பக்திப் பாடல்கள்

திருமால்

பாடல்
Poem


திருமால்

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி!

சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய் திறல் போற்றி !

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி !

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி !

குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி !

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !

என்றுஎன்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய்!

- ஆண்டாள்