இறை வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. வேதநாயகம் பிள்ளை திருச்சிக்கு அருகிலுள்ள ---------- என்ற ஊரில் பிறந்தார்.
வேதநாயகம் பிள்ளை திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூர் என்ற ஊரில் பிறந்தார்.
2. வேதநாயகம் பிள்ளையின் தந்தையார் பெயர் ---------
வேதநாயகம் பிள்ளையின் தந்தையார் பெயர் சவரிமுத்துப் பிள்ளை.
3. மாயூரம் வேதநாயகம் மக்களால் --------- என்று போற்றப்பெற்றார்.
மாயூரம் வேதநாயகம் மக்களால் நீதிநாயகர் என்று போற்றப்பெற்றார்.
4. மாயூரம் வேதநாயகம் தமிழில் -------- எழுதினார்.
மாயூரம் வேதநாயகம் தமிழில்முதல் நாவல் எழுதினார்.
5. கதிரவன் கிரணமாகிய ----------- கடவுளைத் தொழுகிறான்.
கதிரவன் கிரணமாகிய கையால் கடவுளைத் தொழுகிறான்.
6. பறவைகள் ---------- பாடியும் இறைவனைத் துதி செய்யும்.
பறவைகள் ஆடியும் பாடியும் இறைவனைத் துதி செய்யும்.
7. மரங்கள் மலர்கள் --------- கடவுளைப் போற்றும்.
மரங்கள் மலர்கள் தூவி கடவுளைப் போற்றும்.
8. தொழில் செய்து --------- கடவுளை ஏத்தும்.
தொழில் செய்து ஐம்பூதங்கள் கடவுளை ஏத்தும்.
9. ஒலிக்கின்ற கடல் -------- இறைவனை வாழ்த்தும்.
ஒலிக்கின்ற கடல் ஒலியால் இறைவனை வாழ்த்தும்.
10. மனமே நீ இறைவனை ----------- வணங்காது இருப்பது ஏனோ?
மனமே நீ இறைவனை வாழ்த்தி வணங்காது இருப்பது ஏனோ?