| 46. உழைச்சன 
 விலாவணை
 
 | 
 
 | இதன்கண்: உதயணமன்னன் 
 வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு சென்று செய்தியறிந்தவுடன் அங்குக் குழுமியிருந்த 
 ஏவன் மாக்களும் பிறரும் வருந்தி அழுதல் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | திருநகர் 
 அகவயின் திறன்மீக் 
 கூரி ஒருதுணை வயவர் உள்வழித் 
 திரிதர
 ஒடிவில் தோற்றத்து உதயணன் 
 ஊரும்
 பிடிவழிப் படரும் பேணா 
 மள்ளரை
 5  அதிரத் 
 தாக்குதற்கு அமைக்கப் 
 பட்ட
 பதிநிலம் தோறும் பதிந்துமுன் 
 இருந்த
 ஐந்நூற்று ஐம்பத்து ஐவர் 
 ஆடவர்
 செந்நூல் பத்திச் சேடகக் 
 கையர்
 மன்னிய மாதிரம் மறுவின்று 
 மயங்கி
 10    
 மின்உமிழ்ந் ததுபோல் வீசிய 
 வாளினர்
 கரணம் நுனித்த அரணக் 
 காப்பினர்
 பின்சென் மாந்தரை முன்சென்று விலங்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | அரதனம் நாகரின் சொரிதரு 
 வெகுளியர் ஏற்றோர்த் தாக்கிக் கூற்றுஉறை உலகினுள்
 15   உறைகுவிர் ஆயின் குறுகுமின் 
 விரைந்தெனச்
 சிறைஅழி புனலில் சென்றுமேல் 
 நெருங்கி
 வேலும் கணையமும் வீழினும் 
 இமையார்
 வீரியத் தறுகணர் வீக்கிய கச்சையர்
 ஆர்வ லாளர் ஆர்த்தனர் எறிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | 20    ஓங்குமடல் 
 பெண்ணைத் தீங்குலைத் 
 தொடுத்த விளைவுறு தீங்கனி வீழ்ச்சி 
 ஏய்ப்பத்
 தளைஅவிழ் தாமமொடு தலைபல 
 புரளவும்
 வேகப் புள்ளின் வெவ்விசைக்கு 
 உலந்த
 நாகப் பிறழ்ச்சியின் தோள்முதல் 
 துணியவும்
 25   
  அஞ்செம் சாந்தம் எழுதிய 
 அகலம்
 ஒண்செங் குருதிப் பைந்தளி 
 பரப்பவும்
 குசைத்தொழில் கூத்தன் விசைத்துநனி 
 விட்ட
 பொங்குபொறித் தாரையில் தங்கல்செல் 
 லாது
 குருதிச் செம்புனல் தவிராது எக்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 30    மிகைசெலற்கு 
 எழுந்த வேக 
 வெவ்அழல் அகவயின் சுடுதலின் அவிந்த 
 ஆற்றலர்
 நிலத்தொடு நேரா நெஞ்சினர் 
 போலப்
 புலக்கமழ் புண்ணர் விண்ணிடை 
 நோக்கிக்
 கொலைப்பெரும் கூர்வாள் கோடுற 
 அழுத்தலின்
 35   
  பொறிப்படு வேங்கையின் குறிப்பிலர் குரங்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மத்தகத்து இழிதரு நெய்த்தோர்ப் 
 பெரும்புனல் மொய்த்துமுகம் புதைதலின் முன்அடி 
 காணார்
 மடித்த செவ்வாய் அழுந்தக் 
 கவ்விப்
 பிடித்த வாளொடும் பிறழ்ந்தனர் 
 கவிழவும்
 40   
  கையொடு துமித்த வைவாள் 
 வாய்மிதித்து
 அற்ற அடியினர் செற்றத்தில் 
 கழுமிக்
 கற்ற 
 கரணம் அற்ற ஆக
 உரத்தகை மழுங்கி உள்ளடி 
 இன்றி
 மரக்கால் கூத்தரின் மறிந்தனர் விழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 45    மடத்தகை 
 மகளிர் மருங்குல் 
 கடிந்த முலைப்பூண் அழுத்திய மொய்சாந்து 
 அகலம்
 வாள்முகம் அழுத்தலின் வயவுநடை 
 சுருங்கிச்
 செந்நிறக் குருதியின் பைந்நிணங் 
 கெழீஇச்
 செயிர்த்த நோக்கினர் செங்கண் 
 ஆடவர்
 50    வியர்த்த 
 நுதலினர் வீழ்ந்தனர் அவியவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சுடரும் வாளினர் சோர்நிணர் 
 இழுக்கி அடர்பூண் 
 அகலத்து அரும்படை 
 உற்றுக்
 குடர்கள் தாக்கக் குழிப்படு 
 களிற்றின்
 படர்கூர் எவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 55    தலையும் 
 தடக்கையும் தாளும் 
 உடம்பும் கொலைஅமை வில்லும் கூர்வாய்ச் 
 சுரிகையும்
 வேலும் ஈட்டியும் கோலும் 
 குந்தமும்
 சேடக வட்டமும் செந்நூல் 
 பாரமும்
 தண்டும் வாளும் தளைஇடு 
 பாசமும்
 60   
  பொங்குமயிர்க் கிடுகும் புளகத் 
 தண்டையும்
 அரக்குவினைப் பலகையும் நிரைத்தவெண் 
 குடையும்
 கூந்தல் பிச்சமும் கோணா 
 வட்டமும்
 வாங்குகைத் தறுகண் வாரணப் 
 பிளவும்
 பரவைச் செந்திரை விரவுபு முடுகி
 65    அன்ன பிறவும் முன்முன் 
 உருட்டிக்
 கைந்நவி லாளர் காடுஎறிந்து 
 உழுத
 செந்நிலம் மருங்கில் செஞ்சால் 
 சிதைய
 மரம்சுமந்து இழிதரும் கடும்புனல் 
 கடுப்பக்
 குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 70    அடங்காத் தானை 
 அவந்தியர் 
 இறைவற்கு ஆருயிர் அன்ன அரும்பெறல் 
 மடமகள்
 வால்வளைப் பணைத்தோள் வாசவ 
 தத்தையை
 வலிதில் கொண்ட வத்தவர் 
 இறைவனை
 நலிதற்கு எழுந்த நண்ணா 
 இளையரைக்
 75   
  கடல்விலக்கு ஆழியில் கலக்கம் 
 இன்றி
 அடல்விலக் காளர் ஆர்த்தனர் அடர்ப்பவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | உயிரொன்று ஆகிய செயிர்தீர் 
 காதல் துணைநலத் தோழன் துயரம் 
 அறுத்தற்கு
 இணைமலர்த் தடங்கண் இமையகத்து 
 ஒடுங்கிய
 80   
  காட்சியிற் கனையும் வேட்கையன் 
 ஆகி
 விம்முறு விழுநகர் வீதியில் 
 கொண்ட
 வெம்முறு படிவம் நீக்கி 
 யூகி
 பிணம்படு பெருங்காட்டுப் பேயும் 
 உட்கும்
 அணங்கரும் தானத்து அஞ்சுதக 
 இரீஇத்
 85    தாழி 
 படுத்துத் தமரையுந் 
 தெளியான்
 பூழி படுத்த சாதனை 
 அமைவில்
 கற்படை போழினுங் கதுவாய் 
 போகாது
 எற்புடம்பு அறுக்கும் இயற்கைத்து 
 ஆகிக்
 கொல்புனைந்து இயற்றிய கொலையமை 
 கூர்வாள்
 90   
  வாய்வயின் தெய்வம் வணங்குபு கொண்டு
 | உரை | 
 
 |  | 
 
 |  | தீவயிறு ஆர்த்திய திறலோன் 
 போலநின் காய்வுறு கடும்பசி களைகுவென் 
 இன்றுஎனைக்
 காத்தல் ஓம்பென வாற்றுளி 
 கூறிப்
 பத்தி குயின்ற பல்வினைக் 
 கம்மத்துச்
 95   
  சித்திரச் சேடகம் செறியப் 
 பற்றி
 உற்றோன் 
 உற்ற உறுகண் 
 தீர்க்கென
 கற்றோய் கலிங்கம் கட்டிய 
 கச்சையன்
 ஊழி இறுதி உட்குவரத் 
 தோன்றி
 வாழுயிர் பருகும் வன்கண் 
 செய்தொழில்
 100    கூற்றம் போல 
 வேற்றவர் முருக்கிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கடிகமழ் நறுந்தார்க் காவலன் 
 மகளைப் பிடிமிசைக் கொண்டவன் பெயரும் 
 நேரத்து
 முடிமுதல் அண்ணலை முந்தினன் 
 குறுகித்
 தொடிமுதல்திணிதோன் தோன்ற ஓர்ச்சி
 105 
    வலமுறை வந்து பலமுறை பழிச்சி
 | உரை | 
 
 |  | 
 
 |  | நும்பொருட்டு ஆக நெடுந்தகை 
 எய்திய வெம்பெருந் துயரம் விடுத்தனை 
 ஆகிக்
 காட்டகத்து அசையாது கடுகுபு 
 போகி
 நாட்டகம் புகுக நண்புஇடை இட்ட
 110    இரும்பிடி நினக்குஇது பெருங்கடன் 
 மற்றுஎனப்
 பிடிஓம் படுத்துப் பெருமை 
 எய்திக்
 குடிஓம்பு இயற்கைஎம் கோமகன் 
 எழுகென
 வரத்தொடு புணர்ந்த வாரணக் 
 காவல்
 திறத்தொடு கொடுத்துச் செய்பொருள் 
 கூறிப்
 115    புறக்கொடுத்து 
 ஒழியும் போழ்தில் திறப்பட
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஒருநாட்டுப் பிறந்த ஆர்வம் 
 ன்றியும் கருமக் கிடக்கையும் கலங்காச் 
 சூழ்ச்சியும்
 மறைபுறப் படாமையும் அறைஉண் 
 ணாமையும்
 வாசவ தத்தைக்கு வலித்துணை ஆய
 120    தாய்மையும் தவமும் வாய்மையும் 
 நோக்கி
 விடுதற்கு அருமை முடியக் 
 கூறி
 வடிவும் வண்ணமும் படிவமும் 
 பிறவும்
 அருந்தவ மகளைத் திருந்துமொழித் 
 தோழன்
 உணர எழுதிய ஒலையும் வாங்கிப்
 125    புணர அவள்வயின் போக 
 கொண்டுஎன
 ஊகந்த ராயன்கு ஆக நீட்டித்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தமரது 
 வென்றியும் தருக்கும் 
 நிலைமையும் அரிய தோழன் சூழ்ச்சியது 
 அமைதியும்
 எய்திய இன்பமும் கைஇகந்து பெருக
 130    வையக வரைப்பின் வத்தவர் 
 இறைவன்கு
 எவ்வம் தீர்க்கென இமையோர் 
 இயற்றிய
 தெய்வத்து அதன்ன திண்பிடி 
 கடைஇ
 மன்னிய தோற்றமொடு வடகீழ்ப் 
 பெருந்திசை
 முன்னிய பொழுதில் முன்ஆங்கு கூறிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | 135    வணங்குசிலை கொடுத்த 
 வலிகெழு வராகன் இரும்பிடி கடாவலன் இவன்என 
 எண்ணி
 அரும்படை யாளர் ஆருயிர் 
 ஓம்பி
 நயந்துகை விடாஅன் பின்செல் வோனை
 | உரை | 
 
 |  | 
 
 |  | எறிபடைத் 
 தானை ஏயர் பெருமகன் 140   
  உறுபடை யில்லா ஒருதிசை 
 காட்டி
 ஆற்றலும் வென்றியும் அறிவும் 
 மூன்றும்
 கூற்றுத்திறை கொடுக்கும் கொற்றத் 
 தானை
 அவந்தியர் பெருமகன் அடிமுதல் 
 குறுகிப்
 பயந்துதான் வளர்த்த பைந்தொடிப் 
 பாவையைச்
 145    சிறையிவன் 
 என்னும் சிந்தையின் 
 நீக்கிக்
 குறையுடை உள்ளமொடு கொள்கஎனத் 
 தந்துதன்
 காதலின் விடுப்பப் போகுதல் வலித்ததுஎன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வணக்கம் இன்றியான் செய்தனன் 
 தனக்கெனக் கூறினை சென்ம்எனத் தேறக் காட்டிப்
 150    படிறுஇடை மிடைந்த பணிகோள் 
 ஈயா
 ஆன்பால் செந்தேன் அணியுறு 
 கிளவி
 அடுதிறல் ஆற்றல் அறியக் 
 கூறப்
 பிடிவழிப் படர்ந்து பெயர்ந்தவன் நிற்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தொடியுடைத் தடக்கையின் தொழுதனள் 
 இறைஞ்சி 155   
  மீட்டுஅவன் போக்கும் மாற்றம் 
 கேட்டே
 மணிமுதல் கொளீஇய மாண்பொன் 
 சந்தின்
 எரிமணி இமைக்கும் இலங்குபொன் 
 கோணத்துக்
 கதிர்நகைக் கோவைக் கைவினைப் 
 பொலிந்த
 மத்தகப் புல்லகம் நக்குபு கிடந்த
 160    திலகத் திருநுதல் வியர்பொடித்து 
 இழியக்
 கலக்குறு சில்நீர்க் கருங்கயல் 
 போல
 நிலைக்கொளல் செல்லா நீர்சுமந்து 
 அளைஇப்
 பிறழ்ச்சியொடு உலாவும் பெருமதர் 
 மழைக்கண்
 அச்சம் நோக்கின் நச்செயிறு அணிந்த
 165    நாகப் பிள்ளை அங்கண் 
 பிறந்த
 ஆவி போல வைதுவெய்து 
 உயிராப்
 பருவரல் உறாஅப் பையுள் 
 நெஞ்சினள்
 கண்திரள் வேய்த்தோள் காஞ்சன 
 மாலையைக்
 கொண்டுஇழிக என்னும் குறிப்பினள் 
 போலச்
 170    செவ்வி 
 இன்றிச் சேயிழை புலம்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | எள்ளியது தீர உள்ளியது 
 முடித்த உலவாக் கேள்வி உதயண 
 குமரனைத்
 தொகுவிரல் கூப்பித் தொழுவனள் 
 ஆகித்
 தேன்பொதி செவ்வாய்க் காஞ்சனை 
 உரைக்கும்
 175    பைந்தளிர் 
 பொதுளிய பனிமலர்க் 
 காவில்
 செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறும் 
 தொடுத்த
 பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர் 
 கோத்த
 பண்ணுறு பல்வினைப் பவழத் 
 திண்மணை
 ஊக்கமை ஊசல் வேட்கையின் விரும்பினும்
 180    திருநலத் தோழியர் சிறுபுறம் 
 கவைஇப்
 பரவை அல்குல் பல்காசு 
 புரளக்
 குரவை ஆயம் கூடித் 
 தூங்கினும்
 தன்வரைத்து அல்லா விம்முறு 
 விழுமமொடு
 நோய்கூர்ந்து அழியும்எம் கோமகள் 
 நடுங்க
 185    எறிவளி 
 புரையும் இரும்பிடி 
 கடைஇப்
 பின்வழிப் படரும்எம் பெரும்படை 
 பேணாய்
 என்வலித் தனையோ இறைவ நீஎன
 | உரை | 
 
 |  | 
 
 |  | நடுக்கம் வேண்டா நங்கையும் 
 நீயும் அடுத்த காவலன் இவளொடும் அமர்ந்து
 190    விடுத்தமை உணரா வீரிய 
 இளையர்
 தருக்கொடு வந்து செருச்செயல் 
 துணிந்தனர்
 பணிவகை இன்றிப் பண்டும் 
 இன்னதை
 அணிஇழை மடவோய் துணிகுவென் 
 ஆயின்
 அரியவும் உளவோ அஞ்சல் ஓம்புஎனத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 195    தெரிவனன் கூறிய 
 தெளிமொழி கேட்டே அன்னது ஆகிய அருள்உண் 
 டாம்எனின்
 அஞ்சொல் பேதாய் அதுஇது 
 வாம்எனப்
 பின்னிருங் கூந்தலொடு பிறழ்கலம் 
 திருத்திக்
 கலக்கம் நீங்குஎனக் காஞ்சனை தெருட்டி
 200    நலத்தகை மாதரும் நனிநடுக்கு 
 ஒழிய
 வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | திருமா தேவி பெருநகர் 
 வரைப்பினும் செருமாண் வென்றிச் செல்வன் 
 பக்கமும்
 மையார் கண்ணியை ஒய்யான் ஆகிக்
 205    கையிகந் தனன்ஆல் காவலன் 
 மகன்எனக்
 காற்றினும் எரியினும் மேற்ற 
 ஆர்ப்பினும்
 நாற்றிசை மருங்கினும் நண்ணல் 
 செல்லார்
 பகலிடம் மருங்கில் பகுதியைக் 
 கெடுத்த
 அகலிடம் போல அச்சம் எய்திப்
 210    படைமலர்த் தடம்கண் பனிசுமந்து 
 வீழ
 இடைமுலைக் கிடந்த வேக 
 வல்லி
 முற்றுறு கழங்கொடு முதல்அகடு 
 பொருந்திப்
 பற்றிடம் பெறாது பாம்பெனப் 
 பதைப்ப
 வெருவுறு மஞ்ஞையின் தெருமந்து இகலிப்
 215    பழிப்பில் கம்மியன் பசும்பொனில் 
 புனைந்த
 கொடிப்பல விரீஇய கொழுந்துபடு 
 கோலத்துக்
 கொட்டம் கொண்டோர் கட்டழல் 
 உயிரா
 விட்டுஅகன் றனையோ வேந்தனொடு 
 இன்றுஎமை
 மட்டுவார் கோதாய் மறந்துஎன மாழ்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 220    சிறுபுறம் கவைஇச் 
 சீப்பின் வாரிக் குறுநெறிக் கொண்ட கூழைக் 
 கூந்தலுள்
 நறுமலர்க் கோதை நான்றுவந்து 
 அசைஇ
 வடுப்போழ்ந்து அன்ன வாள்அரி 
 நெடுங்கண்
 குமிழ்த்துஎழு வெம்பனி கோங்கரும்பு 
 ஏய்ப்ப
 225    முகிழ்த்தல் 
 முன்னிய முலைமுதல் முற்றத்து
 வரித்த சாந்தின் வண்ணம் 
 சிதைப்பச்
 செறிதொடர் கொளீஇய சித்திரக் 
 கம்மத்துப்
 பொறிஅமை புடைசெவிப் போழ்வாய் 
 மணிக்கண்
 அருங்கயல் அடைப்பை அங்கையின் ஏந்திப்
 230    பெருங்கண் பேதையர் இருந்துயர் எய்தவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மறுஅகத்து அடக்கிய மதியம் 
 போலச் சிறுமுகச் சிகழிகை புடைமுதல் 
 புதைஇய
 மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் 
 விளங்கஅதன்
 ஊர்கோள் ஏய்ப்பச் சூழ்புடன் வளைஇய
 235    செம்பொன் பட்டம் பின்தலைக் 
 கொளீஇச்
 சில்லென் கோலத்துச் சிறுகொடி 
 மருங்கில்
 தனிமுத்து அணிந்த தண்சாந்து 
 ஆகத்துப்
 பனிமுத் தாலி படைக்கண் 
 கால
 வெள்ளிப் போழை உள்அகத்து அடக்கி
 240    மணியினும் பொன்னினும் மருப்பினும் 
 வல்லவர்
 அணிபெறப் புனைந்த அமர்பெறு 
 காட்சித்
 தின்மை செறிவில் சேடக 
 மகளிர்
 தன்மை கடுக்கும் தானைக் 
 கச்சையர்
 வம்புநெருக்கு உற்ற பொங்குஇள முலையர்
 245    குவளைக் கோதை கொண்ட 
 கூந்தலர்
 தவளைக் கிண்கிணி ததும்புசீ 
 றடியர்
 விளக்குறு மணிக்கை முகட்டுமுதல் வளைத்த
 பொங்குமயிர்க் 
 கவரிப் பைந்தொடி 
 மகளிர்
 எரியுறு மெழுகின் உள்ளஞ் சோரப்
 250    பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கல்மிசை மருங்கில் மின்மிளிர்ந் 
 ததுபோல் திடர்சேதி ஆகத்துச் சுடர்மணி 
 பிறழ
 முத்துஉறழ் ஆலி தத்துறு 
 கண்ணொடு
 பனிப்புறு கிளவியில் பக்கம் 
 நோக்கி
 255    மங்கலச் 
 செப்பின் மாண 
 ஏந்திய
 குங்குமம் கொண்ட கூன்வழுக் குறவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அருங்கலம் துரைஇப் பெருங்கலம் 
 எல்லாம் பேணி அணிந்த நாணுக் 
 கோலத்துப்
 பையர அல்குல் பவழப் பல்காசு
 260 
    கைபுனை கலிங்கத்து ஐதுகலந்து 
 ஒன்றி
 நீலத் தெண்ணீர் நீந்தும் 
 ஆமையின்
 கோலக் குறுக்கைவாள் கூட்டுள் 
 கழீஇப்
 பாலிகை பற்றிய குறள்வழிப் படரவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மணிகிடந்து இமைக்கும் மாட மாநகர் 265    அணிகிடந்து இமைக்கும் அகன்பெருங் 
 கோயிலுள்
 காப்புற 
 வகுத்த கன்னியம் கடிமனை
 யாப்புற வகுத்த போர்ப்பெருங் 
 கோணத்துக்
 கழறுகால் அமைத்துக் கண்கன் 
 பரப்பின்
 நிழல்தரு படுகால் நீரதில் புனைந்த
 270    கல்பிறங்கு அடுக்கத்து நற்குறி 
 யாவையும்
 படுகல் சுரமும் பாறையும் 
 படுவும்
 நடுகல் அடுக்கலும் நறும்பூம் 
 சாரலும்
 தேனுடை வரையும் கானகக் 
 குறும்பும்
 அருவி அறையும் உருவ ஏனலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 275    குழியும் குவடும் 
 வருநீர் அசும்பும் வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் 
 சூரலும்
 வழைசேர் வாழையும் கழைசேர் 
 கானமும்
 நாகமும் 
 நறையும் ஊகமும் 
 உழுவையும்
 கடமான் ஏறுங் கவரியும் கரடியும்
 280    மடமான் பிணையும் மஞ்ஞையும் 
 அகன்றிலும்
 விடமா நாகமும் வேக 
 யானையும்
 கழனியும் 
 பொய்கையும் பழனப் 
 படப்பையும்
 தெரிமலர்க் காவும் உருவின 
 ஆக
 அமைக்கப் பட்டசெயற்கருஞ் 
 செல்வத்து
 285    மைதவழ் 
 சென்னிக் கைசெய் குன்றொடு
 | உரை | 
 
 |  | 
 
 |  | நால்வகை நிலனும் பால்வகுத்து 
 இயற்றி அறவை அல்லது பிறபுகப் 
 பெறாஅ
 வளமரம் துறுமிய இளமரக் 
 காவினுள்
 கொண்ட கோலமொடு குரவை பிணைஇ
 290    வண்டல் ஆடும் தண்டாக் 
 காதல்
 எம்மையும் உள்ளாது இகந்தனை 
 யோஎன
 மம்மர் கொண்ட மனத்தர் 
 ஆகித்
 தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அம்பொன் வள்ளத்து அமிழ்துபொதி அடிசில் 295    கொம்பின் ஒல்கிக் குறிப்பில் 
 கொள்ளாய்
 செம்பொன் கிண்கிணி சிலம்பொடு 
 ஆர்ப்ப
 மணிநிலம் மருங்கில் பந்தொடு 
 மறலிநின்
 அணிவளைப் பணைத்தோள் அசைய 
 ஆற்றாய்
 இன்தீங் கிளவி ஒன்றிரண்டு 
 மிழற்றிப்
 300    பண்சுவைத்து 
 ஒழிந்து பால்இல் தோல்முலை
 ஒண்முக விரலில் கண்முகம் 
 ஞெமிடி
 மையார் நெடுங்கண் மாலை 
 யாமத்துப்
 பையாந்து பொருந்திப் பள்ளி 
 கொள்வோய்
 காதல் காளை கானத்து ஒய்ப்பப்
 305   போதல் கண்ணே புரிந்தனை 
 யோஎனச்
 செவிலித் தாயர் அவலித்து அழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கற்ற 
 மந்திரி காட்டவும் 
 காணாது பெட்டாங்கு ஒழுகும் பெருமகன் 
 போலவும்
 முறைமையில் தேயும் நிறைமதி நீர்மை
 310    நண்புகொள் ஒழுக்கின் நஞ்சுபொதி 
 தீஞ்சொல்
 வளிஇய மடந்தையைத் தெளிவனன் 
 ஒழுகி
 வெறுக்கை இன்மையில் துறக்கப் 
 பட்ட
 இளையவன் போலவும் கிளைஞரும் 
 பிறரும்
 கண்டவர் எல்லாம் கைஎறிந்து நகூஉம்
 315    கம்பலைப் பெரும்பழி எய்திய 
 காவலன்
 வம்ப மன்னனை வழிதெளிந் 
 தனன்என
 வெண்றரை சூழ்ந்த தண்ணுமைப் 
 பறைதலைக்
 காஞ்சுகி முதியர் சாய்ஞ்சுஅஞர் எய்தலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொன்அணிப் பாவை போகிய புணர்ப்புஇன்று 320    தன்னின் ஆகிய தன்மைத்து 
 என்று
 தண்டார் 
 வேந்தன் கொண்ட 
 காலை
 விடுத்தற்கு அரிதென நடுக்கம் 
 எய்தி
 ஓங்கிழ ஒழுக்கின் உயர்ந்தோர்ப் 
 பேணிச்
 சாங்கியந் தாங்கிய சால்புஅணி படிமை
 325    வருமதி நுனித்த பெருமூ தாட்டி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வேக 
 வேந்தன் வெஞ்சமம் 
 முருக்கிப் போக வேந்தனைப் போகப் 
 பண்ணிப்
 பொருபடை பரப்பி உருமறைந்து 
 உழிதரும்
 யூகி உள்வழி ஒற்றுநன் எய்தி
 330   ஆகுபொருள் ஓலையின் இருவரும் 
 அறிவுற்றுக்
 கண்கூடு எய்தும் காலம் 
 கூறி
 மண்கூட் டாளன் மனைவயின் மறையவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | இன்னோர் பிறரும் மம்மருள் 
 மயங்கிய உழைக்கல மகளிரும் இழைப்பிரிந்து 
 அரற்றவும்
 335   பேராறு மடுத்த 
 பெருங்கடல் போல
 ஓசை அறியாப் பூசலும் 
 புலம்பும்
 ஊரக மருங்கில் கூர்எரி 
 கொளுவ
 எதிர்த்த மாந்தர் இன்னுயிர் 
 இறுதியும்
 கதிர்த்த முறுவல் கன்னியைத் தழீஇ
 340   வத்தவன் அகற்சியும் அவ்வழிச் 
 செலவும்
 வித்தக குமரர் வீழ்ச்சியும் 
 பிறவும்
 ஒத்தவை உணர்ந்தும் உற்றுறைக்கு 
 உரையார்
 பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் 
 கண்ணும்
 உய்வகை இல்லை வெய்யோன் 
 மாட்டுஎன்று
 345   அறிந்தோர் அறிந்தோர் செறிந்தனர் 
 ஆகி
 வெய்துஉறும் விழுமொடு விம்மம் 
 கூரச்
 செய்வதை அறியார் திரிவரால் பலர்என்.
 | உரை | 
 
 |  |