47. உரிமை
விலாவணை
|
இதன்கண்: உதயணகுமரன்
வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு சென்ற செய்தியை வராகன் வந்து கூறக் கேட்ட
பிரச்சோதன் மன்னன் கடுஞ்சினங் கோடலும், அமைச்சன் தேற்றுதலும், அரசன்
இச்செய்தியைப் பெருந்தேவி முதலியோர்க்கு உணர்த்துதலும், அம்மகளிர் பெரிதும்
வருந்துதலும் பிறவும் கூறப்படும். |
|
|
செய்வதை
அறியார் ஆகிப்
பல்அவர்
கைவிரல் பிசைந்து பைஎன
வருவழி
வில்கைக் கொண்டவன் விடுக்கப்
பட்ட
வல்வினைக் கொடுந்தொழில் வராகன்
வந்துதன் 5
கோமகன் இருந்த கோயில்
நெடுங்கடைத்
தோரணக் கந்தின் தாள்முதல்
பொருந்திக்
கடிகமழ் நறுந்தார்க் காவலன்
குறுகி
அடியுறை அருள்மொழி யான்பணிந்து
உரைப்பச்
செவ்வி அறிந்து நொவ்விதின்
வருகஎனக் 10
கோல்தொழில் அவன்குக் கூறினன் நிற்ப |
உரை
|
|
|
ஈர்இதழ்த் தாரோய் இற்றை
நாளால்
காரொடு உறந்தஇக் கடுவளி
நிமித்தம்
ஊரொடு உறந்த உறுகண்
காட்டி
இன்னா இன்ப நின்வயின்
தரும்எனத் 15 தொன்நூல்
ஆளன் தோன்றக் கூற |
உரை
|
|
|
இன்னா இன்பத்து இயற்கை
என்என
மன்னவன் வினாய மாத்திரைக் கண்ணே |
உரை
|
|
|
செறிஇலைப் பொன்குழை சிறப்பொடு
தூக்கிய
சிறுதுளைக் காதின் செங்கன்
செந்நோக்கு 20
அருளொடு படாஅ வறிதுஎழு
சினத்தன்
ஆர மார்பன் அருமறைப்
பள்ளியுள்
உற்றது கூறும் கொற்ற
வாயிலன்
கோலொடும் வாளொடும் கூப்பிய
கையன்
முன்பணிந்து இறைஞ்சிய தன்மை
கண்டே 25 செந்தா
மரைக்கணின் செவ்விதின்
நோக்கி
வந்தது கூறுஎன வணங்கி வாய்புதைத்து |
உரை
|
|
|
அந்தர விசும்பினும் அணிநில
வரைப்பினும்
பெண்நேர் உருவம் பிறர்தமக்கு
இல்லா
நுண்ஏர் மருங்கினும் அடித்திஎம்
பெருமான் 30 வடிவேல்
தடங்கண் வாசவ தத்தைக்கு
அடிவழிப் படூஉம் உரிமையுள்
கம்மியன்
வல்வில் இளையன் வராகன்
என்போன்
சொல்லுவது உண்டுஎனச் செவ்வி
வேண்டி
நின்றனன் பல்லாண்டு என்றவன் இறைஞ்ச |
உரை
|
|
|
35 அகன்மொழி தெரியும்
அருமறைப்
பொழுதும் மகள்மொழி
அல்லது மற்றைய
கேளா
இயற்கையன் ஆதலின் பெயர்த்துப்பிறிது
உரையான்
வருக மற்றவன் வல்லிரைந்து என்றலின் |
உரை
|
|
|
ஆணை
வேந்தன் அருங்கல நிதியம் 40
பேணாது பிழைத்த காவ
லாளன்
திருத்தகை மார்பன்கு உரைப்பதுஒன்று
உள்ளான்
நின்றனன் இமைப்பிடைச் சென்றனன் உணர்த்தக் |
உரை
|
|
|
கோயிற்கு ஓதிய கோலம்
உடைத்தாய்
வாயிலும் தகைப்பும் வகைஅமைத்து
இயற்றிய 45 முளைக்கோல்
பெருந்திரை வளைத்த
வட்டத்து
நிலாவெண் மாடமொடு உள்ளறை
சூழ்ந்த
உலாவும் மண்டபத்து உலாவுதல்
இன்றி
அங்கண் ஞாலத்து அழல்உமிழ்ந்து
இமைக்கும்
செங்கதிர்ச் செல்வனின் சீர்பெறத்
தோன்றிச் 50 சீயம் சுமந்த
செம்பொன் ஆசனத்து
ஆய்மணி அணைசார்ந்து அரத்தம்
மீக்கோள்
தாள்முதல் லசைத்துஓர் தாமரைக்
கையன்
இருந்த மன்னவன்கு எழுகோல்
எல்லையுள்
பொருந்தல் செல்லாது புக்கவன் இறைஞ்ச |
உரை
|
|
|
55 வண்ணமும் வடிவும்
நோக்கி மற்றுஅவன்
கண்ணி வந்தது கடுமை
சேர்ந்ததுஎன்று
எண்ணிய இறைவன் இருகோல்
எல்லையுள்
துன்னக் கூஉய் மின்னிழை
பக்கம்
மாற்றம் உரையென மன்னவன் கேட்ப
60 இருநில மடந்தை திருமொழி
கேட்டுஅவள்கு
எதிர்மொழி கொடுப்போன் போல இறைஞ்சப் |
உரை
|
|
|
பின்னும் தானே மன்னவன்
வினவ
மறுமொழி கொடாஅ மம்மர்
கண்டுஅவன்
உறுமொழி கேட்கும் உள்ளம் ஊர்தர
65 நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது
கூறுஎன்று
ஆருயிர்க்கு அபயம் கோமான் கொடுப்ப |
உரை
|
|
|
எரியுறு மெழுகின் உருகிய
முகத்தன்
ஆர மார்பநின் அருள்வகை
ஆம்கொல்
கார்முகத்து எழுந்தது கடுவளி,
வளிஎன
70 நகைத்தொழில் அறியா நன்அகர்
வரைப்பகம்
புகைக்கொடி சுமந்து பொங்குஎரி
தோன்றப்
புறமதில் சேரியும் குறுகுதற்கு
அரிதாக்
காற்றும் எரியும் கலந்துடன்
தோன்ற
எப்பால் மருங்கினும் மப்பால்
மலைக்குநர்த் 75 தப்புதல்
அல்லது மிக்குயல் காணேம் |
உரை
|
|
|
கூற்றும் அஞ்சுநின் ஆற்ற
ஆணை
உரைப்பவும் ஒழியாது தலைத்தலை
சிறப்பநின்
அடிநிழல் வட்டம் அடையத்
தரூஉம்
கடிஅரண் இன்மையின் கையறன்வு
எய்தி 80 வெம்முரண் வேழத்து
வெஞ்சினம்
அடக்கிய
உள்முரண் அறாஅ வுதயண
குமரனொடு
உடன்பிடி ஏற்றல் உற்றனெம்
ஆகித்
தடம்பெருங் கண்ணியைத் தலைவயின்
பணிந்துஇரந்து
ஏற்றினம் ஏற்றலும் காற்றெனக் கடாஅய் |
உரை
|
|
|
85 எம்மொடு படாஅன் இந்நகர்
குறுகான்
தன்நகர்க் கெடுத்த தருக்கினன்
ஆதலின்
ஆயிரத்து ஐவர் காவல்
காளையர்
மாஇரு ஞாலத்து மன்னுயிர்
உண்ணும்
கூற்றெனத் தொடர வேற்றுமுன் விலங்கி
90 வயவர் என்றியாம் வகுக்கப்
பட்டோர்
பயவர் அன்றிப் பணிந்தவர்
தொலைய
வென்றி எய்திக் கொன்றுபலர்
திரிதரப்
பின்றையும் நின்றியான் பிடிப்பின் செல்உழி |
உரை
|
|
|
அடுத்த காதல் அணங்கைத் தந்துஅவன்
95 விடுக்கப் போந்தனென் மீண்டுஇது
கூறுஎனத்
தடக்கை கூப்பிநின் அடித்திசைக்கு
இறைஞ்ச
ஒழிந்துயான் வந்தனென் நிகழ்ந்ததை
நினைப்பினோர்
மாயம் போலும் காவல அருளென |
உரை
|
|
|
உரைத்த மாற்றம் உணரக் கேட்டே
100 செருச்செய் நெடுங்கண் தீயெனச்
சிவப்பப்
பிரச்சோ தனன்எனும் பெரும்பெயர்
விளக்கம்
மகிழ்ச்சி எய்தி வத்தவன்
தெளிந்த
இகழ்ச்சி அளற்றுள் இறங்கிற்று
இன்றெனச்
சுற்ற மாக்களைச் சுடுவான் போலப்
105 பொற்றார் மார்பன் பொங்குபு
வெகுண்டு |
உரை
|
|
|
முகைநகை முத்தொடு தகைமுடி
தயங்க
அருவரை அகலத்து ஆரம்
புரளத்
திருமுடி அண்ணல் தீப்படச்
சீறி
எழுஉறழ் திணிதோள் எடுத்தனன் ஓச்சிப்
110 பொழிமணித் திண்தூண் பொறிபடப்
புடைத்து
மாற்றுச் சிங்கத்து மறக்குரல்
கேட்ட
ஏற்றுச் சிங்கத்தின் இடித்தெழுந்து உரறிக் |
உரை
|
|
|
கொடியணி தேரும் குதிரையும்
யானையும்
வடிவேல் இளையரும் வல்விரைந்து ஓடி 115
எய்கணை இயற்கை இயற்றமை
இரும்பிடி
கையகம் புக்கது அன்றிஇவ்
வையகத்து
அறத்தோடு புணர்ந்த துறைப்புனல்
ஆட்டத்து
அற்றமும் பிறவும் ஒற்றுவன
நோக்கி
வள்ளி மருங்கின் வயங்குஇழைத் தழீஇ 120
எள்ளி இறந்த இன்னா
மன்னனைப்
பற்றுபு தம்எனப் படையுறப் படுத்து |
உரை
|
|
|
ஞாலந் தரும்பொருள் இயற்பட
நாடிய
சாலங் காயனைத் தலைக்கை
யாக்கப்
பல்பொருள் பொதிந்த பயந்தெரி பனுவல்
125 பரதகன் தன்னொடு பயந்தீர்
நண்பின்
மந்திர மாக்களும் அந்த
ணாளரும்
அகத்தால் குழீஇய அவையன்
ஆதலின்
முகைத்தார் வேந்தன்கு முகத்துஎழு
பெருஞ்சினம்
புனல்படு நெருப்பின் பொம்மென உரறி
130 ஆறிய வண்ணம் அணிமுகம்
நோக்கித்
தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப |
உரை
|
|
|
உளைவன செய்த உதயண
குமரனைத்
தளைவயின் அகற்றலும் கிளைவயின்
பெயர்த்தலும்
ஆர மார்பஅஃது யாவரும்
அறிவர் 135 வருமுலை ஆகத்து
வணங்குகொடி
மருங்கில்
திருமகள் தன்வயின் தெரிந்தனை
காணில்
குலத்தினும் குணத்தினும் நலத்தகு
நண்பினும்
நிலத்தினில் நின்னொடு நிகர்க்குநன்
ஆதலின்
மேல்வகை விதியின் விழுமியோர் வகுத்த
140 பால்வகை மற்றிது பழிக்குநர்
இல்லை
ஆறுஎன அருளா அண்ணல்மற்
றதுநீ
வேறுஎன அருளிய வேட்கை
உண்டெனின்
முன்னிலை முயற்சியின் அன்றி
மற்றுஇனிப்
பின்னிலை முயற்சியில் பெயர்த்தனம்
தருதல் 145 திருவளர்
மார்ப தெளிந்தனை
ஆகென
ஒருபேர் அமைச்சன் உள்விரித்து உரைப்ப |
உரை
|
|
|
ஏறிநீர் வரைப்பின் எப்பொருள்
ஆயினும்
என்னின் அறிவோர் இல்லென
மதிக்கும்
மன்னருள் மன்னன் மனத்தில்
தேறி 150 இடத்தோள்
அன்ன விடற்குஅருங்
காதல்
உரிமைத் தேவியர்க்கு ஒருமீக்
கூரிய
பட்டத் தேவிக்குப் பட்டதை
எல்லாம்
ஏனோர் உணர்த்துதல் நீக்கிக்
கோமான்
தானே உணர்த்தும் தன்மையன் ஆகி |
உரை
|
|
|
155 அரசு கொற்றத்து அருங்கடம்
பூண்ட
முரசுஎறி வள்ளுவ முதியனைத்
தரீஇக் கார்பனி
துளித்துக் கதிர்கண்
புதைஇய
வார்பனி மாலைநம் வளநகர்
புகுதல்
புனலாடு விழவில் பொலிவுஇன்று ஆதலின்
160 கோலம் குயிற்றிக் கோடணை
இயற்றிக்
காலை புகுதல் காவலன்
பணிஎனத்
துறைநகர் அறியப் பறைஎடுத்து அறைகஎனச் |
உரை
|
|
|
செல்சுடர் அந்தி நல்லியல்
ஓம்பிப்
பள்ளிக் கோயிலுள் பல்இயம் எடுப்ப 165
ஆய்பூஞ் சேக்கையுள் அருமணி
சுடரப்
பாயல் கோடல் பலர்அறி
வுறீஇய
கைக்கோல் இளையரும் காஞ்சுகி
முதியரும்
அகக்கோள் ஆளரொடு அருமறை யாகப்
பண்டுஇவண் புகூஉம் பொங்குபுனல்
விழவுஅணி 170 அன்றுஅவண் இலனாய்
ஆவித்து இழிந்த
இந்திர குமரன் இயற்கையன்
ஆகிக்
கஞ்சிகைச் சிவிகையுள் கரணத்து ஒடுங்கி |
உரை
|
|
|
வேண்டுஇடம் தோறும் தூண்டுதிரிக்
கோளீஇக்
கைவயில் கொண்ட நெய்அகல்
சொரியும் 175 யவனப்
பாவை அணிவிளக்கு
அழலத்
திருந்துசா லேகமொடு பொருந்துகதவு
ஒற்றிப்
பளிக்குமணி இழிகைப் பவழக்
கைவினைப்
புலிக்கால் அமளிப் பொங்குபட்டு
அசைஇ
எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம்
விரித்துக் 180 கலத்தின்
அல்லது காலின்
வாரா
நலத்தகு பல்படை அழற்றல்கு
உரியவை
ஆய்வனர் படுத்த அம்பூம் பள்ளியுள் |
உரை
|
|
|
பெருமூ
தாட்டியர் பேணுவனர்
சூழத்
திருமா தேவி அருநகர் உற்ற 185
ஆகுலப் பூசலும் அழலும்
மற்றிவை
காவலன் அறிந்த கருத்தினன்
ஆகிஎன்
வாசவ தத்தையை வலிதில்கொண்டு
ஏகினும்
தீது நிகழினும் ஏதம்
இல்என
நினைப்புஉள் உறுத்த நெஞ்சினள் ஆகி 190
மனத்துள் ஓர்க்கும் மம்மர்
தீர
அருங்கடி காவலர் அஞ்சினர்
எதிர்கொள
இருஞ்சின வேந்தன் பெருஞ்சினம்
அகற்றி
வாயிலுள் வரும்இடத்து எதிர்கொளல்
பொருட்டாக்
கோயிலுள் இருந்த கோப்பெருந் தேவிக்குப் |
உரை
|
|
|
195 பொலம்பூங் குடத்தில்
போற்றித் தந்த
தலைப்பூ நறுநீர் சிறப்பு
முந்துறீஇத்
தருமணல் ஞெமிரிய திருநகர்
முற்றத்து
வெண்முகில் பொடிக்கும் வெய்யோன்
போலக்
கைபுனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி
200 அம்பூம் தானை அடிமுதல்
தடவர
வெம்போர் வேந்தன் மெல்என இழிந்து |
உரை
|
|
|
நெறிவெண் திங்கள் அகடுஉறத்
தழுவும்
கடிவெண் மாடத்துக் கன்னிஅம்
கடிமனை இல்லாத்
தன்மையில் புல்எனத் தோன்றும்
205 பையுள் செல்வத்துக் கையறவு
எய்திப்
பொன்னும் மணியும் புகர்அறப்
புனைந்த
தொன்நாடு அமரத் துணைமுதல்
பொறித்த
தோடுஅமை கொளுவத்து ஊடுற
வளைஇத்
தாழ்காழ் நகையொடு தாமம் துயல்வரும்
210 மாசுஇல் திண்நிலை வாயில்
பேர்அறைப்
பள்ளி மண்டபத்து ஒள்ஒளி
கிளரத்
திருவுகொள் உரோணி உருவுநலம்
விரும்பிய
விரிகதிர்ச் செல்வனின் வியப்பத் தோன்றிப் |
உரை
|
|
|
பாயல் கொள்ளான் பட்டத் தேவி
215 சாயல் செல்வத் தலைஅளித்து
ஓம்பி
அணிஇயல் அமிர்தம் மாற்றிய
பின்அவள்
தெளியக் காட்டும் தெரிவினன்
ஆகிப்
பூங்கொடி புனைந்த வீங்குமுலை
ஆகத்து
வாங்கமைப் பணைத்தோள் வாசவ
தத்தையை 220
நல்லியாழ் நவிற்றிய நளிமணிக்
கொடும்பூண்
உறுவரை மார்பின் உதயண
குமரன்
மறுவில் தொன்று மனைவளம்
தரூஉம்
செல்வி ஆகச் சிறப்பொடு
சேர்த்திஅவன்
நாட்டகம் புகுத்தற்கு வேட்டது என்மனன்
225 ஒண்குழை மடவோய் உவத்தி யோஎன |
உரை
|
|
|
அருமையில்
பெற்றநும் அடித்தி
தன்வயின்
திருமணச் சூழ்ச்சி எழுமைத்து
ஆயினும்
ஏதம் இன்றால் இன்பம்
பயத்தலின்
யானைக்கு எழுந்த வெஞ்சினம் அடக்கிநின்
230 தானைத் தலைத்தாள் தந்த
ஞான்றவன்
நிலையில் திரியா இளமைக்
கோலம்
உயர்பில் திரியாது ஒத்துவழி
வந்த
மகளுடைத் தாயர் மனத்துஅகம்
புகற்றலின்
யானும் அன்றே பேணினென் அடிகள்
235 மானம் இல்லை மற்றவன் மாட்டென |
உரை
|
|
|
உவந்த
ஒள்ளிழை உள்ளம்
நோக்கி
நிகழ்ந்தது இற்றென நெருப்பு
நுனைஉறீஇச்
சுடுநா ராசஞ் செவிசெறித்
தாங்கு
வடிவேத் தானை வத்தவன் தன்னொடு
240 பாவை பிரிவினைக் காவலன் உணர்த்தலின் |
உரை
|
|
|
இசைகொள் சீறியாழ் இன்னிசை
கேட்ட
அசுண நன்மா அந்நிலைக்
கண்ணே
பறைஒலி கேட்டுத்தன் படிமறத்
ததுபோல்
நீலத்து அன்ன கோலத் தடம்கண்
245 முத்துறழ் ஆலி தத்துவன
தவழப்
பெறலரும் என்மகள் பிரிந்தனன்
நம்மெனக்
கூறிய கிளவி கூற்றுவன்
இமிழ்த்த
பாசம் போலப் பையுள்
செய்ய
அலமந்து அழூஉம் அஞ்சில் ஓதியை |
உரை
|
|
|
250 முகைமலர்ப் பைந்தார் குழைய
முயங்கி
மடவை மன்ற மடவோய்
மண்மிசை
உடைவயிற் பிரியா உறைநரும்
உளரோ
இற்றும் கேண்மதி முற்றுஇழை
மகளிர்
தத்துநீர்ப் பெருங்கடல் சங்குபொறை உயிர்த்த
255 நித்திலத்து அன்னர் நினைந்தனை
காண்என
ஆர்வக் காதலன் காரணக்
கட்டுரை
இகப்ப விடாஅன் தெளிப்பத் தேறிக் |
உரை
|
|
|
கயல்புரை கண்ணி இயல்புகிளந்து
ஏத்திப்
பொன்அணி நகரமொடு தம்மனை புலம்ப
260 வான்மதி இழந்த மீன்இனம்
போலப்
பொலிவின்று ஆகிப் புல்என்
கோலமொடு
கலாவேல் காவலன் மடமகள்
காணாது
விலாவித் தன்றால் விழவுஅணி நகர்என்
|
உரை
|
|