1. வாழ்த்து

இறை வாழ்த்து

பாடல்
Poem


இறைவாழ்த்து

கதிரவன் கிரணக் கையால்

கடவுளைத் தொழுவான்

புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்

துதிசெயும் தருக்க ளெல்லாம்

பொதியலர் தூவிப் போற்றும்

பூதந்தந் தொழில்செய் தேத்தும்

அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்

அகமேநீ வாழ்த்தா தென்னே!

- வேதநாயகம் பிள்ளை