| 56. வென்றி 
 யெய்தியது
 
 | 
 
 | இதன்கண்: உதயணனை அணுக 
 அஞ்சித் தொலைவிலேயே அவனைச் சூழ்ந்துநின்ற வேட்டுவர் தம்முள் ஒரு முதுவேடன் கூறிய படி 
 உதயணனைச்   சூழ்ந்துள்ள இடங்களிலே தீக்கொளுவி விடுதலும், உதயணன் 
 பின்னர்ப் புறம்போந்து அவருடன் போர் செய்தலும், போரின்கண் உதயணன் வில் 
 நாணற்றுப் போதலும், பின்னர் வேறிடத்தே சென்று அவர் தன்மேல் விடும் கணைகளை நாணற்ற 
 வறிய வில்லாலேயே ஒருவாறு தடுத்து நிற்புழி  அவ்வேடர்களாலே கைப்பற்றப்படுதலும், 
 பின்னர் அவ்வேடரை நயம் படு வஞ்சக மொழியாலே தம்மை நலியாதபடி செய்தலும், படை 
 கொணரச் சென்ற  வயந்தகன் செயலும், அவன் படையோடு வருதலும், அப்படை கண்டு 
 வேடர் தோற்றோடுதலும் பிறவுங் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை 
 அறியார் ஒருவன் ஆம்பலர் ஒழிவம்என் 
 னாது
 விசையுடை வெங்கணை வில்தொழில் 
 நவின்ற
 அசைவி லாளள் அழிக்கவும் 
 பட்டனம்
 5   உரைமின் ஒல்லென உறுவது 
 நோக்கிக்
 கருவினை நுனித்து வருவினை 
 ஆண்மைப்
 புள்ளுணர் முதுமகன் தெள்ளிதின் 
 தேறி்
 இளையவர் கேட்க இற்றென 
 இசைக்கும்
 கிளையுடைப் பூசலோடு முளைஅரில் 
 பிணங்கிய
 10   முள்அரை 
 இலவத்து உள்ளவர் 
 இருப்பக்
 கேள்இழுக்கு அறியாத் தாள்இழுக்கு 
 உறீஇயினிர்
 கோள்இமிழ் கனலி சூழ்திசைப் 
 பொத்திப்
 புகைஅழல் உறீஇப் புறப்படுத்து 
 அவர்களை
 நவையுறு நடுக்கம் செய்தல் 
 உணரீர்
 15    கள்ளம் 
 இன்றிக் கட்டாள் 
 வீழ்த்த
 வெள்ளை வேட்டுவீர் புள்எவன் 
 பிழைத்ததுஎன்று
 உள்அழிந்து அவர்கட்கு உறுதி கூறக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கணையொடு பிடித்த கைக்கோல் 
 அரணிப் புடையிடு பூளைப் பூப்புற 
 மடுத்துப்
 20    
 பிசைந்த சிறுதீப் பெருக 
 மூட்டி
 இசைந்த முளரி எண்திசைப் 
 பக்கமும்
 வேனல் 
 பேர்அழல் கானவர் கொளுத்தி்
 நோவக் கூறிச் சாவது 
 அல்லது
 போதல் பொய்க்கும் இனிஎனப் 
 போகார்
 25    
 அரிமா வளைந்த நரிமாப் 
 போல
 இகல்முனை வேட்டுவர் இடுக்கண் செய்யப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | புகைமிகு வெவ்அழல் 
பூம்பொழில் புதைப்பக் கான வெந்தீக் கடும்புகைப் பட்ட
 மானவர் பிணையின் மம்மர் எய்தித்
 30    
தளைஅவிழ் தாரோன் தனிமைக்கு இரங்கிக்
 களைகண் காணாது கையறு துயரமொடு்
 பெய்வளைத் தோளி வெய்துயிர்த்து ஏங்கக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | குலங்கெழு குருசில் கொடிக்கைம் 
 மாறி் அலங்குஇதழ்க் கோதையொடு அவிழ்மூடி 
 திருத்திக்
 35   
  கலங்கல் ஓம்பிக் காஞ்சன 
 மாலாய்
 இலங்கிழை மாதரை என்வழிப் 
 படாதோர்
 பக்கம் கொண்டு படர்மதி 
 இப்பால்
 வில்லின் நீக்கி வெள்ளிடை 
 செய்தவர்
 அல்லல் உறீஇ ஆருயிர் உண்கெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 40    கழைவளர் கானம் 
 கடுந்தீ மண்ட முழைவயின் போதரும் முளைஎயிற்று 
 இடிக்குரல்
 புலவும் புலிபோல் பொங்குஅழல் 
 புதைஇய
 இலவஞ் சோலையின் இறைமகன் 
 போதர
 ஆளி கண்ட ஆனை 
 இனம்போல்
 45   வாளி 
 வல்வில் வயவர் 
 நீங்கிச்
 சில்இருங் கூந்தலை மெல்லென 
 நடாஅய்
 வெல்போர் விடலை வெள்ளிடைப் படுத்தலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அரண்இடை அகற்றி அச்சம் 
 நீங்கி் முரண்உடை வேட்டுவோர் மூழ்த்தனர் 
 மூசி்
 50   முன்னும் பின்னும் 
 பக்கமும் 
 நெருங்கிப்
 பொன்அணி மார்பன் போர்த்தொழில் 
 அடங்கக்
 கலைஉணர் வித்தகர் கைபுனைந்து 
 இயற்றிய
 சிலைநான் அறுத்தலின் செய்வதை இன்றி்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வலைநாண் இமிழ்ப்புண் வயமாப் 
 போலக் 55   காட்சிக்கு 
 இன்னா ஆற்றன் 
 ஆகிப்
 பேரமர் ஞாட்பினுள் பெருமுது 
 தந்தைதன்
 வார்சிலைப் புரிநாண் வாளியின் 
 அறுப்பத்
 தேர்மிசைத் திரிந்த திறலோன் 
 போல
 வீழ்தரு கடுங்கணை வில்லின் விலக்கி்
 60    ஊழ்வினை துரப்ப உயிர்மேல் 
 செல்லாது
 தாழ்தரு தடக்கையும் தாளும் 
 தழீஇ
 வாயறை போகிய வடுச்சேர் 
 யாக்கையன்
 ஆழி நோன்தாள் அண்ணலைக் கண்டே
 | உரை | 
 
 |  | 
 
 |  | தாழிருங் கூந்தல் தளிரியல் நடுங்கித் 65    தான்அணி பெருங்கலம் தன்வயில் 
 களைந்து
 கான வேட்டுவர் கைவயின் 
 கொடுஎனக்
 கவிர்இதழ்ச் செவ்வாய்க் காஞ்சன 
 மாலைகை
 அவிர்இழை  நன்கலம் அமைவர 
 நீட்டி
 அழியன்மின் நீர்என அழுவனள் 
 மிழற்றிய
 70    காஞ்சனை 
 நமைப்பொரு கானவர் 
 தமக்குக்
 கொடுத்திலம் ஆயின் கொடுமைவிளைவு 
 உண்டெனக்
 கலக்க உள்ளமொடு கடுஞ்சிலை கைத்தர
 | உரை | 
 
 |  | 
 
 |  | நலத்தகு மாதர் நடுக்கம் 
 நோக்கி் வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு
 75    இன்னுயிர் போகினும் இன்ன 
 என்னாது
 மன்னுயிர் காவல் மனத்தின் 
 எண்ணிக்
 குன்றச் சாரல் குறும்பினுள் 
 உறையும்
 வன்தோள் இளையீர் வந்துநீர் 
 கேண்மின்
 பெருங்கலம் பெய்தியாம் பிடியொடும் 
 போந்த
 80   
  அருங்கல வாணிகர் அப்பிடி 
 வீழ
 வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து 
 ஒருவழி
 நெறிவயின் நீக்கிக் குறிவயின் 
 புதைத்தனெம்
 கொள்குவிர் ஆயின் கொலைத்தொழில் 
 நீங்குமின்
 உள்வழி அப்பொருள் காட்டுகம் உய்த்துஎனச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 85   
  சொல்பொருள் கேட்டே வில்தொடை 
 மடக்கி அறவரை இழந்த செறுநரை 
 விலக்கிக்
 குறவருள் தலைவன் குருசிலைக் 
 குறுகி
 யாரே நீர்எமக்கு அறியக் 
 கூறென
 வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 90    வத்தவர் கோமான் வாணிகர் 
 இத்திசைப் பெரும்பெயர்க் கிளவிப் பிரச்சோ 
 தனன்நாட்
 அரும்பொருள் கொண்டியாம் ஆற்றிடைப் 
 போந்தனெம்
 மடப்பிடி வீழ இடர்ப்பட்டு 
 இருள்இடைப்
 பொழில்வயின் புதைத்த தொழிலினெம் யாம்என
 95    முகைத்தார் மார்பன் உவப்பதை உரைப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | வளங்கெழு வத்தவன் வாணிகர் 
 எனவே உளங்கழிந்து ஊர்தரும் உவகையர் 
 ஆகிக்
 கொல்லாத் தொழிலினர் கொலைப்படை 
 அகற்றி
 வல்ஆண் தோன்றலை வடகம் 
 வாங்கிக்
 100    கையாப் புறுத்துக் காட்டிய எழுகென
 | உரை | 
 
 |  | 
 
 |  | உய்ம்மருங்கு உபாயத்துப் பொய்ம்மருங்கு 
 ஓடி அழல்வழி வந்தியாம் அசைந்தனம் 
 வதி்ந்த
 பொழில்வயின் புதைத்தனம் புகற்குஅரி 
 தாகத்
 தெரிவில் கொள்கையின் நெரிதலைக் 
 கொளீஇயினிர்
 105   
  அவ்அழல் ஆறும் மாத்திரம் 
 இவ்வழி
 நில்மின் நீர்என மன்ன 
 குமரன்
 தெளியக் கூறப் புளிஞர் தேறி
 | உரை | 
 
 |  | 
 
 |  | எவ்வ 
 ழிஆயினும் எரிஅவித்து 
 அவ்வழிக் காணல் உறுதும் காட்டாய் ஆயின்
 110    ஆணம் முன்கை அடுதும் யாம்என
 | உரை | 
 
 |  | 
 
 |  | நன்கை யாத்தது நன்று 
 நொந்துஇவன் கவிகைக்கு ஏலாது கட்டுஎனக் 
 கலிழ்ந்தோள்
 அவிர்துழல் கானத்து அருள்இ 
 லாளர்
 அடுதும் எனவே அமர்ப்பிணை 
 போலத்
 115    தீஉறு 
 தளிரின் மாநிறம் 
 மழுங்க
 மாழை ஒண்கண் ஊழூழ் 
 மல்க
 மம்மர் உள்ளமொடு மடத்தை மாழ்க
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாழ்கிய மாதரை வாங்குபு 
 தழீஇக் கனவளைப் பணைத்தோள் காஞ்சன மாலை
 120    புனவளைத் தோளி பொழில்அகங் 
 காவனம்
 பெருமான் செல்வம் பேணாய் 
 மற்றுஇவ்
 வரிமான் அன்னோற்கு ஆருயிர் 
 கொடீஇய
 போந்தனை யோஎனத் தான்பா 
 ராட்டி
 இரங்குவது நோக்கி இறைமகன் கூறும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 125    வருந்துதல் தவிரயாம் 
 வழிஇடைப் புதைத்த அருங்கலப் பேரணிப் பெருங்கலம் 
 கருதின்யாப்
 புறுமுறை பின்இடத்து அறிமின் 
 மற்றுஇவள்
 நீப்பருந் துயரம் நெறிவயின் 
 ஓம்பித்
 தீப்புகை தீர்தலும் காட்டுதும் சென்றுஎனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 130    கையகப் பட்டோன் 
 பொய்உரைத் 
 தனன்எனின் உய்வகை இலைஇவன் உரைத்ததை 
 எல்லாம்
 செய்தும் யாம்என வெவ்வினை 
 யாளர்
 மையணி யானை தாங்கித் 
 தழும்பிய
 கையாப்பு ஒழித்துக் காத்தனர் நிற்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 135    வாவிப் புள்ளின் தூவி 
 விம்மிய அணைமிசை அசைந்த அம்மென் 
 சிறுபுறம்
 மணல்மிசை அசைந்து மாக்கவின் 
 வாட
 அறியாது வருந்திய ஆருயிர்த் 
 துணைவியைப்
 பொறியார் தடக்கையில் போற்றுபு 
 தழீஇப்
 140   
  பூங்குழல் குருசி தேங்கொளத் 
 தீண்ட
 நீலத் தண்மலர் நீர்ப்பட் 
 டனபோல்
 கோலக் கண்மலர் குளிர்முத்து 
 உறைப்ப
 அவலங் கொள்ளும் அவ்வரைக் கண்ணே
 | உரை | 
 
 |  | 
 
 |  | கவலை 
 உள்ளமொடு கங்குல் போகிய 145   
  வயந்தக குமரன் வந்துகாட்டு 
 ஒதுங்கிக்
 கன்றுஒழி கறவையின் சென்றுஅவண் 
 எய்திக்
 காப்புடை மூதூர்க் கடைமுகம் குறுகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | யாப்புடை நண்பின் ஏற்றுப் 
 பெயரன் வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வரப்
 150    பெருநலத் தானைப் பிரச்சோ 
 தனன்தமர்
 இருநிலக் கிழமை ஏயலர் 
 இறைவன்
 வென்றியும் விறலும் விழுத்தகு 
 விஞ்சையும்
 ஒன்றிய நண்பும் ஊக்கமும் 
 உயர்ச்சியும்
 ஒழுக்கம் நுனித்த உயர்வும் 
 இழுக்கா
 156    அமைச்சின் 
 அமைதியும் அளியும் 
 அறனும்
 சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த 
 ஆற்றலும்
 வெங்கோல் வெறுப்பும் செங்கோல் 
 செவ்வமும்
 செருக்கிச் செல்லும் செலவின 
 என்றுதம்
 தருக்கிய தலைத்தாள் தானைச் 
 செல்வப்
 160    பெருமகன் 
 தெளீஇத்தம் மருமதி மேம்படக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கய்ந்நவில் ஆளனை எஃகுள் 
 அடக்கிய பொய்ந்நிலங் காட்டினர் என்பதோர் 
 பொய்ம்மொழி
 வெந்நில மருங்கின் வேட்டுவர் 
 எல்லாம்
 போற்றார் எரைத்த மாற்றம் 
 பட்டதை
 165    
 நீலைக்கொண்டு அமைந்து நிரம்பாத் 
 தம்நிலம்
 கலக்கம் அறிந்த கவற்சியன் 
 ஆகி
 மன்னுயிர் காவலன்கு அம்மொழி 
 மெய்எனின்
 இன்னுயிர் துறக்கும்என்று எண்ணருஞ் 
 சூழ்ச்சியன்
 உற்றதை உணரும் ஒற்றாள் இளையனை
 170    வருகென நின்றோன் வயந்தகன் கண்டே
 | உரை | 
 
 |  | 
 
 |  | உயிர்த்துணைத் தோழன் உளஎன 
 உவந்து பெயர்ச்சியில் உலகம் பெற்றான் 
 போலச்
 செந்தா மரைக்கண் காவலன் 
 செவ்வியை
 முந்துறக் கேட்ட பின்றை மற்றவன்
 175    வந்ததை உணர்குநன் மந்திரம் இருந்துழிச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சிறைகொள் மன்னவன் துறைகொள் 
 விழவினுள் இகழ்வொடு பட்ட இயற்கை 
 நோக்கிப்
 பவழச் செவ்வாய்ப் பாவையைத் 
 தழீஇ
 இருளிடைப் போந்ததும் இரும்பிடி 
 இறுதியும்
 180    இற்ற 
 இரும்பிடிப் பக்கம் 
 நீங்கலும்
 தெருளக் கூறித் தீதுஇல் 
 காலத்துப்
 பெருமுது தேவி உரிமைப் 
 பள்ளியுள்
 செருமுரண் செல்வன் பெருவிரல் 
 பிடித்தவற்கு
 அறியக் கூறிய அடையாண் கிளவியும்
 185    செறியச் செய்த சிறப்பும் 
 ஆண்மையும்
 அருந்தொழில் அந்தணன் சுருங்கச் சொல்லலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விரைந்தனம் செல்கென வெம்படை 
 தொகுத்து வேழமும் புரவியும் பண்ணுக 
 விரைந்துஎனத்
 தாழம் பறையொடு சங்கமணந்து 
 இயம்பக்
 190    கடல்கிளர்ந் 
 ததுபோல் கால்படை 
 துவன்றி
 அடல்அருங் குறும்பர்க்கு அறியப் 
 போக்கி
 இடபகன் படையோடு எழுந்தனன் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | விண்ணோர் விழையும் செண்ணக் 
 கோலத்துக் கண்ணிய செலவில் கஞ்சிகை 
 வையம்
 195    கண்ணி சூட்டிக் 
 கடைமணை பூட்டி
 வண்ண மகளிர் கண்ணுறக் 
 கவினிய
 உழைக்கலம் ஏந்தி உழைப்படர்ந்து 
 இயலப்
 பொன்கலத்து இயன்ற நற்சுவை 
 அடடிசில்
 காப்புபொறி ஒற்றி யாப்புற 
 ஏற்றித்
 200    தனிமை 
 எய்திய மன்னனும் 
 தையலும்
 அணியும் கலனும் அகன்பரி 
 யாளமும்
 துணிவியல் சுற்றமும் தொடர்ந்துடன் 
 விட்டுப்
 பின்வரவு அமைத்து முன்வரப் போகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வான்தொழில் வயந்தகன் காட்டக 
 மருங்கின் 205    அண்ணல் 
 இருந்த அறிகுறித் 
 தானம்
 நண்ணல் உற்ற காலை 
 மன்னவன்
 அம்புபட வீழ்ந்த வெங்கண் 
 மறவர்
 உதிரப் பரப்பின் உருவுகெட 
 உண்ட
 காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து
 210    கோடுகொண்டு இருந்த குழாஅம் 
 நோக்கிக்
 காடுகொள் மள்ளர் கதுமென 
 நடுங்கிப்
 போர்க்களம் உண்மை பொய்த்தல் 
 இன்றென
 நீர்க்கரைப் பொய்கை நெற்றிமுன் 
 இவந்த
 முள்அரை யிலவம் ஒள்ளெரி சூழப்
 215    பொங்குபுகை கழுமிய பூம்பொழில் 
 படாஅன்
 இங்குநம் இறைவன் இருந்த 
 இடம்அவன்
 ஏதம் பட்டனன் ஆதலின் 
 இன்னே
 சாதல் பொருள்எனக் காதல் 
 கழுமி
 வருபடை உய்த்த வயந்தகன் மாழ்கப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 220    பொருபடை யாளர் புல்இடைத் 
 தெரிவோர் வேட்டுவர் ராதல் ஆல்லிவில் 
 காட்டி
 வாள்தொழில் வயந்தகன் வருத்தம் 
 ஓம்பிப்
 பெருங்கணம் சென்ற பிறங்குபுல் 
 கானம்
 பரந்தனர் செல்வோர் பாவையைத் தழீஇக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 225    காவி கவினிய தாவில் 
 பொய்கையுள் தனித்தாள் நிவந்த தாமரை 
 போலப்
 பனித்தார் மார்பன் நிற்ப 
 மொய்த்துடன்
 வளைத்தனர் வலக்கும் வயவரைக் 
 கண்டே
 உளைப்பொலி மாவும் வேழமும் 
 ஊர்ந்தவர்
 230    போஒந் 
 திசைவயின் புதைந்தனர் நிற்பக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கதிரகத்து இருந்த முதிர்குரல் 
 பறவை போமின் வல்லே போதீர் 
 ஆயினும்
 உயிர்த்தவல் உரைக்கும் என்பதை 
 உணர்ந்து
 முந்துபுள் உரைத்த முதுமகன் கூற
 | உரை | 
 
 |  | 
 
 |  | 235    வெந்திறல் வேட்டுவர் 
 விரைந்தனர் ஆகி அல்லி நறுந்தார் அண்ணலை 
 நலிய
 ஒல்லா மறவர் ஒலித்தனர் 
 ஓடி
 வேகப் புள்ளமொடு விசைத்தனர் 
 ஆர்த்துக்
 கோடும் வயிரும் குழுமின 
 துவைப்பஅக்
 240   
  கருந்தொழி லாளல் இருந்தலை 
 துமித்துப்
 பெருந்தகைக் கிழவனைப் பேரா 
 மறவரை
 இடுக்கண் செய்யுவும் மியல்பி 
 லாளர்
 நடுக்க மெய்தக் குடைப்பெரும் தானை
 | உரை | 
 
 |  | 
 
 |  | வத்தவர் இறைவனும் மெய்த்தகைத் 
 தாகத் 245    தமர்மேல் 
 வந்தமை தான்அகத்து 
 அடக்கி
 நுமரோ மற்றிவர் பிறரோ 
 தாம்எனக்
 கவர்கணை மொய்த்த கானத்து 
 இடைமறைத்து
 எம்உயிர் காமின் எனவே ஆங்கவர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அடையார்க் கடந்த உதயன் 
 மந்திரி 250    இடபக 
 ன்என்போன் இறிபடை 
 தானிது
 கோள்உலா எழுமெனின் கூற்றெனப் 
 பரந்த
 நாள்உலாப் புறுத்தும் வாள்வலி 
 உடைத்தே
 தெரிந்தனை நில்லா யாகி 
 எம்மொடு
 புரிந்தனை போதும் போதாய் 
 ஆயின்
 255    பிரிந்து 
 காண்பிறர் அருந்தலை 
 துமிப்பஎன்று
 ஆர்வ வேட்டுவர் ரண்ணற் 
 குரைத்து
 வார்சிலை 
 அம்பொடு வாங்கிக் 
 கொள்கென
 வீர வேந்தற்கு விரைந்தவர் ஈயா
 | உரை | 
 
 |  | 
 
 |  | முற்பகல் செய்வினை பிற்பகல் 
 உறுநரின் 260    பார்வை நின்றும் 
 பதுக்கையுள் 
 கிடந்தும்
 போர்வைப் புல்லுள் பொதிந்தனர் 
 ஒளித்தும்
 கழுக்குநிரை இருந்தும் கால்இயல் 
 புரவி
 விழுக்குநிணம் பரிய விடுகணை 
 விட்டும்
 கோலிய வல்வில் குமரரை 
 மாட்டியும்
 265    வேலியல் ஆளரை 
 வீழ நூறியும்
 வெங்கணை வாளியுள் விளிந்தனர் வீழப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பைங்கண் வேழத்துப் படைத்திறல் 
 வேந்தன் தமர்வழங்கு படையும் அவர்வழங்கு 
 வாளியும்
 பொன்இழை மாதரொடு தன்வயின் 
 காத்து
 270    மரம்பயில் அழுவத்து 
 மறைந்தனன் நிற்ப
 உரங்கெழு மறவலர் உதயணன் 
 ஒழிய
 மத்துஉறு கடலில் தத்துறு நெஞ்சினர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பைவரி நாகத்து ஐவாய்ப் 
 பிறந்த ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் 
 போல
 275    ஒழிந்தோர் 
 ரொழியக் கழிந்தோர் 
 காணா
 ஆறுகொள் மாந்தர்க்கு அச்சம் 
 எய்தி
 ஏறுபெற்று இகந்த பின்றை 
 வீறுபெற்று
 அம்கண் விசும்பின் திங்களைச் 
 சூழ்ந்த
 வெண்மீன் போல வென்றி எய்திப்
 280    பன்மாண் படைஞர் பரந்தனர் 
 சூழ
 மலிந்தவண் ஏறி வத்தவர் 
 பெருமகன்
 கலிந்த துன்பம் கைஇகந்து 
 அகலப்
 பொலிந்தனன் ஏனப் பொருபடை இடைஎன்
 
 | உரை | 
 
 |  |