2. அற இலக்கியம்

திருக்குறள்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  சிறப்புமிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆனதால் ---------- என்று பெயர்.

சிறப்புமிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆனதால் திருக்குறள் என்று பெயர்.

2.  திருக்குறளை இயற்றியவர் --------- ஆவார்.

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.

3.  திருக்குறள் ---------- அதிகாரங்களைக் கொண்டது.

திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது.

4.  திருக்குறள் ------------- நூல்களுள் ஒன்றாகும்.

திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

5.  திருக்குறள் அறம், பொருள், இன்பமென ---------- பெரும் பிரிவுகளைக் கொண்டது.

திருக்குறள் அறம், பொருள், இன்பமென மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.

6.  திருக்குறளின் காலம் ------------ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருக்குறளின் காலம் கி.மு.31 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

7.  குற்றமறக் கற்று அதன்படி ----------- வேண்டும்.

குற்றமறக் கற்று அதன்படி நடக்க வேண்டும்.

8.  கல்லாதவர் ---------- ஆவர்.

கல்லாதவர் கடையர் ஆவர்.

9.  படிக்கப் படிக்க ------------ ஊறும்.

படிக்கப் படிக்க அறிவு ஊறும்.

10.  கேடில்லாத விழுச்செல்வம் ---------- ஆகும்.

கேடில்லாத விழுச்செல்வம் கல்வி ஆகும்.