56. வென்றி
யெய்தியது
|
இதன்கண்: உதயணனை அணுக
அஞ்சித் தொலைவிலேயே அவனைச் சூழ்ந்துநின்ற வேட்டுவர் தம்முள் ஒரு முதுவேடன் கூறிய படி
உதயணனைச் சூழ்ந்துள்ள இடங்களிலே தீக்கொளுவி விடுதலும், உதயணன்
பின்னர்ப் புறம்போந்து அவருடன் போர் செய்தலும், போரின்கண் உதயணன் வில்
நாணற்றுப் போதலும், பின்னர் வேறிடத்தே சென்று அவர் தன்மேல் விடும் கணைகளை நாணற்ற
வறிய வில்லாலேயே ஒருவாறு தடுத்து நிற்புழி அவ்வேடர்களாலே கைப்பற்றப்படுதலும்,
பின்னர் அவ்வேடரை நயம் படு வஞ்சக மொழியாலே தம்மை நலியாதபடி செய்தலும், படை
கொணரச் சென்ற வயந்தகன் செயலும், அவன் படையோடு வருதலும், அப்படை கண்டு
வேடர் தோற்றோடுதலும் பிறவுங் கூறப்படும். |
|
|
தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை
அறியார்
ஒருவன் ஆம்பலர் ஒழிவம்என்
னாது
விசையுடை வெங்கணை வில்தொழில்
நவின்ற
அசைவி லாளள் அழிக்கவும்
பட்டனம்
5 உரைமின் ஒல்லென உறுவது
நோக்கிக்
கருவினை நுனித்து வருவினை
ஆண்மைப்
புள்ளுணர் முதுமகன் தெள்ளிதின்
தேறி்
இளையவர் கேட்க இற்றென
இசைக்கும்
கிளையுடைப் பூசலோடு முளைஅரில்
பிணங்கிய 10 முள்அரை
இலவத்து உள்ளவர்
இருப்பக்
கேள்இழுக்கு அறியாத் தாள்இழுக்கு
உறீஇயினிர்
கோள்இமிழ் கனலி சூழ்திசைப்
பொத்திப்
புகைஅழல் உறீஇப் புறப்படுத்து
அவர்களை
நவையுறு நடுக்கம் செய்தல்
உணரீர் 15 கள்ளம்
இன்றிக் கட்டாள்
வீழ்த்த
வெள்ளை வேட்டுவீர் புள்எவன்
பிழைத்ததுஎன்று
உள்அழிந்து அவர்கட்கு உறுதி கூறக் |
உரை
|
|
|
கணையொடு பிடித்த கைக்கோல்
அரணிப்
புடையிடு பூளைப் பூப்புற
மடுத்துப் 20
பிசைந்த சிறுதீப் பெருக
மூட்டி
இசைந்த முளரி எண்திசைப்
பக்கமும் வேனல்
பேர்அழல் கானவர் கொளுத்தி்
நோவக் கூறிச் சாவது
அல்லது
போதல் பொய்க்கும் இனிஎனப்
போகார் 25
அரிமா வளைந்த நரிமாப்
போல
இகல்முனை வேட்டுவர் இடுக்கண் செய்யப் |
உரை
|
|
|
புகைமிகு வெவ்அழல்
பூம்பொழில் புதைப்பக்
கான வெந்தீக் கடும்புகைப் பட்ட
மானவர் பிணையின் மம்மர் எய்தித் 30
தளைஅவிழ் தாரோன் தனிமைக்கு இரங்கிக்
களைகண் காணாது கையறு துயரமொடு்
பெய்வளைத் தோளி வெய்துயிர்த்து ஏங்கக் |
உரை
|
|
|
குலங்கெழு குருசில் கொடிக்கைம்
மாறி்
அலங்குஇதழ்க் கோதையொடு அவிழ்மூடி
திருத்திக் 35
கலங்கல் ஓம்பிக் காஞ்சன
மாலாய்
இலங்கிழை மாதரை என்வழிப்
படாதோர்
பக்கம் கொண்டு படர்மதி
இப்பால்
வில்லின் நீக்கி வெள்ளிடை
செய்தவர்
அல்லல் உறீஇ ஆருயிர் உண்கெனக் |
உரை
|
|
|
40 கழைவளர் கானம்
கடுந்தீ மண்ட
முழைவயின் போதரும் முளைஎயிற்று
இடிக்குரல்
புலவும் புலிபோல் பொங்குஅழல்
புதைஇய
இலவஞ் சோலையின் இறைமகன்
போதர
ஆளி கண்ட ஆனை
இனம்போல் 45 வாளி
வல்வில் வயவர்
நீங்கிச்
சில்இருங் கூந்தலை மெல்லென
நடாஅய்
வெல்போர் விடலை வெள்ளிடைப் படுத்தலின் |
உரை
|
|
|
அரண்இடை அகற்றி அச்சம்
நீங்கி்
முரண்உடை வேட்டுவோர் மூழ்த்தனர்
மூசி் 50 முன்னும் பின்னும்
பக்கமும்
நெருங்கிப்
பொன்அணி மார்பன் போர்த்தொழில்
அடங்கக்
கலைஉணர் வித்தகர் கைபுனைந்து
இயற்றிய
சிலைநான் அறுத்தலின் செய்வதை இன்றி் |
உரை
|
|
|
வலைநாண் இமிழ்ப்புண் வயமாப்
போலக் 55 காட்சிக்கு
இன்னா ஆற்றன்
ஆகிப்
பேரமர் ஞாட்பினுள் பெருமுது
தந்தைதன்
வார்சிலைப் புரிநாண் வாளியின்
அறுப்பத்
தேர்மிசைத் திரிந்த திறலோன்
போல
வீழ்தரு கடுங்கணை வில்லின் விலக்கி்
60 ஊழ்வினை துரப்ப உயிர்மேல்
செல்லாது
தாழ்தரு தடக்கையும் தாளும்
தழீஇ
வாயறை போகிய வடுச்சேர்
யாக்கையன்
ஆழி நோன்தாள் அண்ணலைக் கண்டே |
உரை
|
|
|
தாழிருங் கூந்தல் தளிரியல் நடுங்கித்
65 தான்அணி பெருங்கலம் தன்வயில்
களைந்து
கான வேட்டுவர் கைவயின்
கொடுஎனக்
கவிர்இதழ்ச் செவ்வாய்க் காஞ்சன
மாலைகை
அவிர்இழை நன்கலம் அமைவர
நீட்டி
அழியன்மின் நீர்என அழுவனள்
மிழற்றிய 70 காஞ்சனை
நமைப்பொரு கானவர்
தமக்குக்
கொடுத்திலம் ஆயின் கொடுமைவிளைவு
உண்டெனக்
கலக்க உள்ளமொடு கடுஞ்சிலை கைத்தர |
உரை
|
|
|
நலத்தகு மாதர் நடுக்கம்
நோக்கி்
வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு
75 இன்னுயிர் போகினும் இன்ன
என்னாது
மன்னுயிர் காவல் மனத்தின்
எண்ணிக்
குன்றச் சாரல் குறும்பினுள்
உறையும்
வன்தோள் இளையீர் வந்துநீர்
கேண்மின்
பெருங்கலம் பெய்தியாம் பிடியொடும்
போந்த 80
அருங்கல வாணிகர் அப்பிடி
வீழ
வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து
ஒருவழி
நெறிவயின் நீக்கிக் குறிவயின்
புதைத்தனெம்
கொள்குவிர் ஆயின் கொலைத்தொழில்
நீங்குமின்
உள்வழி அப்பொருள் காட்டுகம் உய்த்துஎனச் |
உரை
|
|
|
85
சொல்பொருள் கேட்டே வில்தொடை
மடக்கி
அறவரை இழந்த செறுநரை
விலக்கிக்
குறவருள் தலைவன் குருசிலைக்
குறுகி
யாரே நீர்எமக்கு அறியக்
கூறென
வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப |
உரை
|
|
|
90 வத்தவர் கோமான் வாணிகர்
இத்திசைப்
பெரும்பெயர்க் கிளவிப் பிரச்சோ
தனன்நாட்
அரும்பொருள் கொண்டியாம் ஆற்றிடைப்
போந்தனெம்
மடப்பிடி வீழ இடர்ப்பட்டு
இருள்இடைப்
பொழில்வயின் புதைத்த தொழிலினெம் யாம்என
95 முகைத்தார் மார்பன் உவப்பதை உரைப்ப |
உரை
|
|
|
வளங்கெழு வத்தவன் வாணிகர்
எனவே
உளங்கழிந்து ஊர்தரும் உவகையர்
ஆகிக்
கொல்லாத் தொழிலினர் கொலைப்படை
அகற்றி
வல்ஆண் தோன்றலை வடகம்
வாங்கிக்
100 கையாப் புறுத்துக் காட்டிய எழுகென |
உரை
|
|
|
உய்ம்மருங்கு உபாயத்துப் பொய்ம்மருங்கு
ஓடி
அழல்வழி வந்தியாம் அசைந்தனம்
வதி்ந்த
பொழில்வயின் புதைத்தனம் புகற்குஅரி
தாகத்
தெரிவில் கொள்கையின் நெரிதலைக்
கொளீஇயினிர் 105
அவ்அழல் ஆறும் மாத்திரம்
இவ்வழி
நில்மின் நீர்என மன்ன
குமரன்
தெளியக் கூறப் புளிஞர் தேறி |
உரை
|
|
|
எவ்வ
ழிஆயினும் எரிஅவித்து
அவ்வழிக்
காணல் உறுதும் காட்டாய் ஆயின்
110 ஆணம் முன்கை அடுதும் யாம்என |
உரை
|
|
|
நன்கை யாத்தது நன்று
நொந்துஇவன்
கவிகைக்கு ஏலாது கட்டுஎனக்
கலிழ்ந்தோள்
அவிர்துழல் கானத்து அருள்இ
லாளர்
அடுதும் எனவே அமர்ப்பிணை
போலத் 115 தீஉறு
தளிரின் மாநிறம்
மழுங்க
மாழை ஒண்கண் ஊழூழ்
மல்க
மம்மர் உள்ளமொடு மடத்தை மாழ்க |
உரை
|
|
|
மாழ்கிய மாதரை வாங்குபு
தழீஇக்
கனவளைப் பணைத்தோள் காஞ்சன மாலை
120 புனவளைத் தோளி பொழில்அகங்
காவனம்
பெருமான் செல்வம் பேணாய்
மற்றுஇவ்
வரிமான் அன்னோற்கு ஆருயிர்
கொடீஇய
போந்தனை யோஎனத் தான்பா
ராட்டி
இரங்குவது நோக்கி இறைமகன் கூறும் |
உரை
|
|
|
125 வருந்துதல் தவிரயாம்
வழிஇடைப் புதைத்த
அருங்கலப் பேரணிப் பெருங்கலம்
கருதின்யாப்
புறுமுறை பின்இடத்து அறிமின்
மற்றுஇவள்
நீப்பருந் துயரம் நெறிவயின்
ஓம்பித்
தீப்புகை தீர்தலும் காட்டுதும் சென்றுஎனக் |
உரை
|
|
|
130 கையகப் பட்டோன்
பொய்உரைத்
தனன்எனின்
உய்வகை இலைஇவன் உரைத்ததை
எல்லாம்
செய்தும் யாம்என வெவ்வினை
யாளர்
மையணி யானை தாங்கித்
தழும்பிய
கையாப்பு ஒழித்துக் காத்தனர் நிற்ப |
உரை
|
|
|
135 வாவிப் புள்ளின் தூவி
விம்மிய
அணைமிசை அசைந்த அம்மென்
சிறுபுறம்
மணல்மிசை அசைந்து மாக்கவின்
வாட
அறியாது வருந்திய ஆருயிர்த்
துணைவியைப்
பொறியார் தடக்கையில் போற்றுபு
தழீஇப் 140
பூங்குழல் குருசி தேங்கொளத்
தீண்ட
நீலத் தண்மலர் நீர்ப்பட்
டனபோல்
கோலக் கண்மலர் குளிர்முத்து
உறைப்ப
அவலங் கொள்ளும் அவ்வரைக் கண்ணே |
உரை
|
|
|
கவலை
உள்ளமொடு கங்குல் போகிய 145
வயந்தக குமரன் வந்துகாட்டு
ஒதுங்கிக்
கன்றுஒழி கறவையின் சென்றுஅவண்
எய்திக்
காப்புடை மூதூர்க் கடைமுகம் குறுகி |
உரை
|
|
|
யாப்புடை நண்பின் ஏற்றுப்
பெயரன்
வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வரப்
150 பெருநலத் தானைப் பிரச்சோ
தனன்தமர்
இருநிலக் கிழமை ஏயலர்
இறைவன்
வென்றியும் விறலும் விழுத்தகு
விஞ்சையும்
ஒன்றிய நண்பும் ஊக்கமும்
உயர்ச்சியும்
ஒழுக்கம் நுனித்த உயர்வும்
இழுக்கா 156 அமைச்சின்
அமைதியும் அளியும்
அறனும்
சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த
ஆற்றலும்
வெங்கோல் வெறுப்பும் செங்கோல்
செவ்வமும்
செருக்கிச் செல்லும் செலவின
என்றுதம்
தருக்கிய தலைத்தாள் தானைச்
செல்வப் 160 பெருமகன்
தெளீஇத்தம் மருமதி மேம்படக் |
உரை
|
|
|
கய்ந்நவில் ஆளனை எஃகுள்
அடக்கிய
பொய்ந்நிலங் காட்டினர் என்பதோர்
பொய்ம்மொழி
வெந்நில மருங்கின் வேட்டுவர்
எல்லாம்
போற்றார் எரைத்த மாற்றம்
பட்டதை 165
நீலைக்கொண்டு அமைந்து நிரம்பாத்
தம்நிலம்
கலக்கம் அறிந்த கவற்சியன்
ஆகி
மன்னுயிர் காவலன்கு அம்மொழி
மெய்எனின்
இன்னுயிர் துறக்கும்என்று எண்ணருஞ்
சூழ்ச்சியன்
உற்றதை உணரும் ஒற்றாள் இளையனை
170 வருகென நின்றோன் வயந்தகன் கண்டே |
உரை
|
|
|
உயிர்த்துணைத் தோழன் உளஎன
உவந்து
பெயர்ச்சியில் உலகம் பெற்றான்
போலச்
செந்தா மரைக்கண் காவலன்
செவ்வியை
முந்துறக் கேட்ட பின்றை மற்றவன்
175 வந்ததை உணர்குநன் மந்திரம் இருந்துழிச் |
உரை
|
|
|
சிறைகொள் மன்னவன் துறைகொள்
விழவினுள்
இகழ்வொடு பட்ட இயற்கை
நோக்கிப்
பவழச் செவ்வாய்ப் பாவையைத்
தழீஇ
இருளிடைப் போந்ததும் இரும்பிடி
இறுதியும் 180 இற்ற
இரும்பிடிப் பக்கம்
நீங்கலும்
தெருளக் கூறித் தீதுஇல்
காலத்துப்
பெருமுது தேவி உரிமைப்
பள்ளியுள்
செருமுரண் செல்வன் பெருவிரல்
பிடித்தவற்கு
அறியக் கூறிய அடையாண் கிளவியும்
185 செறியச் செய்த சிறப்பும்
ஆண்மையும்
அருந்தொழில் அந்தணன் சுருங்கச் சொல்லலும் |
உரை
|
|
|
விரைந்தனம் செல்கென வெம்படை
தொகுத்து
வேழமும் புரவியும் பண்ணுக
விரைந்துஎனத்
தாழம் பறையொடு சங்கமணந்து
இயம்பக் 190 கடல்கிளர்ந்
ததுபோல் கால்படை
துவன்றி
அடல்அருங் குறும்பர்க்கு அறியப்
போக்கி
இடபகன் படையோடு எழுந்தனன் ஆகி |
உரை
|
|
|
விண்ணோர் விழையும் செண்ணக்
கோலத்துக்
கண்ணிய செலவில் கஞ்சிகை
வையம் 195 கண்ணி சூட்டிக்
கடைமணை பூட்டி
வண்ண மகளிர் கண்ணுறக்
கவினிய
உழைக்கலம் ஏந்தி உழைப்படர்ந்து
இயலப்
பொன்கலத்து இயன்ற நற்சுவை
அடடிசில்
காப்புபொறி ஒற்றி யாப்புற
ஏற்றித் 200 தனிமை
எய்திய மன்னனும்
தையலும்
அணியும் கலனும் அகன்பரி
யாளமும்
துணிவியல் சுற்றமும் தொடர்ந்துடன்
விட்டுப்
பின்வரவு அமைத்து முன்வரப் போகி |
உரை
|
|
|
வான்தொழில் வயந்தகன் காட்டக
மருங்கின் 205 அண்ணல்
இருந்த அறிகுறித்
தானம்
நண்ணல் உற்ற காலை
மன்னவன்
அம்புபட வீழ்ந்த வெங்கண்
மறவர்
உதிரப் பரப்பின் உருவுகெட
உண்ட
காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து
210 கோடுகொண்டு இருந்த குழாஅம்
நோக்கிக்
காடுகொள் மள்ளர் கதுமென
நடுங்கிப்
போர்க்களம் உண்மை பொய்த்தல்
இன்றென
நீர்க்கரைப் பொய்கை நெற்றிமுன்
இவந்த
முள்அரை யிலவம் ஒள்ளெரி சூழப்
215 பொங்குபுகை கழுமிய பூம்பொழில்
படாஅன்
இங்குநம் இறைவன் இருந்த
இடம்அவன்
ஏதம் பட்டனன் ஆதலின்
இன்னே
சாதல் பொருள்எனக் காதல்
கழுமி
வருபடை உய்த்த வயந்தகன் மாழ்கப் |
உரை
|
|
|
220 பொருபடை யாளர் புல்இடைத்
தெரிவோர்
வேட்டுவர் ராதல் ஆல்லிவில்
காட்டி
வாள்தொழில் வயந்தகன் வருத்தம்
ஓம்பிப்
பெருங்கணம் சென்ற பிறங்குபுல்
கானம்
பரந்தனர் செல்வோர் பாவையைத் தழீஇக் |
உரை
|
|
|
225 காவி கவினிய தாவில்
பொய்கையுள்
தனித்தாள் நிவந்த தாமரை
போலப்
பனித்தார் மார்பன் நிற்ப
மொய்த்துடன்
வளைத்தனர் வலக்கும் வயவரைக்
கண்டே
உளைப்பொலி மாவும் வேழமும்
ஊர்ந்தவர் 230 போஒந்
திசைவயின் புதைந்தனர் நிற்பக் |
உரை
|
|
|
கதிரகத்து இருந்த முதிர்குரல்
பறவை
போமின் வல்லே போதீர்
ஆயினும்
உயிர்த்தவல் உரைக்கும் என்பதை
உணர்ந்து
முந்துபுள் உரைத்த முதுமகன் கூற |
உரை
|
|
|
235 வெந்திறல் வேட்டுவர்
விரைந்தனர் ஆகி
அல்லி நறுந்தார் அண்ணலை
நலிய
ஒல்லா மறவர் ஒலித்தனர்
ஓடி
வேகப் புள்ளமொடு விசைத்தனர்
ஆர்த்துக்
கோடும் வயிரும் குழுமின
துவைப்பஅக் 240
கருந்தொழி லாளல் இருந்தலை
துமித்துப்
பெருந்தகைக் கிழவனைப் பேரா
மறவரை
இடுக்கண் செய்யுவும் மியல்பி
லாளர்
நடுக்க மெய்தக் குடைப்பெரும் தானை |
உரை
|
|
|
வத்தவர் இறைவனும் மெய்த்தகைத்
தாகத் 245 தமர்மேல்
வந்தமை தான்அகத்து
அடக்கி
நுமரோ மற்றிவர் பிறரோ
தாம்எனக்
கவர்கணை மொய்த்த கானத்து
இடைமறைத்து
எம்உயிர் காமின் எனவே ஆங்கவர் |
உரை
|
|
|
அடையார்க் கடந்த உதயன்
மந்திரி 250 இடபக
ன்என்போன் இறிபடை
தானிது
கோள்உலா எழுமெனின் கூற்றெனப்
பரந்த
நாள்உலாப் புறுத்தும் வாள்வலி
உடைத்தே
தெரிந்தனை நில்லா யாகி
எம்மொடு
புரிந்தனை போதும் போதாய்
ஆயின் 255 பிரிந்து
காண்பிறர் அருந்தலை
துமிப்பஎன்று
ஆர்வ வேட்டுவர் ரண்ணற்
குரைத்து வார்சிலை
அம்பொடு வாங்கிக்
கொள்கென
வீர வேந்தற்கு விரைந்தவர் ஈயா |
உரை
|
|
|
முற்பகல் செய்வினை பிற்பகல்
உறுநரின் 260 பார்வை நின்றும்
பதுக்கையுள்
கிடந்தும்
போர்வைப் புல்லுள் பொதிந்தனர்
ஒளித்தும்
கழுக்குநிரை இருந்தும் கால்இயல்
புரவி
விழுக்குநிணம் பரிய விடுகணை
விட்டும்
கோலிய வல்வில் குமரரை
மாட்டியும் 265 வேலியல் ஆளரை
வீழ நூறியும்
வெங்கணை வாளியுள் விளிந்தனர் வீழப் |
உரை
|
|
|
பைங்கண் வேழத்துப் படைத்திறல்
வேந்தன்
தமர்வழங்கு படையும் அவர்வழங்கு
வாளியும்
பொன்இழை மாதரொடு தன்வயின்
காத்து 270 மரம்பயில் அழுவத்து
மறைந்தனன் நிற்ப
உரங்கெழு மறவலர் உதயணன்
ஒழிய
மத்துஉறு கடலில் தத்துறு நெஞ்சினர் |
உரை
|
|
|
பைவரி நாகத்து ஐவாய்ப்
பிறந்த
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம்
போல 275 ஒழிந்தோர்
ரொழியக் கழிந்தோர்
காணா
ஆறுகொள் மாந்தர்க்கு அச்சம்
எய்தி
ஏறுபெற்று இகந்த பின்றை
வீறுபெற்று
அம்கண் விசும்பின் திங்களைச்
சூழ்ந்த
வெண்மீன் போல வென்றி எய்திப்
280 பன்மாண் படைஞர் பரந்தனர்
சூழ
மலிந்தவண் ஏறி வத்தவர்
பெருமகன்
கலிந்த துன்பம் கைஇகந்து
அகலப்
பொலிந்தனன் ஏனப் பொருபடை இடைஎன் |
உரை
|
|