1. வாழ்த்து

மொழி வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  தமிழ்நாட்டு மக்களின் ---------- தமிழாகும்.

தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி தமிழாகும்.

2.  நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் ---------

நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் மோகனூர்.

3.  நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் ---------

நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் வெ. இராமலிங்கனார்.

4.  வெ. இராமலிங்கனார் பிறந்த நாள் --------

வெ. இராமலிங்கனார் பிறந்த நாள் 19.10.1888

5.  காந்தியடிகளின் தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டமையால் ----------- எனச் சிறப்பிக்கப்பெற்றார்.

காந்தியடிகளின் தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டமையால் காந்தியக் கவிஞர் எனச் சிறப்பிக்கப்பெற்றார்.

6.  மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுவது ----------

மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுவது தாய்மொழி

7.  கொல்லாமையும், --------- யும் மிகச் சிறந்த இரண்டு அறங்களாகும்.

கொல்லாமையும் பொய்யாமை யும் மிகச் சிறந்த இரண்டு அறங்களாகும்.

8.  நல்லவர்கள் சொல், ---------, மனத்தால் வணங்குவர்.

நல்லவர்கள் சொல், செயல், மனத்தால் வணங்குவர்.

9.  மலை உச்சியில் வைக்கப்பெற்ற -------- போல மறைவற்ற தமிழ் மொழி.

மலை உச்சியில் வைக்கப்பெற்ற ஒளி போல மறைவற்ற தமிழ் மொழி.

10.  நல்லவர்கள் தொண்டு செய்த ----------- எந்நாளும் வாழ்க.

நல்லவர்கள் தொண்டு செய்த தமிழ்மொழி எந்நாளும் வாழ்க.