| 37. விழாக் 
 கொண்டது | 
 
 | இதன்கண் : பிரச்சோதனன் தன் 
 மக்கள் உதயணன் பால் கல்வி பயின்று வல்லுநராயிருத்தலை அறிந்து, அவன் நன் னாளிலே 
 அரங்கேற்றுவித்தலும், வாசவதத்தை பாழாக கேறுதலும், இம்மாணவரை அவையோர் 
 பாராட்டுதலும்  பிரச்சோதனனும்
 கோப்பெருந்தேவியும் பிறரும் மகிழ்தலும்மன்னவன் 
 உதயணனைப் பாராட்டி அவனை அவன் நகர்க்குப் போக்க நினைதலும்,
 யூகியின் சூழ்ச்சியாலே 
 பாகீரதி என்பவள் தெய்வமேறியவள் போன்று நடித்துக் கூறிய கூற்றால் நகரமாந்தர் 
 அஞ்சுதலும், மன்
 னன் தெய்வக்குறை தீர்தற்கு நீர் விழாச் செய்யத் தொடங்குதலும் 
 பிறவும் கூறப்படும்
 | 
 
 |  | 
 
 |  |  கோவலர் கைதொழக் கோயில் 
 போகிவேல்கெழு முற்றமொடு வீதியின் 
 நீங்கிக்
 குஞ்சரச் சேரித் தன்னகர் 
 எய்தி
 அன்றை வைகல் சென்ற பின்னர்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 5 
 
 
 
 10
 
 
 
 
 15
 |  முரசுகடிப்பு இகுத்த மூரி முற்றத்துஅரசிறை கொண்ட அகன்கண் 
 வாரியுள்
 கையார் கடகத்துக் கதிர்வாள் 
 கச்சையர்
 ஐஆ யிரவர் அரச 
 குமரரொடு
 பொன்தலை யாத்த பொதியில் 
 பிரம்பின்
 வண்ணச் 
 செங்கோல் வலவயின் 
 பிடித்த
 எண்ணூற்று அறுவர் இளங்கிடை 
 காப்பரொடு
 புறஞ்சுற் றமைந்த பிறங்குகடைப் 
 படுகால்
 நித்திலந் 
 தொடரிய நிகரில்கம் 
 மத்துச்
 சித்திரம் பயின்ற செம்பொன் 
 விதானத்துச்
 சந்தனப் பீடிகைச் சார்வணை 
 யேறிப்
 பன்மயிர்க் கவரியோடு பரிசனஞ் 
 சுற்றப்
 பெருமகன் இருந்த திருமலி அவையத்துக்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 20
 
 
 
 
 25
 |  கொற்ற வேந்தன் குடிகெழு 
 குமரரைக்கற்றவை காட்டும் வத்தவர் 
 கோஎனப்
 பல்பெருங் 
 கேள்வி படைத்தோர் 
 அன்ன
 கல்வி மாந்தர் கலித்த 
 கௌவையில்
 ஆப்புறு பாடமொடு அருத்தங் 
 கூறி
 நாக்கொள் கேள்வி நவிற்றிக் 
 காட்டி
 மண்டல மருங்கில் கொண்டகம் 
 புகுந்து
 படைகெழு 
 தெய்வம் புகலப் பலிவகுத்து
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 30
 
 
 
 
 35
 
 
 
 
 40
 |  இடைநாட் 
 பிறையின் ஏற்றிய 
 திருவிற்கண்ணால் உறுத்துக் கடவதிற் 
 றாங்கி
 எண்ணால் அரணமும் ஈரெண் 
 கரணமும்
 துன்னரும் பாசமொடு தொடங்குபு 
 தோன்றி
 அரிதியல் 
 சாரியை அந்தரத்து 
 இயக்கமும்
 பொருவின் நாழிகை பூணு 
 மாறும்
 செருவாள் ஆட்டுஞ் சேடகப் 
 பிண்டியும்
 சாரியை விலக்கும் வேல்திரி 
 வகையும்
 இடுக்கண் போதின் ஏனேமப் 
 பூமியுள்
 வகுத்த வாயில் 
 வகைவகை இவையென
 ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங்கு 
 இருக்கையும்
 செருக்கொள் யானை மருப்பிடைத் 
 திரிவும்
 தாழாச் சிறப்பிற் பாழியிற் 
 பயின்ற
 காலாள் கரும விகற்பமுங் காட்டிக்
 கருவித் தாக்கினுங் காலாள் 
 சுற்றினும்
 தனியின் ஆயினுந் தானையொடு ஆயினும்
 புகவும் போக்கும் பொச்சாப்பு இன்றிப்
 பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 45
 
 
 
 
 50
 
 
 
 
 55
 |  வண்பரிப் புரவியும் வான்நெடுந் 
 தேரும்அண்ணல் 
 யானையும் பண்ணுறுத்து 
 ஏறி
 இலைய இனப்பரி கொளீஇச் 
 சிலையின்
 மதியோர் புகழ்ந்த மரபியல் 
 வழாமை
 நுதியமை நுண்படை நூல்வழிச் 
 சிதறி
 மழைத்துளி படினும் வான்துகள் 
 சூழினும்
 விலக்கித் 
 தவிர்க்கும் விற்றொழி 
 லுள்ளிட்டு
 இலக்கத் திண்படை யேறுபல 
 காட்டலும்
 தலைத்தோர் யானைக்கும் தருக்கினர் 
 ஆயினர்
 படைத்தே ராள பாலகர் 
 இவரென
 அவைபுகழ்ந்து எடுத்த வரும்பெறல் 
 கிளவியொடு
 தகைமுடி 
 வேந்தன் தாள்புகழ்ந்து ஏத்தித்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 60
 |  தகைசால் சிறப்பின் தன்னொடு 
 நம்மிடைப்பகைமுத லாகப் பழிதர 
 வந்த
 செற்ற நம்வயின் கொள்ளான் 
 சிறந்த
 சுற்ற மாகச் சூழ்ச்சியின் 
 விளக்கி
 நன்றுணர் 
 விச்சை நம்பியர்க்கு 
 அருளி
 அன்புவழிப் படுத்த அரச 
 குமரற்குக்
 கைம்மாறு 
 இதுவெனக் கடவதி 
 னிறையும்
 செம்மாண் ஆற்றாச் சிறுமையம் ஆதலின்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 65
 
 
 
 
 70
 |  ஒன்பதின் கோடி ஒண்பொருள் 
 கொடுப்பினும்பண்பெனக் கொண்டிவன் பண்டஞ் 
 செய்யான்
 நங்குடித் தலைமை இங்கிவற்கு 
 இயற்றி
 நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் 
 கலந்துஇவன்
 வேண்டியது செய்யு மாண்பல 
 திலமென
 மண்முதல் இழந்தோற்கு மறுமனம் 
 அழித்துத்
 தன்பதிப் 
 புகுந்து தான்மணம் 
 படுகெனக்
 குறையுறு கிளவி முறைபல 
 பயிற்றிச்
 செயப்படு கருமம் செய்ந்நரோடு 
 உசாஅய்
 முயற்சி உள்ளமொடு முந்தவன் போக்கி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 75
 
 
 
 
 80
 |  அவைக்களம் எழுந்து குவைக்களம் 
 புக்குக்குலமகள் பயந்த 
 குடிகெழு குமரர்
 நிலமகள் நயக்கும் நீதிய 
 ராகி
 வெறுமை நீங்கினர் விச்சையின் 
 அமைந்தெனத்
 திருநுதல் ஆயத்துத் தேவியர் 
 நடுவண்
 பெற்ற நாளினும் பெரும்பூண் 
 புதல்வரைக்
 கற்ற 
 நாள்வயின் கலிசிறந்து 
 உரைஇ
 மகிழ்ச்சிக் கிளவி மழையென இசைப்ப
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 85
 |  முகிழ்த்தகை முறுவல் முனிவின்று 
 பயிற்றிக்கடவர் வகுத்த கரும 
 நாளால்
 கடவதை ஆதலின் மடவரல் ஆயத்து
 நங்கை கேள்வியு நல்லவைப் 
 படுக்கென
 வந்துரைத் தனரால் வத்தவன் தமரென
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 90
 
 
 
 
 95
 
 
 
 
 100
 |  வெந்திறல் வேந்தனும் நன்றென 
 அருளிவாயில் கூத்துஞ் சேரிப் 
 பாடலும்
 கோயில் நாடகக் குழுக்களும் 
 வருகென
 யாழுங் குழலும் அரிச்சிறு பறையும்
 தாழ முழவுந் தண்ணுமைக் 
 கருவியும்
 இசைச்சுவை தரீஇ எழுபவும் எறிபவும்
 விசைத்தெறி பாண்டிலொடு வேண்டுவ 
 பிறவும்
 கருவி அமைந்த புரிவளை ஆயமொடு
 பல்லவை இருந்த நல்லா 
 சிரியர்
 அந்தர உலகத்து அமரர் 
 கோமான்
 இந்திரன் மாநகர் இறைகொண் 
 டாங்குப்
 பொருவேல் முற்றத்துப் புரிவனர் 
 புகுதரப்
 பாடல் மகளிர் பல்கல ஒலிப்ப
 ஆடல் மகளிர் ஆயமொடு 
 கெழீஇ
 வேல்வேந்து இருந்த நூல்வேண்டு அவையத்துத்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 105
 
 
 
 
 110
 |  துகிர்த்துலா மண்டபத்து அகிற்புகை 
 கமழக்கண்டங் குத்திய மண்டப 
 எழினியுள்
 தாயுறை வியனகர்த் தமர்பா ராட்ட
 ஆயஞ் சுற்ற வணியிழை 
 புகுதந்து
 ஒலிபெறு கீதத்து ஓதை 
 போகிய
 பலிகெழு நல்யாழ் பாங்குறத் 
 தழீஇக்
 கின்னர கீதத்துக் கேள்வி 
 மாந்தர்
 முன்னுற நின்று மூதறி செவிலிநும்
 மகள்மா ணாக்கி வணங்கும் 
 நும்மென
 அவைப்பரி சாரங் கடத்துளிப் போக்கி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 115
 |  ஐவகைக் கதியும் அற்ற 
 மின்றித்தெய்வ நல்யாழ் திருந்திழை 
 தைவர
 மெய்பனிப் பதுபோன் மொய்யவை 
 மருள
 நாற்பெரும் 
 பண்ணும் எழுவகைப் 
 பாலையும்
 மூவேழ் திறத்தொடு முற்றக் 
 காட்டி
 நலமிகு சிறப்பொடு நல்லவை 
 புகழ
 இயம்வெளிப் படுத்தபின் இசைவெளிப் படீஇய
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 120
 
 
 
 
 125
 
 
 
 
 130
 |  எரிமலர்ச் செவ்வாய் எயிறுவெளிப் படாமைத்திருமலர்த் தாமரைத் தேன்முரன் 
 றதுபோல்
 பிறந்துழி அறியாப் பெற்றித் 
 தாகிச்
 சிறந்தியம்பு இன்குரல் தெளிந்தவண் 
 எழுவச்
 சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் 
 நெகிழ்த்தும்
 குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி 
 நிறுத்தும்
 மாத்திரை கடவா மரபிற்று 
 ஆகிக்
 கொண்ட தானம் கண்டத்துப் 
 பகாமைப்
 பனிவிசும்பு இயங்குநர் பாடோர்த்து 
 நிற்பக்
 கனிகொள் இன்னிசைக் கடவுள் 
 வாழ்த்தித்
 தேவ கீதமொடு தேசிகம் 
 தொடர்ந்த
 வேத இன்னிசை 
 விளங்கிழை பாடத்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 135
 
 
 
 
 140
 |  திருந்திழை மாதர்கொல் தெய்வங் 
 கொல்லெனஇருந்தவர் தெருளார் இசைபுகழ்ந் 
 தேத்தி
 நூலுஞ் செவியும் நுண்ணிதின் 
 நுனித்தே
 யாழும் பாடலும் அற்ற மின்றி
 விலக்கும் விடையும் விதியின் அறிந்து
 துளக்கில் கேள்வித் தூய்மையினும் 
 முற்றி
 வத்தவ நாடன் வாய்மையின் தருக்கும்
 கொற்ற வீணையுங் 
 கொடுங்குழை 
 கொண்டனள
 இறைகெழு குமரரும் ஏனை விச்சைத்
 துறைநெறி போகிய துணிவினர் ஆயினர்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 145
 |  தேயாத் திருவ நீயுந் 
 தேரின்நிலங்கொடை முனியாய் கலங்கொடை 
 கடவாய்
 வேள்வியில் திரியாய் கேள்வியில் 
 பிரியாய்
 இனையோய் தாள்நிழல் தங்கிய 
 நாடே
 வயிர 
 வெல்படை வானவர் 
 இறைவன்
 ஆயிரங் குஞ்சரத்து அண்ணல் 
 காக்கும்
 மீமிசை உலகினுந் தீதிகந்து 
 அன்றெனத்
 தொல்லிசை யாளர் சொல்லெடுத்து ஏத்தப்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 150
 
 
 
 
 155
 |  புகழார் வெய்திய திகழ்முடிச் 
 சென்னியன்ஆசில் பாடல் 
 அமிழ்துறழ் 
 நல்யாழ்க்
 கேள்வி நுனித்த கீத 
 வித்தகத்து
 ஆசா ரியரொடு அரங்கியன் 
 மகளிரை
 ஏடுகோ ளாளர் எனையரென்று 
 எண்ணிப்
 பேரெழுத்து ஓலை பெறுமுறை 
 நோக்கிக்
 கட்டுடைக் 
 கலனும் கதிர்முகத்து 
 ஆரமும்
 பட்டியல் கலிங்கமொடு பாசிழை நல்கி
 இலைத்தொழில் தடக்கையள் எழுந்தீகி இனியெனக்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 160
 |  கலைத்தொழில் அவையம் கைதொழப் 
 புக்காங்குஇருந்த இறைவன் திருந்தடி குறிகிச்
 செம்பொன் நல்யாழ் சிலதிகைந் 
 நீக்கி
 அணங்குறை மெல்விரல் வணங்கினள் கூப்பி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 165
 |  இறைஞ்சிய மாதரை எடுத்தனன் 
 நீழீஇப்பிதிர்சுணங்கு ஆகமொடு பெருந்தோள் 
 நீவிக்
 கதிர்பொன் பட்டமொடு கனங்குழை 
 திருத்தி
 ஒண்நுதல் மாதரை ஒருகை 
 பற்றிப்
 பொன்இழை தாயுழைப் போகெனப் புகலலும
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 170
 |  தான்முன் கண்ட தவற்றினள் 
 ஆதலின்சென்ற வாயிற்கு ஒன்றலள் 
 ஊடிப்
 புலவியில் கருகிய திருமுகம் 
 இறைகமள்கு
 உவகையின் 
 மகிழ்ந்த முறுவலள் 
 ஆகிக்
 கடைக்கண் தூதால் காவலன் 
 கடைஇச்
 சுடர்க்குழை பயந்தோள் சொல்லா நிற்ப
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 175
 
 
 
 
 180
 |  இன்சொன் மகளிர் எனைப்பலர் 
 உள்ளும்நுந்தை நெஞ்சம் நீயறப் 
 பெற்றாங்கு
 உரக்களிறு 
 அடக்கிய ஓசைத் 
 தாகி
 வரத்தொடு வந்த வசைதீர் 
 சிறப்பின்
 வத்தவ குலத்துத் துப்பெனத் 
 தோன்றிய
 தகையொலி வீணையொடு அவைதுறை 
 போகி
 உருவிற்கு ஒத்த திருவினை யாகிக்
 குடிவிளக் குறூஉங் கொடியே 
 வாவென
 மாதர் ஆயத்து மகள்வயின் 
 கொளீஇத்
 தாயர் ஆல்லாம் தழீஇயினர் 
 முயங்கிச்
 சுற்ற மாந்தர் தொக்கனர் புகல
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 185
 
 
 
 
 190
 |  வத்தவர் இறைவனை வருகெனக் 
 கூஉய்ப்பொற்கோட்டு அம்பலம் பொலிய 
 ஏறிக்
 கற்றறி வாளர் சுற்றிய 
 நடுவண்
 தாமுயல் வேட்கையின் மாநிலத்து 
 உறையுநர்
 மரமுதல் சாய மருந்துகொண் 
 டாஅங்கு
 நங்குடி வலித்தல் வேண்டி நம்பி
 தன்குடி கெடுத்த தகவி 
 லாளனேன்
 என்மனம் புகல வேண்டின் 
 இவனைத்தன்
 மண்மிசை நிறுக்கும் மந்திரம் 
 இருக்கென
 மதிவ லாளர் விதிவகை இதுவெனத்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 195
 |  தண்ணும் சேனையும் தகைக்,கோ 
 சம்பியும்பண்டுகண் 
 அழிந்த பகையினை 
 நீக்கிப்
 பொன்னும் நெல்லும் புரிவின் 
 வழங்குகென்று
 நொன்றெனப் பயிற்றி உருமிடித் தன்ன
 வென்றி முரசம் வீதிதோ றெருக்கி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 200
 
 
 
 
 205
 |  முன்யான் இவனை முருக்கலும் 
 வேண்டினென்பின்யான் இவனைப் பெருக்கலும் உற்றனென்
 எமர னாயின் இறைகொடுத் தகல்க
 அமர னாயின் அமைவொடு 
 நிற்கென
 அடல்வேல் தானை யாருணி யரசற்கு
 ஞாலத்து இன்னுயிர் வாழ்வோர் 
 நாப்பண்
 காலம் 
 பார்க்குங் காலன் 
 போல
 வெல்போர் உதயணன் வெஃறுணை 
 யாகப்
 பல்கோடு யானைப் பாலகன் 
 வருமெனக்
 கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொல் 
 ஓலை
 அரக்குப்பொறி ஒற்றி ஆணையிற் போக்கி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 210 
 
 
 
 215
 
 
 
 
 220
 |  எண்படைத் தலைவரும் 
 இருபிறப் பாளரும்எண்பதின் ஆயிரம் இளம்பது 
 வாய்களும்
 ஏற்றினம் வரூஉம் நாற்றங் 
 கழுமிய
 மதங்கவுள் பிறந்த கதந்திகழ் 
 படாத்த
 ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும்
 எண்பது தேரும் இருவகைத் 
 தொறுவும்
 நன்மணி ஐம்பால் நருமதை 
 உள்ளுறுத்து
 இரங்குபொன் கிண்கிணி அரங்கிய ஆயத்து
 நாடக மகளிர் நாலெண் 
 பதின்மரும்
 கோடியல் ஊர்தியுங் கொண்டுவிசி உறுத்துக்
 கோடி 
 விழுநிதி கொண்டகஞ் 
 செறிக்கப்
 பாடியல் பண்டியொடு படைசெலல் விதித்து
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 225
 |  வளங்கெழு தாயத்து வழியடை 
 ஆகியஇளங்கோ நம்பியும் இவனொடு 
 செல்கென
 மாண்மொழிக் குருசில் ஆணைவைத்து 
 அகம்புக
 நாள்கொண்டு 
 எழுவது நாளை யாமென
 அமைச்சனும் செவிலியும் அமைந்த 
 வகையால்
 நாள்கொளற்கு இருந்துழி நன்னகர் கேட்பக்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 230
 |  கழிந்த யாண்டும் கயநீந் 
 ஆட்டணிஒழிந்ததன்று அண்டம் உயர்கொடி 
 மூதூர்க்
 குருதி 
 வெள்ளம் கூலம் 
 பரப்பி
 அழுகுரல் மயங்கிய அல்லற் 
 றாக
 மதவலி வேழம் மையல் 
 உறுத்த
 கடவுள் யானெனக் கடவுள் 
 காட்டிப்
 பேரிசைக் கடவுள் பெருநகர்த் தோன்றிச்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 235 |  சேரி ஆயத்துச் 
 செம்முதிர் 
 பெண்டிரொடுகட்டறி மகடூஉக் கடிமுறத் 
 திட்ட
 வட்ட நெல்லும் மாண்பில 
 பெரிதெனக்
 குற்றம் உண்டெனில் கூறுமின் எமக்கெனக்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 240
 
 
 
 
 245
 |  கருங்காற் கலிங்கமொடு காஅழ் 
 கலக்கிப்பிட்ட 
 வாயள் பெரும்பா 
 கீரதி
 பொய்ப்பே ஏறிப் பொள்ளென 
 நக்கு
 முலைஇடைத் துளங்கும் முத்துறழ் 
 ஆரமொடு
 தகையெருத் துரிஞ்சுந் தமனியக் 
 குழையள்
 கொடும்பூண் மார்பில் கூந்தல் 
 பரப்பிப்
 பிடிக்கை அன்ன பெருந்தோள் ஓச்சி
 இடிக்குரல் முரசின்முன் எழுந்தனள் ஆடி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 250
 |  விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் 
 தரீஇத்திருநீர் ஆட்டணி மருவீர் 
 ஆயின்
 பிணக்குறை படுத்துப் பிளிறுபு 
 சீறிய
 இன்றும் சென்றியான் 
 குஞ்சரம் புகுவலென்று
 அஞ்சில் ஓதி அணங்குவாய் கூறப்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 255
 |  பன்றியெறி யுற்ற புண்கூர் 
 ஞமலிகுன்றா அடிசில் குழிசி 
 காணினும்
 வெரீஇ அன்ன வியப்பினர் ஆகி
 அலகை மூதூர் ஆன்றவர் 
 எல்லாம்
 உலகம் திரியா ஒழுக்கினர் 
 ஆதலின்
 காவல் மன்னற்குக் கதுமென உரைத்தலின்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 260
 |  தேவர் சொல்லும் தேததை 
 ஆகெனவெண்முகை அடுத்துப் பைந்தோடு 
 படுத்து
 மாதர் 
 அங்கையின் மங்கலத்து 
 இயற்றிய
 வாகைக் கண்ணி வலத்தில் 
 சூட்டித்
 தானைச் சேரித் தலைப்பெருந் 
 திருவன்
 நாணீர் ஆட்டணி நாளையென்று அறைதலும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 265
 
 
 
 
 270
 |  விளையாட்டு ஈரணி விற்றுங் 
 கொள்ளும்தொலைவின் 
 மூதூர்த் தொன்றின மறந்துராய்த்
 தோணியும் மரமும் துறைநா 
 வாயும்
 நீரியல் மாடமும் நீந்தியல் 
 புணையும்
 சுண்ணமுஞ் சூட்டுஞ் சுவைநறுந் 
 தேறலும்
 செண்ணச் சிவிகையும் தேரும் 
 வையமும்
 கண்ணாற் 
 பிடிகையுங் கட்டமை 
 ஊர்தியும்
 பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் 
 மறலிச்
 செவ்வி பெறாஅ வைகலர் ஆகி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 275
 |  வான்கிளர்ந் தன்ன வளநீர் ஆட்டணிசேணிடை உறைநரும் சென்று 
 காண்புழிப்
 புதவகத் 
 துறைந்தோர் போம்பொழுது என்றென
 உதயண குமரனை ஓர்த்துறச் 
 சொல்லி
 நூலறி வாளர் நால்வரை 
 விட்டபின்
 உவாக்கடல் பரப்பின் ஒல்லென 
 மயங்கி
 விழாக்கொண் டன்றால் வியன்நகர் விரைந்தென்.
 | 
 
 உரை | 
 
 |  |