2. அற இலக்கியம்

பழமொழி

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


பழமொழி என்னும் நீதி அல்லது அற நூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். அரையன் என்பது அரசரைக் குறிக்கும். இவர் பாண்டிநாட்டு முன்றுறை என்னும் ஊரை ஆட்சி புரிந்த சிற்றரசர் என ஆய்வாளர் கூறுவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு.