திருக்குறள்
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. திருக்குறள் சிறப்புமிக்க நான்கு அடிகளால் ஆன நூல்.
தவறு
2. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பெரும்பிரிவுகள் கொண்டது.
சரி
3. திருக்குறள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
தவறு
4. திருக்குறள் உலகப் பொதுமறை என்று வழங்கப்பெறுகிறது.
சரி
5. திருவள்ளுவர் பற்றிய செய்திகள் தெரியவில்லை.
சரி
6. திருவள்ளுவர் காலம் கி.மு.310 என உறுதி செய்யப் பெற்றுள்ளது.
தவறு
7. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும்.
சரி
8. மகிழும்படி கூடிப் பிரியாமல் இருத்தலே புலவர் தொழிலாகும்.
சரி
9. ஒரு பிறப்பில் கற்ற கல்வி மூன்று பிறப்புக்கும் உதவும்.
தவறு
10. கேடில்லா சிறந்த செல்வம் கல்வியாகும்.
சரி