| 38. விழா 
 வாத்திரை | 
 
 | இதன்கண் : அரண்மனையிலே 
 உறையும் பிரச்சோதன மன்னனும் கோப்பெருந்தேவி முதலிய உரிமை மகளிரும் வாசவ தத்தையும் தோழியரும் உதயண குமரனும் மன்னன் மைந்தரும் பிறரும் 
 நகரமாந்தரும் நீர்விழாவின் பொருட்டு நகர்க்குப்
 புறத்தே உள்ள பொய்கைக் கரையை 
 அடைதலும் பிறவும் கூறப்படும்.
 | 
 
 |  | 
 
 | 
 
 
 5
 |  விரைந்தனர் 
 கொண்ட விரிநீர் ஆத்திரைபுரிந்துடன் அயரும் 
 பொலிவின தாகி
 மல்லன் மூதூர் எல்லாச் 
 சேரியும்
 பயிர்வளை அரவமொடு வயிரெடுத் 
 தூதி
 இடிமுரசு எறிந்த எழுச்சித் 
 தாகி
 யாழுங் குழலும் இயம்பிய மறுகில்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 10
 
 
 
 
 15
 |  மாலை அணிந்த மணிக்காழ்ப் 
 படாகையொடுகால்புடைத்து அடுத்த கதலிகை 
 நெடுங்கொடி
 ஆர்வ மகளிரும் ஆய்கழல் மைந்தரும்
 வீர குமரரும் விரும்புவனர் 
 ஏறிய
 மாவுங் களிறும் மருப்பியல் 
 ஊர்தியும்
 காலிரும் பிடியும் கடுங்கால் 
 பிடிகையும்
 தேரும் மாக்களுந் தெருவகத்து 
 எடுத்த
 எழுதுகள் சூழ்ந்து மழுகுபு 
 மாழ்கிப்
 பகலோன் 
 கெடுமெனப் பாற்றுவன 
 போல
 அகலிரு வானத் துகள்துடைத்து ஆட
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 20
 |  விசும்புற நிமிர்ந்த பசும்பொன் 
 மாடத்துவெண்சுடர் வீதி விலக்குவனர் 
 போல
 எண்ணரும் 
 பல்படை இயக்கிடம் பெறாஅ
 நகர நம்பியந் அரச 
 குமரர்
 நிறைகளிறு இவைகான் நீங்குமின் எனவும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 25
 |  இறைவன் ஆணை ஈங்கெவன் 
 செய்யும்புதல்வர் ஆணை புதுநீர் ஆட்டெனச்
 சிறாஅர் மொய்த்த அறாஅ 
 விருப்பில்
 கம்பலைத் 
 தெருவின் எம்பரும் 
 எடுத்த
 குடையுங் கொடியுங் கூந்தல் 
 பிச்சமும்
 அடல்வேல் யானை அடங்குங் 
 காழும்
 களிறெறி கவிரியொடு காண்டக மயங்கிப்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 30
 |  பெருநீர்க் கருங்கடல் துளுப்பிட் 
 டதுபோல்ஒண்நுதல் 
 மகளிர் உண்கண் 
 நிரைத்த
 கஞ்சிகை துளங்கக் கயிற்றுவரை 
 நில்லாச்
 செஞ்சுவற் பாண்டியஞ் செல்கதி 
 (பெறாஅ)
 குரைத்தெழுந் துகளுங் குரம்புவி 
 நிரைத்துடன்
 சங்கிசை வெரீஇச் சால்பில பொங்கலின்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 35 
 
 
 
 40
 |  அவிழ்ந்த கூந்தல் 
 அங்கையின் 
 அடைச்சிஅரிந்துகால் பரிந்த கோதையர் 
 ஆகத்துப்
 பரிந்துகாழ் உகுத்த முத்தினர் 
 பாகர்க்குக்
 காப்பு நேரிய கூப்பிய 
 கையினர்
 இடுக்கண் இரப்போர் நடுக்கம் 
 நோக்கி
 அரறுவ 
 போல ஆர்க்குந் 
 தாரோடு
 உரறுபு தெளித்துக் கழறும் 
 பாகர்
 வைய நிரையும் வயப்பிடி ஒழுக்கும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 45
 |  கைபுனை சிவிகையுங் கச்சணி 
 மாடமும்செற்றுபு செறிந்தவை மொக்குள் ஆக
 மக்கள் 
 பெருங்கடல் மடைதிறந் 
 ததுபோல்
 எத்திசை மருங்கினும் இவர்ந்துமே 
 லோங்கிய
 கட்டளை வாயில் இவர்வனர் கழிந்து
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 50
 
 
 
 
 55
 |  வரம்பில் பல்சனம் பரந்த 
 பழனத்துஆற்றிரு கரையின் அசோகம் 
 பொழிலினும்
 காய்த்தொசி எருத்தின் கமுகிளந் 
 தோட்டமும்
 மயிலுங் குழிலும் மந்தியுங் 
 கிளியும்
 பயில்பூம் பொதும்பினும் பன்மலர்க் 
 காவுதொறும்
 உயரத் தொடுத்த வூசலது 
 ஆகி
 மரந்தொறும் மொய்த்த மாந்தர்த் 
 தாகிப்
 புறங்கவின் கொண்ட நிறங்கிளர் 
 செல்வத்து
 ஊரங் காடி உய்த்துவைத் 
 ததுபோல்
 நீரங் காடி நெறிப்பட 
 நாட்டிக்
 கூல வாழ்நர் கோன்முறை குத்திய
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 60
 
 
 
 
 65
 |  நீலக் கண்ட நிரைத்த 
 மருங்கின்உண்ண மதுவும் முரைக்கும் 
 நானமும்
 சுண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் 
 கோதையும்
 அணியும் கலனும் ஆடையும் 
 நிறைந்த
 கண்ணகன் கடைகள் ஒண்ணுதல் 
 ஆயத்துக்
 கன்னி மாண்டுழித் துன்னுபு 
 நசைஇய
 தூதுவர் 
 போல மூசின குழீஇ
 ஆணைத் தடைஇய நூனெறி 
 அவையத்துக்
 கல்வி யாளார் சொல்லிசை 
 போல
 வேட்போர் இன்றி வெறிய வாக
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 70
 
 
 
 
 75
 |  மாக்க உழிதரு மணல்நெடுந் தெருவின்மடலிவர் போந்தை மதர்வைவெண் 
 தோட்டினும்
 படலைவெண் சாந்தினும் படத்தினும் 
 இயன்ற
 பந்தரும் படப்பும் பரந்த 
 பாடி
 அந்தமும் ஆதியும் அறிவருங் 
 குரைத்த
 யோசனை அகலத்து ஒலிக்கும் 
 புள்ளில்
 தேவரும் விழையும் திருநீர்ப் 
 பொய்கைக்
 கரையுங் கழியுங் கானலுந் துறையும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 80
 
 
 
 
 85
 |  நிறைவளை மகளிர் நீர்பாய் 
 மாடமொடுமிடைபுதலை மணந்த மேதகு 
 வனப்பில்
 கடல்கண் கூடிய காலம் போல
 நூல்வினை நுனித்த நுண்வினைப் 
 படாத்துத்
 தானக மாடமொடு தலைமணந்து 
 ஓங்கிய
 வம்புவரி கொட்டிலொடு வண்டிரை 
 மயங்கிச்
 செவ்வான் முகிலிற் செறிந்த 
 செல்வத்து
 எவ்வாய் மருங்கினும் இடையறக் 
 குழீஇ
 ஊரிறை 
 கொண்ட நீர்நிறை விழவினுள்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 |  |  இறைவன் பணியென்று இறைகொண்டு ஈண்டிநிறைபுனல் புகாஅர் நின்னகத் 
 தோரென
 விழாக்கோள் ஆளர் விரைந்துசென்று உரைத்தலும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 90
 |  உவாக்கடல் ஒலியின் உரிமையொடு 
 உராஅய்விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் 
 முருக்கி
 எழாநிலை புகாஅ இனங்கடி 
 சீற்றத்து
 ஆணை யிகக்கும் அடக்கருங் 
 களிறு
 சேணிகந்து உறைந்த சேனையில் கடிகென
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 95
 
 
 
 
 100
 |  வேந்துபிழைத்து அகன்ற வினைவர் 
 ஆயினும்சேர்ந்தோர்த் தப்பிய செறுநர் 
 ஆயினும்
 கலங்கவர்ந்து அகன்ற கள்வர் 
 ஆயினும்
 நிலம்பெயர்ந்து உறைதல் நெடுந்தகை 
 வேண்டான்
 தொகுதந்து ஈண்டிக் கிளைஞர் 
 ஆகிப்
 புகுதந்து ஈகஇப் புனலாட்டு 
 அகத்தெனச்
 சாற்றிடக் கொண்ட வேற்றுரி 
 முரசம்
 திருநகர் மூதூர்த் தெருவுதோறு 
 எருக்கி
 மெய்காப் பிளையர் அல்லது 
 கைகூர்ந்து
 இடைகொள வரினும் இருபத் 
 தொருநாள்
 படைகொளப் பெறாஅப் படிவத் தானையன்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 105 
 
 
 
 110
 
 
 
 
 115
 
 
 
 
 120
 |  தாழ்புனல் தாரையுந் தமரொடு தருக்கும்நாழிகைத் தூம்பும் நறுமலர்ப் 
 பந்தும்
 சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் 
 கோடுமென்று
 எண்ணிய பிறவும் இளையோர்க்கு 
 கியைந்த
 புனலகத்து உதவும் போகக் கருவி
 பணைஎருத் தேற்றிப் பண்ணின 
 வாகி
 மாலையும் மணியும் மத்தகப் 
 பட்டும்
 கோதையும் அணிந்த கோலம் உடையன
 திருநீர் ஆட்டினுள் தேவியர்க்கு 
 ஆவன
 மேவிய வனப்பொடு மிசைபிறர்ப் 
 பொறாதன
 பாகர் ஊரப் 
 பக்கம் செல்வன
 ஆறாட்டு இளம்பிடி ஆயிரத் 
 தங்கண்
 குறும்பொறை மருங்கில் குன்றம் 
 போல
 இருநிலம் நனைப்ப இழிதரு 
 கடாத்துக்
 கைம்மிக்க் களித்த கவுளது ஆயினும்
 செயிர்கொள் மன்னர் செருவிடத்து 
 அல்லது
 உயிர்நடுக் குறாஅ வேழம் பண்ணி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 125
 
 
 
 
 130
 
 
 
 
 135
 
 
 
 
 140
 |  அரசுகை கொடுப்ப அண்ணாந்து 
 இயலிக்கடிகை ஆரங் கழுத்தின் 
 மின்னப்
 பயிர்கொள் வேழத்துப் பணையெருத்து 
 இரீஇக்
 கடவுட்கு 
 அல்லது கால்துளக்கு 
 இல்லது
 தடவுநிலை நிழற்றிய தாம 
 வெண்குடை
 ஏந்திய நீழல் சாந்துகண் 
 புலர்த்திய
 பரந்த கவரிப் படாகைச் 
 சுற்றத்து
 உயர்ந்த உழைக்கலத்து இயன்ற அணியின்
 முந்நீர் ஒலியின் முழங்கு 
 முரசமொடு
 இன்னீர் வெள்வளை யலறு 
 மார்ப்பின்
 மைத்துன மன்னரும் மந்திரத் 
 துணைவரும்
 அத்துணை சான்ற அந்த 
 ணாளரும்
 சுற்றுபு சூழ முற்றத்து ஏறிப்
 பிடியும் வையமும் வடிவமை 
 பிடிகையும்
 பெருந்தேன் ஒழுக்கில் பிணங்கிய 
 செலவின்
 வண்ண மகளிர் சுண்ணமொடு 
 சொரியும்
 மலர்தூ மாடம் மயங்கிய 
 மறுகில்
 நாட்பெரு வாயின் ஆறுநீர் 
 ஆத்திரை
 வாள்கெழு 
 நெடுந்தகை வளம்பட வெழலும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 145
 
 
 
 
 150
 
 
 
 
 155
 
 
 
 
 160
 |  உயவக் கொண்ட ஓவியத் 
 தண்டிகைஇயைகொள் வெள்ளியோடு இரும்பியாப்பு உறுத்து
 வான்கொடிப் பவழமொடு வல்லோர் 
 வகுத்த
 ஆன்கண் சந்தனத்து அரிக்கவறு பரப்பி
 முத்தும் மணியுஞ் சித்திரத்து 
 இயற்றிப்
 பத்தி பயின்ற கட்டகக் 
 கம்மத்து
 மருப்பிடைப் பயின்ற மாசறு 
 மணித்தொழில்
 பரப்பமை 
 பலகையொடு பாசுணங் 
 கோலி
 ஐவகை வண்ணமும் ஆகரித்து ஊட்டிக்
 கைவினை நுனித்த கச்சணி 
 கஞ்சிகை
 பசும்பொன் குயின்ற பத்திப் 
 போர்வை
 அசும்பில் தேயா அலர்கதிர் 
 ஆழி
 பாடின் படுமணி ஊடுறுத்து 
 இரங்க
 மாலை அணிந்த மணித்தொழில் பாண்டியம்
 நூல்பிணித்து இன்நுகம் நோன்சுவல் 
 கொளீஇக்
 கோல்கொள் கன்னியர் மேல்கொண்டு 
 ஏறி
 விசிபிணி அறுத்த வெண்கோட்டு 
 ஊர்தி
 முரசெறி முற்றத்து முந்துவந்து 
 ஏறும்
 அரச மங்கையர் அடிமிசைக் கொண்ட
 கிண்கிணி மயங்கிய தண்பெருங் கோயில்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 165
 
 
 
 
 170
 |  கடைப்பகச் 
 செப்பே கவரி 
 குஞ்சம்அடைப்பைச் சுற்றமொடு அன்னவை 
 பிறவும்
 அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்
 மணிசெய் வள்ளமும் மதுமகிழ் 
 குடமும்
 பூப்பெய் 
 செப்பும் புகைஅகில் 
 அறையும்
 சீப்பிடு சிக்கமும் செம்பொன் 
 கலசமும்
 காப்பியக் கோசமும் கட்டிலும் 
 பள்ளியும்
 சுட்டிக் கலனும் சுண்ணகக் 
 குற்றியும்
 வட்டிகைப் பலகையும் வருமுலைக் 
 கக்சும்
 முட்டுஇணை வட்டும் முகக்கண் 
 ஆடியும்
 நக்கிரப் பலகையும் நறுஞ்சாந்து 
 அம்மியும்
 கழுத்திடு கழங்கும் கவறும் கண்ணியும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 175
 
 
 
 
 180
 |  பந்தும் பாவையும் பைங்கிளிக் 
 கூடும்யாழும் 
 குழலும் அரிச்சிறு பறையும்
 தாழ முழவமும் தண்ணுமைக் 
 கருவியும்
 ஆயத்து உதவும் அரூம்பெறல் 
 மரபின்
 போகக் கலப்பையும் பொறுத்தனர் 
 மயங்கிக்
 கூனும் குறளும் மாணிழை மகளிரும்
 திருநுதல் ஆயத்துத் தேவிய ஏறிய
 பெருங்கோட்டு ஊர்திப் பின்பின் 
 பிணங்கிச்
 செலவுகண் உற்ற பொழுதில் பலருடன்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 185
 |  பண்டுஇவ் வாழ்வினைத் தண்டியுங் 
 கொள்வோள்இன்றுஇந் நங்கை கண்டதை 
 உண்டுகொல்
 பாணி செய்தனள் காண்மின் 
 சென்றென
 ஏறிய வையத்து 
 எடுத்த கஞ்சிகைத்
 தேறுஉவா மதியின் திருமுகம் 
 சுடரக்
 கதிர்விரல் கவியலுள் கண்ணிணை 
 பிறழ
 நெருக்குறு சுற்றத்து விருப்பின் 
 நோக்கி
 ஒட்டிழை மகளிரை விட்டனர் நிற்பச்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 190 
 
 
 
 195
 
 
 
 
 2000
 
 
 
 
 205
 |  சுட்டுருக்கு அகிலின் 
 வட்டித்துக் கலந்தவண்ண விலேகை நுண்ணிதின் 
 வாங்கி
 இடைமுலை யெழுச்சித்து ஆகிப் 
 புடைமுலை
 முத்திடைப் பரந்த சித்திரச் 
 செய்கொடி
 முதலின் முன்னங் காட்டி நுதலின்
 சுட்டியிற் றோன்றிய சுருளிற் 
 றாகி
 வித்தகத் தியன்றதன் கைத்தொழில் 
 காட்டி
 இன்னிசை வீணை அன்றியும் 
 நின்வயின்
 உதயண நம்பி ஓவியத் 
 தொழிலின்
 வகையறி உபாயமும் வல்லை ஆகெனத்
 தந்ததும் உண்டோ பைந்தொடி கூறுஎன
 உற்ற புருவத்து ஒராஅ 
 ராகி
 முற்றிழை மகளிர் முறுவல் 
 பயிற்றச்
 செழுங்குரல் முரசின் சேனா 
 பதிமகள்
 ஒருங்குயிர் கலந்த உவகைத் 
 தோழியை
 நறுநீர்க் 
 கோலத்துக் கதிர்நலம் 
 புனைஇயர்
 நீடகத் திருந்த வாசவ தத்தையை
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 210
 |  நீசெலற் பாணிநின் றாய 
 ரெல்லாம்தாரணி வையந் தலைக்கடை 
 நிறீஇ
 நின்றனர் திருவே சென்றிடு 
 விரைந்தென
 விளங்குபொன் அறையுள விழுநிதிப் 
 பேழையுள்
 இளங்கலந் தழீஇ எண்ணிமெய்ந் 
 நோக்கித்
 தோழியர்க்கு எல்லாம் ஊழுழ் நல்கி
 வதுவை வையம் ஏறினள் போலப்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 215
 
 
 
 
 220
 
 
 
 
 225
 |  புதுவது மகிழ்ந்த புகற்சியள் ஆகிப்பதும காரிகை மகள்முகம் 
 நோக்கித்
 தனித்துஞ் சேனைப் பனித்துறைப் 
 படியின்
 நீரின் வந்த காரிகை 
 நேர்த்தது
 துகள்தீர் இருந்தவத் துணிவின் 
 முற்றி
 முகடுயர் உலகம் முன்னிய முனிவரும்
 கண்டால் கண்டவாங் கதிர்ப்பின 
 வாகி
 தண்டாப் பெருந்துயர் தருமிவள் 
 கண்ணென
 உண்மலி உவகையள் ஆகித் 
 தன்மகள்
 இனவளை ஆயத் திளையர் 
 கேட்பப்
 புனல்விளை ஆட்டினுள் போற்றுமின் 
 சென்றென
 ஓம்படைக் 
 கிளவி பாங்குறப் 
 பயிற்றி
 ஆங்கவர் உள்ளும் மடைக்கல 
 நினக்கெனக்
 காஞ்சன மாலைக்குக் கைப்படுத் தொழிந்தபின்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 230
 |  ஏற்ற 
 கோலத்து இயம்புங் 
 கிண்கிணிநூற்றுவர் தோழியர் போற்றியல் கூறத்
 தெய்வச் சுற்றத்துத் திருநடந் 
 ததுபோற்
 பையென் சாயலொடு பாணியின் 
 ஒதுங்கி
 உறைத்தெழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 235
 
 
 
 
 240
 |  யவனக் கைவினை ஆரியர் 
 புனைந்ததுதமனியத்து இயன்ற தாமரை போலப்
 பவழமும் மணியும் பல்வினைப் 
 பளிங்கும்
 தவழ்கதிர் முத்துந் தானத்து 
 அணிந்தது
 விலைவரம் பறியா வெறுக்கையுள் 
 மிக்க
 தலைஅள வியன்றது தனக்கிணை 
 இல்லது
 தாயொடு வந்த தலைப்பெரு வையம்
 வாயின் முற்றத்து வயங்கிழை 
 ஏறப்
 பாத பீடிகை பக்கஞ் சேர்த்தலும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 245
 |  செந்நூல் விசித்த நுண்ணுக 
 நுழைந்தஇலக்கணப் பாண்டியம் வலத்தின் 
 நெற்றிக்
 கண்ணி பரிந்து கடிக்குளம் பிளகலும்
 பண்ணிய வையம் பள்ளி 
 புகுகென
 மூதறி பாகன் ஏறல் 
 இயையான்
 இலக்கணம் இன்றென விலக்கினன் கடிய
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 250
 
 
 
 
 255
 |  ஆடகப் பொற்கவறு அணிபெறப் 
 பரப்பிக்கூடங் குத்திய கொழுங்காழ்க்கு ஏற்ப
 நாசிகைத் தானத்து நகைமுத்து அணிந்து
 மாசறு மணிக்கால் மருப்புக் 
 குடம்இரீஇ
 அரக்குருக் கூட்டிய அரத்தக் 
 கஞ்சிகைக்
 கரப்பறை விதானமொடு கட்டில் 
 உடையது
 கோதை புனைந்த மேதகு வனப்பின்
 மல்லர் பூண்ட மாடச் சிவிகை
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 260
 |  பல்வளை ஆயத்துப் பைந்தொடி ஏறலும்செய்யோள் அமர்ந்த செம்பொன் 
 தாமரை
 வள்ளிதழ் பொதிந்த கொட்டை 
 போல
 மெல்லியல் மாதரை உள்ளகம் புகுத்தி
 மல்லல் பெருங்கிளை செல்வழிப் படர
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 265
 
 
 
 
 270
 |  முனிவர் ஆயினும் மூத்தோர் 
 ஆயினும்எனையீர் பிறரும் எதிர்வரப் 
 பெறீரென
 வானுறை உலகினும் வையக 
 வரைப்பினும்
 தான விளைவினும் தவத்தது 
 பயத்தினும்
 எண்ணரும் 
 பல்லுயிர் எய்தும் 
 வெறுக்கையுள்
 பெண்டிருள் மிக்க பெரும்பொருள் இன்மையின்
 உயிரெனப் படுவது உரிமை 
 ஆதலின்
 செயிரிடை இட்டது செல்வன் 
 காப்பென
 ஆறுகடி முரசம் அஞ்சுவரக் கொட்டிக்
 காவ லாளர் கால்புறஞ் சுற்றப்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 275
 |  புயல்மலை தொடுத்துப் பூமலர் 
 துதைந்துவியன்கா மண்டிய வெள்ளம் 
 போல
 மாட மூதூர் மறுகுஇடை 
 மண்டிக்
 கோடுற நிவந்து மாதிரத்து உழிதரும்
 கொண்மூக் குழாத்தில் கண்ணுற 
 மயங்கி
 ஒண்ணுதல் மகளிர் ஊர்தி 
 ஒழுக்கினம்
 புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை 
 முன்னித்
 தண்பொழில் கவைஇய சண்பகக் 
 காவில்
 கண்டோர் மருளக் கண்டத்து இறுத்த
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 280 
 
 
 
 285
 
 
 
 
 290
 |  விழாமலி சுற்றமொடு 
 வெண்மணல் 
 ஏறிநாள்அத் தாணி வாலவை நடுவண்
 நிரந்தநீர் விழவினுள் இரந்தோர்க்கு 
 ஈக்கெனப்
 பன்னீர் ஆயிரம் பசும்பொன் 
 மாசையும்
 குவளைக் கண்ணியுங் குங்குமக் குவையும்
 கலிங்க வட்டியுங் கலம்பெய் 
 பேழையும்
 பொறிஒற்று அமைந்த குறியொடு 
 கொண்ட
 உழைக்காப் பாளர் உள்ளுறுத்து 
 இயன்ற
 இழைக்கல மகளிர் இருநூற் 
 றுவரோடு
 யாழறி 
 வித்தகற்கு ஊர்தி யாவது
 கண்டுகொண் மாத்திரை வந்தது செல்கெனத்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 295
 
 
 
 
 300
 |  தனக்கென்று ஆய்ந்த தலையிரும் 
 பிடிகளுள்இலக்கணக் கருமம் எட்டா 
 முறையது
 மதியோர் புகழ்ந்த மங்கல 
 யாக்கையொடு
 விதியோர் கொளுத்திய வீரியம் 
 உடையது
 சேய்ச்செல 
 னோன்பரிச் சீலச் 
 செய்தொழில்
 பூச்செய் கோலத்துப் பொலிந்த 
 பொற்படை
 மத்தக மாலையொடு மணமகள் 
 போல்வது
 உத்தரா பதத்தும் ஒப்புமை 
 யில்லாப்
 பத்திரா பதியே பண்ணிச் 
 செல்கென
 உதயண குமரற்கு 
 இயைவன பிறவும்
 உழைக்கலம் மெல்லாந் தலைச்செல விட்டு
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 305
 
 
 
 
 310
 |  வல்லே வருகவில் லாளன் 
 விரைந்தெனவிட்ட மாற்றம் பெட்டனன் 
 பேணிச்
 சென்ற காட்சிச் சிவேதனைக் 
 காட்டிப்
 பொன்னறை காவலர் 
 பொறிவயின் 
 படுகெனச்
 செண்ணம் மகளிர் செப்பில் 
 காட்டிய
 வண்ணம் சூட்டின கண்ணியில் 
 கிடந்த
 பனிப்பூங் குவளை பயத்தின் 
 வளர்த்த
 தனிப்பூப் பிடித்த தடக்கையன் 
 ஆகி
 நெடுநிலை மாநகர் 
 நில்லான் போதந்து
 இடுமணல் முற்றத்து இளையருள் 
 இயன்று
 படுமணி இரும்பிடிப் பக்கம் நண்ணிப்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 315
 
 
 
 
 320
 |  பொலிந்த திருவில் பொற்புடைத் 
 தாகிமலிந்த யாக்கையின் மங்கலம் 
 மிக்கதன்
 வனப்பிற்கு 
 ஒவ்வா வாழ்விற்று ஆகி
 வாழ்நாள் அற்ற வகையிற்று 
 ஆயினும்
 கணைச்செல வொழிக்குங் கடுமைத்து 
 இதுவென
 மனத்திற் கொண்ட மதியன் 
 ஆகிக்
 கண்டே புகன்ற தண்டா உவகையன்
 தாரணி இரும்பிடி தலைக்கடை 
 இரீஇ
 ஏரணி எருத்தம் இறைமகன் ஏறலும்
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 
 325
 |  தூய்மை இன்றென மாநிலத்து 
 இயங்காக்கடவுள் இயக்கம் கற்குவ 
 போலக்
 குளம்புநிலன் உறுத்தலும் குறையென 
 நாணிக்
 கதழ்ந்துவிசை 
 பரிக்குங் கால 
 வாகி
 உரத்தகைப் பொற்றார் அற்று 
 மார்ப்பில்
 பந்துபுடை பாணியிற் பொங்குமயிர்ப் புரவி
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 
 330
 
 
 
 
 335
 
 
 
 
 340
 |  மருங்கிரு மணிப்புடை நிரந்துடன் 
 மிளிரநான்முகங் கவைஇய வான்செய் 
 பச்சைய
 தானச்செங் 
 கோட்டுத் தோல்மணைப் 
 படுத்த
 சித்திரத் தவிசில் செறிந்த 
 குறங்கில்
 பொற்றொடர் பொலிந்த பூந்துகில் 
 கச்சைய
 கத்திகை சிதர்மணி கட்கத்துத் 
 தெரிப்ப
 வித்தக நம்பியர் பக்கத்து 
 வலித்த
 கானத்துக் குலைந்த 
 கவரி உச்சிய
 தானைத் தலைப்படை பாணியில் 
 பரிப்ப
 அச்செறி புலவர் அளவுகொண்டு 
 அமைத்துக்
 கட்கம் நுனித்த கடைக்கண் 
 திண்நுகம்
 கொய்சுவல் இரட்டை மெய்யுறக் 
 கொளீஇ
 ஒட்டிடை 
 விட்ட கட்டின 
 வாயினும்
 ஒன்றிநின்று இயங்காச் சென்றிடை 
 கூடுவ
 மாயங் காட்டுநர் மறையப் 
 புணர்த்த
 கோவை நாழிகைக் கொழூஉக்கண் 
 கடுப்ப
 வடுச்சொல் நீங்கிய வயங்கிய வருணத்து
 | 
 
 உரை | 
 
 |  | 
 
 | 345 
 
 
 
 350
 | இடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர் உள்ளுறக் கோத்த வள்புகொள் 
 வலித்தொழில்
 பாகர் நின்ற பண்ணமை நெடுந்தேர்
 ஆக........................புறஞ்சுற்றக்
 காலியற் 
 புரவியொடு களிறுபல பரப்பிப்
 பால குமரர் படையகப் படுப்ப
 உருவச் செங்கொடி 
 தெருவத்துப் பரப்பிச்
 செருமிகும் தாமமொடு சேனையிற் கூடி
 மன்னவன் 
 இருந்த தண்பொழில் காவில்
 சென்றுஇறுத் தனரால் நம்பியர் ஒருங்கென்.
 | 
 
 உரை | 
 
 |  |