முகப்பு |
தலைவன் |
2. குறிஞ்சி |
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! |
||
காமம் செப்பாது, கண்டது மொழிமோ: |
||
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், |
||
செறி எயிற்று, அரிவை கூந்தலின் |
||
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக |
14. குறிஞ்சி |
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த |
||
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப் |
||
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு |
||
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில், |
||
'நல்லோள் கணவன் இவன்' எனப் |
||
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே. |
உரை | |
'மடன்மா கூறும் இடனுமார் உண்டே' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். 'மடலேறுவல்' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர் |
17. குறிஞ்சி |
மா என மடலும் ஊர்ப; பூ எனக் |
||
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப; |
||
மறுகின் ஆர்க்கவும் படுப; |
||
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே. |
உரை | |
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார் |
19. மருதம் |
எவ்வி இழந்த வறுமையர் பாணர் |
||
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று |
||
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து |
||
எல்லுறும் மௌவல் நாறும் |
||
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? |
உரை | |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர் |
29. குறிஞ்சி |
நல் உரை இகந்து, புல் உரை தாஅய், |
||
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல |
||
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, |
||
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும் |
||
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு |
||
மகவுடை மந்தி போல |
||
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார் |
32. குறிஞ்சி |
காலையும், பகலும், கையறு மாலையும், |
||
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் |
||
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்: |
||
மா என மடலொடு மறுகில் தோன்றித் |
||
தெற்றெனத் தூற்றலும் பழியே; |
||
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே. |
உரை | |
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார் |
40. குறிஞ்சி |
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? |
||
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? |
||
யானும் நீயும் எவ் வழி அறிதும்? |
||
செம் புலப் பெயல் நீர் போல |
||
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. |
உரை | |
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், 'பிரிவர்' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார் |
56. பாலை |
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் |
||
குளவி மொய்த்த அழுகற் சில் நீர் |
||
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், |
||
வருகதில் அம்ம, தானே; |
||
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே! |
உரை | |
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார் |
58. குறிஞ்சி |
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக |
||
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; |
||
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் |
||
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் |
||
வெண்ணெய் உணங்கல் போலப் |
||
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! |
உரை | |
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
63. பாலை |
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச் |
||
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு |
||
அம் மா அரிவையும் வருமோ? |
||
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே! |
உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார் |
70. குறிஞ்சி |
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் |
||
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; |
||
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; |
||
சில மெல்லியவே கிளவி; |
||
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே. |
உரை | |
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார் |
71. பாலை |
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே- |
||
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை, |
||
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
||
கல் கெழு கானவர் நல்குறு மகளே. |
உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி |
72. குறிஞ்சி |
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து |
||
எல்லாரும் அறிய நோய் செய்தனவே- |
||
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் |
||
பரீஇ வித்திய ஏனல் |
||
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! |
உரை | |
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார் |
95. குறிஞ்சி |
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி |
||
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற் |
||
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள் |
||
நீர் ஓரன்ன சாயல் |
||
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
99. முல்லை |
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, |
||
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து, |
||
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே? |
||
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை |
||
இறைத்து உணச் சென்று அற்றாங்கு, |
||
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே. |
உரை | |
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார் |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
101. குறிஞ்சி |
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும், |
||
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், |
||
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே- |
||
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி, |
||
மாண் வரி அல்குல், குறுமகள் |
||
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே. |
உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன் |
116. குறிஞ்சி |
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல், |
||
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை |
||
நுண் மணல் அறல் வார்ந்தன்ன, |
||
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது - இளங்கீரன். |
119. குறிஞ்சி |
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை |
||
கான யானை அணங்கியா அங்கு- |
||
இளையள், முளை வாள் எயிற்றள், |
||
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார் |
120. குறிஞ்சி |
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு, |
||
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு |
||
அரியள் ஆகுதல் அறியாதோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர் |
128. நெய்தல் |
குண கடல் திரையது பறை தபு நாரை |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை |
||
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் |
||
சேயள் அரியோட் படர்தி; |
||
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர் |
129. குறிஞ்சி |
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! |
||
புலவர் தோழ! கேளாய் அத்தை; |
||
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் |
||
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக் |
||
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் |
||
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
132. குறிஞ்சி |
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; |
||
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- |
||
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க் |
||
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி |
||
தாய் காண் விருப்பின் அன்ன, |
||
சாஅய் நோக்கினள்-மாஅயோளே, |
உரை | |
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார் |
136. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் |
||
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை |
||
குளகு மென்று ஆள் மதம் போலப் |
||
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
137. பாலை |
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப, |
||
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து |
||
இரவலர் வாரா வைகல் |
||
பல ஆகுக!-யான் செலவுறு தகவே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
142. குறிஞ்சி |
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
||
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
||
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
||
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
||
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |
147. பாலை |
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன |
||
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, |
||
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல, |
||
இன் துயில் எடுப்புதி-கனவே!- |
||
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே. |
உரை | |
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன் |
151. பாலை |
வங்காக் கடந்த செங் கால் பேடை |
||
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது, |
||
குழல் இசைக் குரல குறும் பல அகவும் |
||
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது, |
||
'மறப்பு அருங் காதலி ஒழிய |
||
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே. |
உரை | |
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி |
156. குறிஞ்சி |
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! |
||
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து |
||
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் |
||
படிவ உண்டிப் பார்ப்பன மகனே! |
||
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் |
||
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் |
||
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே. |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் |
162. முல்லை |
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் |
||
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- |
||
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் |
||
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; |
||
நகுவை போலக் காட்டல் |
||
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? |
உரை | |
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன். |
165. குறிஞ்சி |
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, |
||
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை- |
||
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம் |
||
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள் |
||
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. |
உரை | |
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர். |
168. பாலை |
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை |
||
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து |
||
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன |
||
நறுந் தண்ணியளே, நல் மா மேனி; |
||
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் |
||
மணத்தலும் தணத்தலும் இலமே; |
||
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார் |
173. குறிஞ்சி |
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த |
||
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப் |
||
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு, |
||
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப, |
||
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று, |
||
அவள் பழி நுவலும், இவ் ஊர்; |
||
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே. |
உரை | |
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன் |
182. குறிஞ்சி |
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல் |
||
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி, |
||
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, |
||
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி, |
||
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ- |
||
கலிழ் கவின் அசைநடைப் பேதை |
||
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே? |
உரை | |
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன் |
184. நெய்தல் |
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; |
||
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே- |
||
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு, |
||
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்- |
||
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை |
||
நுண் வலைப் பரதவர் மட மகள் |
||
கண் வலைப் படூஉம் கானலானே. |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் |
189. பாலை |
இன்றே சென்று வருதும்; நாளைக் |
||
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக, |
||
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி |
||
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப, |
||
கால் இயல் செலவின், மாலை எய்தி, |
||
சில் நிரை வால் வளைக் குறுமகள் |
||
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே. |
உரை | |
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன். |
199. குறிஞ்சி |
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று |
||
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க் |
||
கை வள் ஓரி கானம் தீண்டி |
||
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் |
||
மை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
||
இன்றை அன்ன நட்பின் இந் நோய் |
||
இறு முறை என ஒன்று இன்றி, |
||
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே. |
உரை | |
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர் |
206. குறிஞ்சி |
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி |
||
அன்ன இனியோள் குணனும், இன்ன |
||
இன்னா அரும் படர் செய்யும்ஆயின், |
||
உடன் உறைவு அரிதே காமம்: |
||
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே! |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஐயூர் முடவன் |
209. பாலை |
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
||
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
||
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
||
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
||
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
||
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. |
உரை | |
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
222. குறிஞ்சி |
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; |
||
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; |
||
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், |
||
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட |
||
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் |
||
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் |
||
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. |
உரை | |
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார் |
233. முல்லை |
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி |
||
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் |
||
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன |
||
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு |
||
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் |
||
வரைகோள் அறியாச் சொன்றி, |
||
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன் |
235. பாலை |
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் |
||
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் |
||
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி |
||
மரையினம் ஆரும் முன்றில் |
||
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. |
உரை | |
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன். |
237. பாலை |
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, |
||
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய |
||
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் |
||
சேய அம்ம, இருவாம் இடையே; |
||
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, |
||
கோட் புலி வழங்கும் சோலை |
||
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? |
உரை | |
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை |
250. பாலை |
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு, |
||
இரலை நல் மான் நெறிமுதல் உகளும் |
||
மாலை வாரா அளவை, கால் இயல் |
||
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப் |
||
பொரு கயல் முரணிய உண்கண் |
||
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே. |
உரை | |
தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன் |
256. பாலை |
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் |
||
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, |
||
மான் ஏறு உகளும் கானம் பிற்பட, |
||
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் |
||
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் |
||
சொல்லாமுன்னர், நில்லா ஆகி, |
||
நீர் விலங்கு அழுதல் ஆனா, |
||
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. |
உரை | |
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. |
267. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் |
||
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின் |
||
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன |
||
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் |
||
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய, |
||
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் |
||
உறல் முறை மரபின் கூற்றத்து |
||
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே. |
உரை | |
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார் |
270. முல்லை |
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென |
||
வீழ் உறை இனிய சிதறி, ஊழின் |
||
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் |
||
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே, |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
இவளின் மேவினம் ஆகி, குவளைக் |
||
குறுந் தாள் நாள்மலர் நாறும் |
||
நறு மென் கூந்தல் மெல் அணையேமே. |
உரை | |
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான். |
272. குறிஞ்சி |
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட |
||
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த |
||
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த |
||
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர் |
||
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் |
||
குருதியொடு பறித்த செங் கோல் வாளி |
||
மாறு கொண்டன்ன உண்கண், |
||
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே! |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன் |
274. பாலை |
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து |
||
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, |
||
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, |
||
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் |
||
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் |
||
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு |
||
மணி மிடை அல்குல் மடந்தை |
||
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே. |
உரை | |
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன் |
276. குறிஞ்சி |
பணைத் தோட் குறுமகள் |
||
பாவை தையும், |
||
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள் |
||
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய |
||
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார், |
||
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து |
||
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்? |
||
பெரிதும் பேதை மன்ற- |
||
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே! |
உரை | |
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கூழிக் கொற்றன் |
280. குறிஞ்சி |
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என் |
||
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் |
||
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம் |
||
ஒரு நாள் புணரப் புணரின், |
||
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே. |
உரை | |
கழற்றெதிர்மறை -நக்கீரர் |
286. குறிஞ்சி |
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று |
||
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில் |
||
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல், |
||
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி |
||
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. |
உரை | |
இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.- எயிற்றியனார் |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |
312. குறிஞ்சி |
இரண்டு அறி கள்வி நம் காதலோளே: |
||
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் |
||
முள்ளூர்க் கானம் நாற வந்து, |
||
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; |
||
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, |
||
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, |
||
அமரா முகத்தள் ஆகித் |
||
தமர் ஓரன்னள், வைகறையானே. |
உரை | |
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர் |
323. முல்லை |
எல்லாம் எவனோ? பதடி வைகல்- |
||
பாணர் படுமலை பண்ணிய எழாலின் |
||
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, |
||
பெய்த புலத்துப் பூத்த முல்லைப் |
||
பசு முகைத் தாது நாறும் நறு நுதல் |
||
அரிவை தோள்-அணைத் துஞ்சிக் |
||
கழிந்த நாள் இவண் வாழும் நாளே, |
உரை | |
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார் |
337. குறிஞ்சி |
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே |
||
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே; |
||
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின; |
||
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என |
||
யான் தன் அறிவல்; தான் அறியலளே; |
||
யாங்கு ஆகுவள்கொல் தானே- |
||
பெரு முது செல்வர் ஒரு மட மகளே? |
உரை | |
தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை |
347. பாலை |
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் |
||
குமரி வாகைக் கோலுடை நறு வீ |
||
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் |
||
கான நீள் இடை, தானும் நம்மொடு |
||
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், |
||
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் |
362. குறிஞ்சி |
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! |
||
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்; |
||
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, |
||
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி, |
||
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய |
||
விண் தோய் மா மலைச் சிலம்பன் |
||
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே? |
உரை | |
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது. - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் |
371. குறிஞ்சி |
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும், |
||
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி |
||
அருவியின் விளைக்கும் நாடனொடு, |
||
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே. |
உரை | |
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன் |
376. நெய்தல் |
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில் |
||
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, |
||
வேனிலானே தண்ணியள்; பனியே, |
||
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, |
||
அலங்கு வெயில் பொதிந்த தாமரை |
||
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசிக் கொற்றன் |
398. பாலை |
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத் |
||
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, |
||
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் |
||
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய |
||
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, |
||
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, |
||
மெய்ம் மலி உவகையின் எழுதரு |
||
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே. |
உரை | |
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப |
400. முல்லை |
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, |
||
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று, |
||
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, |
||
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப் |
||
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! |
||
இன்று தந்தனை தேரோ- |
||
நோய் உழந்து உறைவியை நல்கலானே? |
உரை | |
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார் |