1. வாழ்த்து

மொழி வாழ்த்து

பாடல்
Poem


மொழி வாழ்த்து

கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்

நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்

அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்

மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்

கொல்லாமை பொய்யாமை எனுமிவ்வி ரண்டில்

எல்லாநல் லறமுற்றும் இடைநிற்றல் கண்டு

சொல்லாலும் செயலாலும் மனதாலும் தொழுதோர்

நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்

- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்