நாலடியார்
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. நாலடியாரை நாலடி நானூறு என்றும் கூறுவர்.
சரி
2. நாலடியார் புலவர் நக்கீரரால் பாடப்பெற்றது.
தவறு
3. சிங்கம் தனக்குப் பசிவந்தால் புல்லைத் தின்னாது.
சரி
4. அகன்ற வானில் ஒளிதரும் நிலவும், சான்றோரும் ஒப்புமை உடையவர்.
சரி
5. நிலவு மாசு மறுவற்றது.
தவறு
6. சான்றோர் களங்கம் ஏற்படுமாயின் தம்மையே அழித்துக் கொள்வர்.
சரி
7. குற்றமற்றப் பெரியோர்கள் பொறுத்துக் கொள்வர் என்று எண்ணி வெறுப்பனவற்றை செய்யாதிருக்க வேண்டும்.
சரி
8. சான்றோர்க்குச் சினம் ஏற்படுமாயின் தாங்குவது எளிது.
தவறு
9. கதிரவனின் வெப்பம் கண்டு புல்நுனியில் உள்ள நீர்த்துளிகள் ஆவியாகி மறையும்.
சரி
10. நல்லொழுக்கம் மிக்கப் பெரியவர்களுடன் சேர்ந்தவுடன் தீய பண்புகள் நீங்கிவிடும்.
சரி