46. உழைச்சன
விலாவணை
|
இதன்கண்: உதயணமன்னன்
வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு சென்று செய்தியறிந்தவுடன் அங்குக் குழுமியிருந்த
ஏவன் மாக்களும் பிறரும் வருந்தி அழுதல் கூறப்படும். |
|
|
திருநகர்
அகவயின் திறன்மீக்
கூரி
ஒருதுணை வயவர் உள்வழித்
திரிதர
ஒடிவில் தோற்றத்து உதயணன்
ஊரும்
பிடிவழிப் படரும் பேணா
மள்ளரை 5 அதிரத்
தாக்குதற்கு அமைக்கப்
பட்ட
பதிநிலம் தோறும் பதிந்துமுன்
இருந்த
ஐந்நூற்று ஐம்பத்து ஐவர்
ஆடவர்
செந்நூல் பத்திச் சேடகக்
கையர்
மன்னிய மாதிரம் மறுவின்று
மயங்கி 10
மின்உமிழ்ந் ததுபோல் வீசிய
வாளினர்
கரணம் நுனித்த அரணக்
காப்பினர்
பின்சென் மாந்தரை முன்சென்று விலங்கி |
உரை
|
|
|
அரதனம் நாகரின் சொரிதரு
வெகுளியர்
ஏற்றோர்த் தாக்கிக் கூற்றுஉறை உலகினுள்
15 உறைகுவிர் ஆயின் குறுகுமின்
விரைந்தெனச்
சிறைஅழி புனலில் சென்றுமேல்
நெருங்கி
வேலும் கணையமும் வீழினும்
இமையார்
வீரியத் தறுகணர் வீக்கிய கச்சையர்
ஆர்வ லாளர் ஆர்த்தனர் எறிய |
உரை
|
|
|
20 ஓங்குமடல்
பெண்ணைத் தீங்குலைத்
தொடுத்த
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி
ஏய்ப்பத்
தளைஅவிழ் தாமமொடு தலைபல
புரளவும்
வேகப் புள்ளின் வெவ்விசைக்கு
உலந்த
நாகப் பிறழ்ச்சியின் தோள்முதல்
துணியவும் 25
அஞ்செம் சாந்தம் எழுதிய
அகலம்
ஒண்செங் குருதிப் பைந்தளி
பரப்பவும்
குசைத்தொழில் கூத்தன் விசைத்துநனி
விட்ட
பொங்குபொறித் தாரையில் தங்கல்செல்
லாது
குருதிச் செம்புனல் தவிராது எக்கவும் |
உரை
|
|
|
30 மிகைசெலற்கு
எழுந்த வேக
வெவ்அழல்
அகவயின் சுடுதலின் அவிந்த
ஆற்றலர்
நிலத்தொடு நேரா நெஞ்சினர்
போலப்
புலக்கமழ் புண்ணர் விண்ணிடை
நோக்கிக்
கொலைப்பெரும் கூர்வாள் கோடுற
அழுத்தலின் 35
பொறிப்படு வேங்கையின் குறிப்பிலர் குரங்கவும் |
உரை
|
|
|
மத்தகத்து இழிதரு நெய்த்தோர்ப்
பெரும்புனல்
மொய்த்துமுகம் புதைதலின் முன்அடி
காணார்
மடித்த செவ்வாய் அழுந்தக்
கவ்விப்
பிடித்த வாளொடும் பிறழ்ந்தனர்
கவிழவும் 40
கையொடு துமித்த வைவாள்
வாய்மிதித்து
அற்ற அடியினர் செற்றத்தில்
கழுமிக் கற்ற
கரணம் அற்ற ஆக
உரத்தகை மழுங்கி உள்ளடி
இன்றி
மரக்கால் கூத்தரின் மறிந்தனர் விழவும் |
உரை
|
|
|
45 மடத்தகை
மகளிர் மருங்குல்
கடிந்த
முலைப்பூண் அழுத்திய மொய்சாந்து
அகலம்
வாள்முகம் அழுத்தலின் வயவுநடை
சுருங்கிச்
செந்நிறக் குருதியின் பைந்நிணங்
கெழீஇச்
செயிர்த்த நோக்கினர் செங்கண்
ஆடவர் 50 வியர்த்த
நுதலினர் வீழ்ந்தனர் அவியவும் |
உரை
|
|
|
சுடரும் வாளினர் சோர்நிணர்
இழுக்கி அடர்பூண்
அகலத்து அரும்படை
உற்றுக்
குடர்கள் தாக்கக் குழிப்படு
களிற்றின்
படர்கூர் எவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும் |
உரை
|
|
|
55 தலையும்
தடக்கையும் தாளும்
உடம்பும்
கொலைஅமை வில்லும் கூர்வாய்ச்
சுரிகையும்
வேலும் ஈட்டியும் கோலும்
குந்தமும்
சேடக வட்டமும் செந்நூல்
பாரமும்
தண்டும் வாளும் தளைஇடு
பாசமும் 60
பொங்குமயிர்க் கிடுகும் புளகத்
தண்டையும்
அரக்குவினைப் பலகையும் நிரைத்தவெண்
குடையும்
கூந்தல் பிச்சமும் கோணா
வட்டமும்
வாங்குகைத் தறுகண் வாரணப்
பிளவும்
பரவைச் செந்திரை விரவுபு முடுகி
65 அன்ன பிறவும் முன்முன்
உருட்டிக்
கைந்நவி லாளர் காடுஎறிந்து
உழுத
செந்நிலம் மருங்கில் செஞ்சால்
சிதைய
மரம்சுமந்து இழிதரும் கடும்புனல்
கடுப்பக்
குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப |
உரை
|
|
|
70 அடங்காத் தானை
அவந்தியர்
இறைவற்கு
ஆருயிர் அன்ன அரும்பெறல்
மடமகள்
வால்வளைப் பணைத்தோள் வாசவ
தத்தையை
வலிதில் கொண்ட வத்தவர்
இறைவனை
நலிதற்கு எழுந்த நண்ணா
இளையரைக் 75
கடல்விலக்கு ஆழியில் கலக்கம்
இன்றி
அடல்விலக் காளர் ஆர்த்தனர் அடர்ப்பவும் |
உரை
|
|
|
உயிரொன்று ஆகிய செயிர்தீர்
காதல்
துணைநலத் தோழன் துயரம்
அறுத்தற்கு
இணைமலர்த் தடங்கண் இமையகத்து
ஒடுங்கிய 80
காட்சியிற் கனையும் வேட்கையன்
ஆகி
விம்முறு விழுநகர் வீதியில்
கொண்ட
வெம்முறு படிவம் நீக்கி
யூகி
பிணம்படு பெருங்காட்டுப் பேயும்
உட்கும்
அணங்கரும் தானத்து அஞ்சுதக
இரீஇத் 85 தாழி
படுத்துத் தமரையுந்
தெளியான்
பூழி படுத்த சாதனை
அமைவில்
கற்படை போழினுங் கதுவாய்
போகாது
எற்புடம்பு அறுக்கும் இயற்கைத்து
ஆகிக்
கொல்புனைந்து இயற்றிய கொலையமை
கூர்வாள் 90
வாய்வயின் தெய்வம் வணங்குபு கொண்டு |
உரை
|
|
|
தீவயிறு ஆர்த்திய திறலோன்
போலநின்
காய்வுறு கடும்பசி களைகுவென்
இன்றுஎனைக்
காத்தல் ஓம்பென வாற்றுளி
கூறிப்
பத்தி குயின்ற பல்வினைக்
கம்மத்துச் 95
சித்திரச் சேடகம் செறியப்
பற்றி உற்றோன்
உற்ற உறுகண்
தீர்க்கென
கற்றோய் கலிங்கம் கட்டிய
கச்சையன்
ஊழி இறுதி உட்குவரத்
தோன்றி
வாழுயிர் பருகும் வன்கண்
செய்தொழில் 100 கூற்றம் போல
வேற்றவர் முருக்கிக் |
உரை
|
|
|
கடிகமழ் நறுந்தார்க் காவலன்
மகளைப்
பிடிமிசைக் கொண்டவன் பெயரும்
நேரத்து
முடிமுதல் அண்ணலை முந்தினன்
குறுகித்
தொடிமுதல்திணிதோன் தோன்ற ஓர்ச்சி 105
வலமுறை வந்து பலமுறை பழிச்சி |
உரை
|
|
|
நும்பொருட்டு ஆக நெடுந்தகை
எய்திய
வெம்பெருந் துயரம் விடுத்தனை
ஆகிக்
காட்டகத்து அசையாது கடுகுபு
போகி
நாட்டகம் புகுக நண்புஇடை இட்ட
110 இரும்பிடி நினக்குஇது பெருங்கடன்
மற்றுஎனப்
பிடிஓம் படுத்துப் பெருமை
எய்திக்
குடிஓம்பு இயற்கைஎம் கோமகன்
எழுகென
வரத்தொடு புணர்ந்த வாரணக்
காவல்
திறத்தொடு கொடுத்துச் செய்பொருள்
கூறிப் 115 புறக்கொடுத்து
ஒழியும் போழ்தில் திறப்பட |
உரை
|
|
|
ஒருநாட்டுப் பிறந்த ஆர்வம்
ன்றியும்
கருமக் கிடக்கையும் கலங்காச்
சூழ்ச்சியும்
மறைபுறப் படாமையும் அறைஉண்
ணாமையும்
வாசவ தத்தைக்கு வலித்துணை ஆய
120 தாய்மையும் தவமும் வாய்மையும்
நோக்கி
விடுதற்கு அருமை முடியக்
கூறி
வடிவும் வண்ணமும் படிவமும்
பிறவும்
அருந்தவ மகளைத் திருந்துமொழித்
தோழன்
உணர எழுதிய ஒலையும் வாங்கிப்
125 புணர அவள்வயின் போக
கொண்டுஎன
ஊகந்த ராயன்கு ஆக நீட்டித் |
உரை
|
|
|
தமரது
வென்றியும் தருக்கும்
நிலைமையும்
அரிய தோழன் சூழ்ச்சியது
அமைதியும்
எய்திய இன்பமும் கைஇகந்து பெருக
130 வையக வரைப்பின் வத்தவர்
இறைவன்கு
எவ்வம் தீர்க்கென இமையோர்
இயற்றிய
தெய்வத்து அதன்ன திண்பிடி
கடைஇ
மன்னிய தோற்றமொடு வடகீழ்ப்
பெருந்திசை
முன்னிய பொழுதில் முன்ஆங்கு கூறிய |
உரை
|
|
|
135 வணங்குசிலை கொடுத்த
வலிகெழு வராகன்
இரும்பிடி கடாவலன் இவன்என
எண்ணி
அரும்படை யாளர் ஆருயிர்
ஓம்பி
நயந்துகை விடாஅன் பின்செல் வோனை |
உரை
|
|
|
எறிபடைத்
தானை ஏயர் பெருமகன் 140
உறுபடை யில்லா ஒருதிசை
காட்டி
ஆற்றலும் வென்றியும் அறிவும்
மூன்றும்
கூற்றுத்திறை கொடுக்கும் கொற்றத்
தானை
அவந்தியர் பெருமகன் அடிமுதல்
குறுகிப்
பயந்துதான் வளர்த்த பைந்தொடிப்
பாவையைச் 145 சிறையிவன்
என்னும் சிந்தையின்
நீக்கிக்
குறையுடை உள்ளமொடு கொள்கஎனத்
தந்துதன்
காதலின் விடுப்பப் போகுதல் வலித்ததுஎன் |
உரை
|
|
|
வணக்கம் இன்றியான் செய்தனன்
தனக்கெனக்
கூறினை சென்ம்எனத் தேறக் காட்டிப்
150 படிறுஇடை மிடைந்த பணிகோள்
ஈயா
ஆன்பால் செந்தேன் அணியுறு
கிளவி
அடுதிறல் ஆற்றல் அறியக்
கூறப்
பிடிவழிப் படர்ந்து பெயர்ந்தவன் நிற்பத் |
உரை
|
|
|
தொடியுடைத் தடக்கையின் தொழுதனள்
இறைஞ்சி 155
மீட்டுஅவன் போக்கும் மாற்றம்
கேட்டே
மணிமுதல் கொளீஇய மாண்பொன்
சந்தின்
எரிமணி இமைக்கும் இலங்குபொன்
கோணத்துக்
கதிர்நகைக் கோவைக் கைவினைப்
பொலிந்த
மத்தகப் புல்லகம் நக்குபு கிடந்த
160 திலகத் திருநுதல் வியர்பொடித்து
இழியக்
கலக்குறு சில்நீர்க் கருங்கயல்
போல
நிலைக்கொளல் செல்லா நீர்சுமந்து
அளைஇப்
பிறழ்ச்சியொடு உலாவும் பெருமதர்
மழைக்கண்
அச்சம் நோக்கின் நச்செயிறு அணிந்த
165 நாகப் பிள்ளை அங்கண்
பிறந்த
ஆவி போல வைதுவெய்து
உயிராப்
பருவரல் உறாஅப் பையுள்
நெஞ்சினள்
கண்திரள் வேய்த்தோள் காஞ்சன
மாலையைக்
கொண்டுஇழிக என்னும் குறிப்பினள்
போலச் 170 செவ்வி
இன்றிச் சேயிழை புலம்ப |
உரை
|
|
|
எள்ளியது தீர உள்ளியது
முடித்த
உலவாக் கேள்வி உதயண
குமரனைத்
தொகுவிரல் கூப்பித் தொழுவனள்
ஆகித்
தேன்பொதி செவ்வாய்க் காஞ்சனை
உரைக்கும் 175 பைந்தளிர்
பொதுளிய பனிமலர்க்
காவில்
செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறும்
தொடுத்த
பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர்
கோத்த
பண்ணுறு பல்வினைப் பவழத்
திண்மணை
ஊக்கமை ஊசல் வேட்கையின் விரும்பினும்
180 திருநலத் தோழியர் சிறுபுறம்
கவைஇப்
பரவை அல்குல் பல்காசு
புரளக்
குரவை ஆயம் கூடித்
தூங்கினும்
தன்வரைத்து அல்லா விம்முறு
விழுமமொடு
நோய்கூர்ந்து அழியும்எம் கோமகள்
நடுங்க 185 எறிவளி
புரையும் இரும்பிடி
கடைஇப்
பின்வழிப் படரும்எம் பெரும்படை
பேணாய்
என்வலித் தனையோ இறைவ நீஎன |
உரை
|
|
|
நடுக்கம் வேண்டா நங்கையும்
நீயும்
அடுத்த காவலன் இவளொடும் அமர்ந்து
190 விடுத்தமை உணரா வீரிய
இளையர்
தருக்கொடு வந்து செருச்செயல்
துணிந்தனர்
பணிவகை இன்றிப் பண்டும்
இன்னதை
அணிஇழை மடவோய் துணிகுவென்
ஆயின்
அரியவும் உளவோ அஞ்சல் ஓம்புஎனத் |
உரை
|
|
|
195 தெரிவனன் கூறிய
தெளிமொழி கேட்டே
அன்னது ஆகிய அருள்உண்
டாம்எனின்
அஞ்சொல் பேதாய் அதுஇது
வாம்எனப்
பின்னிருங் கூந்தலொடு பிறழ்கலம்
திருத்திக்
கலக்கம் நீங்குஎனக் காஞ்சனை தெருட்டி
200 நலத்தகை மாதரும் நனிநடுக்கு
ஒழிய
வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவத் |
உரை
|
|
|
திருமா தேவி பெருநகர்
வரைப்பினும்
செருமாண் வென்றிச் செல்வன்
பக்கமும்
மையார் கண்ணியை ஒய்யான் ஆகிக்
205 கையிகந் தனன்ஆல் காவலன்
மகன்எனக்
காற்றினும் எரியினும் மேற்ற
ஆர்ப்பினும்
நாற்றிசை மருங்கினும் நண்ணல்
செல்லார்
பகலிடம் மருங்கில் பகுதியைக்
கெடுத்த
அகலிடம் போல அச்சம் எய்திப்
210 படைமலர்த் தடம்கண் பனிசுமந்து
வீழ
இடைமுலைக் கிடந்த வேக
வல்லி
முற்றுறு கழங்கொடு முதல்அகடு
பொருந்திப்
பற்றிடம் பெறாது பாம்பெனப்
பதைப்ப
வெருவுறு மஞ்ஞையின் தெருமந்து இகலிப்
215 பழிப்பில் கம்மியன் பசும்பொனில்
புனைந்த
கொடிப்பல விரீஇய கொழுந்துபடு
கோலத்துக்
கொட்டம் கொண்டோர் கட்டழல்
உயிரா
விட்டுஅகன் றனையோ வேந்தனொடு
இன்றுஎமை
மட்டுவார் கோதாய் மறந்துஎன மாழ்கவும் |
உரை
|
|
|
220 சிறுபுறம் கவைஇச்
சீப்பின் வாரிக்
குறுநெறிக் கொண்ட கூழைக்
கூந்தலுள்
நறுமலர்க் கோதை நான்றுவந்து
அசைஇ
வடுப்போழ்ந்து அன்ன வாள்அரி
நெடுங்கண்
குமிழ்த்துஎழு வெம்பனி கோங்கரும்பு
ஏய்ப்ப 225 முகிழ்த்தல்
முன்னிய முலைமுதல் முற்றத்து
வரித்த சாந்தின் வண்ணம்
சிதைப்பச்
செறிதொடர் கொளீஇய சித்திரக்
கம்மத்துப்
பொறிஅமை புடைசெவிப் போழ்வாய்
மணிக்கண்
அருங்கயல் அடைப்பை அங்கையின் ஏந்திப்
230 பெருங்கண் பேதையர் இருந்துயர் எய்தவும் |
உரை
|
|
|
மறுஅகத்து அடக்கிய மதியம்
போலச்
சிறுமுகச் சிகழிகை புடைமுதல்
புதைஇய
மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின்
விளங்கஅதன்
ஊர்கோள் ஏய்ப்பச் சூழ்புடன் வளைஇய
235 செம்பொன் பட்டம் பின்தலைக்
கொளீஇச்
சில்லென் கோலத்துச் சிறுகொடி
மருங்கில்
தனிமுத்து அணிந்த தண்சாந்து
ஆகத்துப்
பனிமுத் தாலி படைக்கண்
கால
வெள்ளிப் போழை உள்அகத்து அடக்கி
240 மணியினும் பொன்னினும் மருப்பினும்
வல்லவர்
அணிபெறப் புனைந்த அமர்பெறு
காட்சித்
தின்மை செறிவில் சேடக
மகளிர்
தன்மை கடுக்கும் தானைக்
கச்சையர்
வம்புநெருக்கு உற்ற பொங்குஇள முலையர்
245 குவளைக் கோதை கொண்ட
கூந்தலர்
தவளைக் கிண்கிணி ததும்புசீ
றடியர்
விளக்குறு மணிக்கை முகட்டுமுதல் வளைத்த
பொங்குமயிர்க்
கவரிப் பைந்தொடி
மகளிர்
எரியுறு மெழுகின் உள்ளஞ் சோரப்
250 பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் |
உரை
|
|
|
கல்மிசை மருங்கில் மின்மிளிர்ந்
ததுபோல்
திடர்சேதி ஆகத்துச் சுடர்மணி
பிறழ
முத்துஉறழ் ஆலி தத்துறு
கண்ணொடு
பனிப்புறு கிளவியில் பக்கம்
நோக்கி 255 மங்கலச்
செப்பின் மாண
ஏந்திய
குங்குமம் கொண்ட கூன்வழுக் குறவும் |
உரை
|
|
|
அருங்கலம் துரைஇப் பெருங்கலம்
எல்லாம்
பேணி அணிந்த நாணுக்
கோலத்துப்
பையர அல்குல் பவழப் பல்காசு 260
கைபுனை கலிங்கத்து ஐதுகலந்து
ஒன்றி
நீலத் தெண்ணீர் நீந்தும்
ஆமையின்
கோலக் குறுக்கைவாள் கூட்டுள்
கழீஇப்
பாலிகை பற்றிய குறள்வழிப் படரவும் |
உரை
|
|
|
மணிகிடந்து இமைக்கும் மாட மாநகர்
265 அணிகிடந்து இமைக்கும் அகன்பெருங்
கோயிலுள் காப்புற
வகுத்த கன்னியம் கடிமனை
யாப்புற வகுத்த போர்ப்பெருங்
கோணத்துக்
கழறுகால் அமைத்துக் கண்கன்
பரப்பின்
நிழல்தரு படுகால் நீரதில் புனைந்த
270 கல்பிறங்கு அடுக்கத்து நற்குறி
யாவையும்
படுகல் சுரமும் பாறையும்
படுவும்
நடுகல் அடுக்கலும் நறும்பூம்
சாரலும்
தேனுடை வரையும் கானகக்
குறும்பும்
அருவி அறையும் உருவ ஏனலும் |
உரை
|
|
|
275 குழியும் குவடும்
வருநீர் அசும்பும்
வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ்
சூரலும்
வழைசேர் வாழையும் கழைசேர்
கானமும் நாகமும்
நறையும் ஊகமும்
உழுவையும்
கடமான் ஏறுங் கவரியும் கரடியும்
280 மடமான் பிணையும் மஞ்ஞையும்
அகன்றிலும்
விடமா நாகமும் வேக
யானையும் கழனியும்
பொய்கையும் பழனப்
படப்பையும்
தெரிமலர்க் காவும் உருவின
ஆக
அமைக்கப் பட்டசெயற்கருஞ்
செல்வத்து 285 மைதவழ்
சென்னிக் கைசெய் குன்றொடு |
உரை
|
|
|
நால்வகை நிலனும் பால்வகுத்து
இயற்றி
அறவை அல்லது பிறபுகப்
பெறாஅ
வளமரம் துறுமிய இளமரக்
காவினுள்
கொண்ட கோலமொடு குரவை பிணைஇ
290 வண்டல் ஆடும் தண்டாக்
காதல்
எம்மையும் உள்ளாது இகந்தனை
யோஎன
மம்மர் கொண்ட மனத்தர்
ஆகித்
தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும் |
உரை
|
|
|
அம்பொன் வள்ளத்து அமிழ்துபொதி அடிசில்
295 கொம்பின் ஒல்கிக் குறிப்பில்
கொள்ளாய்
செம்பொன் கிண்கிணி சிலம்பொடு
ஆர்ப்ப
மணிநிலம் மருங்கில் பந்தொடு
மறலிநின்
அணிவளைப் பணைத்தோள் அசைய
ஆற்றாய்
இன்தீங் கிளவி ஒன்றிரண்டு
மிழற்றிப் 300 பண்சுவைத்து
ஒழிந்து பால்இல் தோல்முலை
ஒண்முக விரலில் கண்முகம்
ஞெமிடி
மையார் நெடுங்கண் மாலை
யாமத்துப்
பையாந்து பொருந்திப் பள்ளி
கொள்வோய்
காதல் காளை கானத்து ஒய்ப்பப்
305 போதல் கண்ணே புரிந்தனை
யோஎனச்
செவிலித் தாயர் அவலித்து அழவும் |
உரை
|
|
|
கற்ற
மந்திரி காட்டவும்
காணாது
பெட்டாங்கு ஒழுகும் பெருமகன்
போலவும்
முறைமையில் தேயும் நிறைமதி நீர்மை
310 நண்புகொள் ஒழுக்கின் நஞ்சுபொதி
தீஞ்சொல்
வளிஇய மடந்தையைத் தெளிவனன்
ஒழுகி
வெறுக்கை இன்மையில் துறக்கப்
பட்ட
இளையவன் போலவும் கிளைஞரும்
பிறரும்
கண்டவர் எல்லாம் கைஎறிந்து நகூஉம்
315 கம்பலைப் பெரும்பழி எய்திய
காவலன்
வம்ப மன்னனை வழிதெளிந்
தனன்என
வெண்றரை சூழ்ந்த தண்ணுமைப்
பறைதலைக்
காஞ்சுகி முதியர் சாய்ஞ்சுஅஞர் எய்தலும் |
உரை
|
|
|
பொன்அணிப் பாவை போகிய புணர்ப்புஇன்று
320 தன்னின் ஆகிய தன்மைத்து
என்று தண்டார்
வேந்தன் கொண்ட
காலை
விடுத்தற்கு அரிதென நடுக்கம்
எய்தி
ஓங்கிழ ஒழுக்கின் உயர்ந்தோர்ப்
பேணிச்
சாங்கியந் தாங்கிய சால்புஅணி படிமை
325 வருமதி நுனித்த பெருமூ தாட்டி |
உரை
|
|
|
வேக
வேந்தன் வெஞ்சமம்
முருக்கிப்
போக வேந்தனைப் போகப்
பண்ணிப்
பொருபடை பரப்பி உருமறைந்து
உழிதரும்
யூகி உள்வழி ஒற்றுநன் எய்தி
330 ஆகுபொருள் ஓலையின் இருவரும்
அறிவுற்றுக்
கண்கூடு எய்தும் காலம்
கூறி
மண்கூட் டாளன் மனைவயின் மறையவும் |
உரை
|
|
|
இன்னோர் பிறரும் மம்மருள்
மயங்கிய
உழைக்கல மகளிரும் இழைப்பிரிந்து
அரற்றவும் 335 பேராறு மடுத்த
பெருங்கடல் போல
ஓசை அறியாப் பூசலும்
புலம்பும்
ஊரக மருங்கில் கூர்எரி
கொளுவ
எதிர்த்த மாந்தர் இன்னுயிர்
இறுதியும்
கதிர்த்த முறுவல் கன்னியைத் தழீஇ
340 வத்தவன் அகற்சியும் அவ்வழிச்
செலவும்
வித்தக குமரர் வீழ்ச்சியும்
பிறவும்
ஒத்தவை உணர்ந்தும் உற்றுறைக்கு
உரையார்
பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள்
கண்ணும்
உய்வகை இல்லை வெய்யோன்
மாட்டுஎன்று
345 அறிந்தோர் அறிந்தோர் செறிந்தனர்
ஆகி
வெய்துஉறும் விழுமொடு விம்மம்
கூரச்
செய்வதை அறியார் திரிவரால் பலர்என். |
உரை
|
|