2. அற இலக்கியம்

பழமொழி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  மக்கள் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறுவதே -------- ஆகும்.

மக்கள் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறுவதே பழமொழி ஆகும்.

2.  பழமொழியை ------------ என்றும் கூறுவர்.

பழமொழியை மூதுரை / முதுமொழி என்றும் கூறுவர்.

3.  இது நானூறு வெண்பாக்களைக் கொண்டதால் --------- என்றும் வழங்கப்பெறுகிறது.

இது நானூறு வெண்பாக்களைக் கொண்டதால் பழமொழி நானூறு என்றும் வழங்கப்பெறுகிறது.

4.  பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் ----------- ஆவர்.

பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவர்.

5.  இவரது சமயம் --------- ஆகும்.

இவரது சமயம் சமணம் ஆகும்.

6.  பழமொழி ஆசிரியர் முன்றுறையரையனார் ஒரு ------------- ஆவர்.

பழமொழி ஆசிரியர் முன்றுறையரையனார் ஒரு சிற்றரசர் ஆவர்

7.  இவரது காலம் கி.பி. ----------- நூற்றாண்டு என்பர்.

இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பர்.

8.  பாம்பின் காலை ----------- அறியும் என்பது பழமொழி.

பாம்பின் காலை பாம்பு அறியும் என்பது பழமொழி.

9.  ஞாயிற்றைக் ---------- கொண்டு மறைக்க இயலாது.

ஞாயிற்றைக் கை கொண்டு மறைக்க இயலாது.

10.  முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் ------------- அளித்தனர்.

முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்.