட்டு நீங்கும்போது ஒவ்வொருவரும் ஓலையில் ஒரு செய்யுள் எழுதி விட்டுச் சென்றனர் எனக் கூறப்பெறுகிறது.
7. அரிமாவுக்குப் பசிவந்த போதும் ------------ மேயாது.
அரிமாவுக்குப் பசிவந்த போதும் புல் மேயாது.
8. நிலவு தன்னிடம் ---------- கொண்டிருக்கும்.
நிலவு தன்னிடம் களங்கம் கொண்டிருக்கும்
9. பெரியோர்கள் தவறு கண்டு வருத்தமும் சினமும் கொண்டால் ------- தாங்க முடியாது.
பெரியோர்கள் தவறு கண்டு வருத்தமும் சினமும் கொண்டால் யாராலும் தாங்க முடியாது.
10. கதிரவனின் ----------- கண்டு பனிநீர்த்துளிகள் மறைந்து போகும்.
கதிரவனின் வெயில் கண்டு பனிநீர்த்துளிகள் மறைந்து போகும்.