40. உவந்தவை காட்டல்

இதன்கண்: திருநீர்ப் பொய்கை விழாவின்கண் நகர மாக்கள் தாந்தாம் விரும்பிக் காணும் காட்சிகளைத் தம் உறவினர்க்கும் நண்பரக்குங் காட்டி மகிழ்தலும் பிறவுங் கூறப்படும்.
 




 
புரிந்த சுற்றமொடு புணர்ந்துடன் கெழீஇ
விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய
மறுநீங்கு சிறப்பின் மதிலும் சேனை
நறுநீர் விழவின் நாளணி கூறுவென்
 
5




10




15
 பனையும் வெதிரும் பாசிலைக் கமுகும்
இனையன பிறவும் புனைவனர் நாட்டிக்
கிடையும் பீலியும் இடைவரித்து அழுத்தி
மிடைவெண் துகிலின் இடைநிலங் கோலி
அரிச்சா லேகமுங் மார வள்ளியும்
 கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப
வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி
அள்ளிலை வாழை அகம்போழ்ந் திறுத்த
வெள்ளி வெண்திரள் வேண்டிடத்து ஊன்றிக்
கட்டளை நாசியொடு கபோதங் காட்டி
 எட்டிறை எய்திய இலக்கணக் காட்சி
ஏரணி யமைந்த எழுநில நல்வினை
நீரணி மாடத்து நிலாநெடு முற்றத்து
 


20
 

அரிப்பொன் கிண்கிணி ஆர்ப்ப இயலிக்
கருங்கண் மகளிர் கைபுடைத் தோப்ப
 இருங்கண் விசும்பகம் இறகுறப் பரப்பிக்
கருங்கயல் கொண்ட கவுள வாகிப்
பொங்கிரும் புன்னைப் பூம்பொழில் முன்னிச்
செங்கால் நாரை செல்வன காண்மின்

 

25




30




35

சாந்தரை...........யன கூலப் பெருங்கடை
 ஈண்டிய மாதரை ஈண்டிடந் தம்மினெம்
பூங்குழை மாதர் புனலகம் புக்கனள்
ஆங்கியன் றவளைத் தாங்குநர் இல்லெனக்
கூந்தல் நறுமண் சாந்தொடு கொண்டு
நானச் செப்பொடு கூன்பின் றுளங்கப்
 பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய
இருங்கை இளம்பிடி கடச்செருக்கு எய்திக்
கடிற்றுப் பாகன் கைப்புழிச் செல்லாது
தொடிக்கை மகளிர் நீர்குடை வெரீஇய
நெட்டிரும் பொய்கைக் குட்ட மண்டி
 ஒளிச்செந் தாமரைப் பாசடைப் பரப்பில்
களிக்கயல் இரியக் குளிப்பது காண்மின்

 



40

ஞாழற் படுசினை தோழியர் நூக்க
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைந்தொடி
செண்ணச் சிகழிகைப் பின்னிடை சேர்ந்த
 பொன்னரி மாலைதன் புறம்பிடைப் புடைப்பச்
செற்றப் புதவு குத்தி வாங்கிக்
கொழுநன் கூந்தல் கொண்டெனக் கருதிக்
கருநீர் உண்கண் கடையில் நோக்கி
அன்மையின் அழுங்கிய நன்நுதல் உவப்ப

 
45




50
 

 வள்ளிலைப் பரப்பின் வள்பெறிந் தன்ன
துள்ளியல் வட்டிகை துடிப்பிற் கடைஇ
உள்வழி யுணராது உழிதருங் கணவன்
நனிபெருங் காதலொடு நண்ணுவழி அடையப்
பனிவார் உண்கண் பைதல் மறைய
 முகிழ்ந்துவீங்கு இளமுலை முத்திடை நாற்றிக்
கவிழ்ந்தெருத்து இறைஞ்சுமோர் காரிகை காண்மின்

 



55




60

நீலக்குவளை நிரையிதழ் உடுத்த
கோலப் பாசடைப் பால்சொரிந்து அன்ன
தூவெள் அருஞ்சிறைச் சேவலொடு உளரிப்
 பள்ளி யன்னம் பகலில் துயிலா
வெள்வளை மகளிர் முள்குவநர் குடையும்
நீரொலி மயக்கிய ஊர்மலி பெருந்துறைக்
கடல்திரைக் கண்டங் கானற் குத்தி
மடல்பனை ஊசலொடு மாடம் ஓங்கிய
 உருவ வெண்மணல் பெருவெண் கோயிலுள்
செம்பொன் கிண்கிணிச் சேனா பதிமகள்

 



65




70




75

கம்பல் சுற்றமொடு கன்னியர் காப்பப்
பைந்தொடிக் கோமாள் நங்கையர் நடுவண்
வண்டுளர் ஐம்பால் வாசவ தத்தை
 அரைச மங்கையர் ஆயமொடு கெழீஇ
நிரைவெண் மாடத்து நீரணி காணிய
போதரும் என்னுங் காதலின் விரும்பிப்
பெருங்காற் பன்னக் கருங்கோட் டணைத்த
நாவாய் பண்ணு மாவிறல் மள்ளர்க்குக்
 கள்ளடு மகடூஉக் கைசோர்ந்து இட்ட
வெள்ளி வள்ளம் பல்லுறக் கவ்விக்
கூடக் கூம்பின் நீள்திரள் ஏறி
உச்சிக்கு இவருங் கட்கின் கடுவன்
வீழ்ந்த திங்களை விசும்புகொண் டேறும்
 தெய்வ மகாஅர் இனையுறத் தோன்றித்
துள்ளுபு திரிதருந் தோற்றங் காண்மின்

 



80




85




90

சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்
அழல்நறுந் தேறல் ஆர மாந்திக்
காழகம் மீக்கொண் டாழுந் தானையன்
 வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் சேனை
மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத்
துட்டக் கிளவி பெட்டவை பயிற்றிக்
கள்பகர் மகடூஉக் கள்குடை ஓசையும்
கன்னமர் பள்ளிக் கம்மியர் இடிக்கும்
 பன்மலர்க் காவின் அம்மனை வள்ளையும்
குழலும் யாழும் மழலை முழவமும்
முட்டின்று இயம்பும் பட்டினம் ஒரீஇத்
துறக்கம் கூடினும் துறந்துஇவண் நீங்கும்
பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி
 ஆர்த்த வாயன் ஊர்க்களி மூர்க்கன்

 




95

செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி
அவ்வழி வருமோர் அந்த ணாளனைச்
செல்லல் ஆணை நில்லிவண் நீயென
எய்தச் சென்று வைதுஅவண் விலக்கி
 வழுத்தினேம் உண்ணும்இவ் வடிநறுந் தேறலைப்
பழித்துக் கூறும்நின் பார்ப்பனக் கணமது
சொல்லா ஆயிற் புல்லுவென் யானெனக்
கையலைத்து ஓடுமோர் களிமகன் காண்மின்

 

100




105

பல்காசு நிரைஇய வல்குல் வெண்துகில்
 ஈரத் தானை நீரிடைச் சோரத்
தோட்டார் திருநுதல் சூட்டயல் சுடரும்
சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து
மகர குண்டல மறிந்துவில் வீசக்
கிளரும் பாசிழைக் கிண்கிணிக் கணைக்கால்
 அஞ்செஞ் சீறடி அஞ்சுவர ஓடி
நிரைவளை மகளிர் நீர்குடை வொரீஇப்
புரைபூங் கொண்டையிற் புகைப்பன காண்மின்

 


110




115




120
கருங்கால் புன்னையொடு இருங்கரும் புடுத்து
நாணல் கவைஇய கானல் ஒருசிறை
 மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த
அவிழ்பூங் கோதையோடு அவிர்இழை பொங்க
எக்கர்த் தாழை நீர்த்துறைத் தாழ்ந்த
நெடுவீழ் ஊசல் முடிபிணி ஏறித்
தொடுவேன் முற்றத்துத் தோழியோடு ஆடாப்
 பட்டியல் கண்டத்துப் பலர்மனம் கவற்றஓர்
எட்டி குமரன் இனிதின் இயக்கும்
இன்ஒலி வீணைப் பண்ஒலி வெரீஇ
வஞ்சிக் கொம்பர்த் துஞ்சரித் துளரி
ஒளிமயிர்க் கலாபம் பரப்பி யிவ்வோர்
 களிமயில் கணம்கொண்டு ஆடுவன காண்மின்
 




125




130

அதிரல் பரந்த வசோகந் தண்பொழில்
மணிக்கயத்து இயன்றல் மறுவித் நிண்ணிழல்
பனிப்பூங் குவளையொடு பாதிரி விரைஇ
வேதிகை யெறிந்த வெண்மணல் திண்ணைப்
 பாலிகைத் தாழியொடு பல்குடம் இரீஇ
முந்தீர்ப் பந்தர் முன்கடை நாட்டி
வரைவின் மாந்தர்க்குப் புரைபதம் பகரும்
கலம்பூச் சரவத்து இலஞ்சி முற்றத்துக்
கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி
 நெய்ச்சூட்டு இயன்ற சிறுபல் உண்டி
நகைப்பதம் மிகுத்த கையர் ஆகித்
தொகைக்கணம் போதரும் அறச்சோற்று அட்டில்

 


135
 

தளைஉலை வெந்த வளைவால் அரிசி
வண்ணப் புழுக்கல் உண்ணாது சிதறி
 ஊட்டெமக்கு ஈத்த கோப்பெருந் தேவி
முன்ன ராக முன்னுமின் கொண்டுஎனத்
தலைப்பெரு மடையனைத் தலைக்கடை வாங்கும்
எந்தயிர் வாரான் எமக்கெனச் சீறி
அந்த ணாளர் அலைப்பது காண்மின்

 
140




145

 முன்துறை ஈண்டிய குன்ற வெண்மணல்
எக்கர் மீமிசைத் தொக்கொருங்கு ஈண்டி
நுண்அயிர் வெண்துகள் குடங்கையின் வாரி
இலைப்பூண் கவைஇய எழுதுகொடி ஆகத்து
முலைக்கச்சு இளமுலை முகத்துஇலை அப்பி
 மராஅ மயிலின் மயங்குபு தூங்கும்
குழாஅ மகளிர் குரவை காண்மின்

 



150

புனைந்தேந்து அல்குல் காசுபுதை யாது
நனைந்து நிறங்கரந்த நார்நூல் வெண்துகில்
அரையது ஆகவும் ஆடைகா ணாது
 நிரைவளை முன்கைத் தோழியர் குடைந்த
நூரைக்கை அரிக்குமோர் நுடங்கிடை காண்மின்

 



155

தொக்கனர் படியும் தொய்யில் மகளிர்தம்
கைக்கொள் நீரில் கண்நிழல் கயல்என
மெய்க்கண் மேவார் மெல்லெனச் சொரிதந்து
 எக்கர்க் கிளைக்கும் ஏழையர்க் காண்மின்

 




160

நெடுநீர் மாடத்து ஏணி ஏறிப்
பொறிமயில் பெடையின் பொங்குபு பாய்தலில்
அணிக்கையில் தவழ்ந்த மணிக்குரல் ஐம்பால்
ஈர்முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி
 அழல்நறுந் தேறல் சுழல்வண்டு ஓப்பிக்
குறிவெங் காதலன் பொறியாப்பு உறுத்த
தமனிய வள்ளத்துத் தன்நிழல் நோக்கிப்
பிறள்முகம் இதுவெனப் பெண்மையின் மயங்கிக்

 

165




170

கள்ளினுள் தோன்றும்இவ் ஒள்ளிழை மாதரைப்
 பண்டும் ஒருகால் கண்டுஅகத்து அடக்கிய
வையப் பரத்தையைக் கையொடு கண்டேம்
இனிப்பொய் உண்ணும் ஏழையம் அல்லம்என்று
அணித்தகு நுதல்வியர்த்து அரையெழுத்து அளைஇத்
துனிப்புறு கிளவி பனிக்கடல் பிறந்த
 அரும்பெறல் அமிழ்தென விரும்பும் வேட்கையன்
முகிழ்நகை முகத்தன் ஆகி முற்றிழை

 



175




180

அவிழ்குரல் கூந்தல் அங்கை யடைச்சிக்
கள்ளமர் தேவிநின் கதிர்விடு நெடுமுகத்து
ஒள்அணி காணிய உள்ளி வந்ததை
 உணராது புலத்தல் புணர்குவை ஆயின்என்
உள்ளகம் சுடுமென உள்அவிழ்ந்து எழுதரும்
காமக் கட்டுரை கனியென வளைஇத்
தாமக் கோதையொடு தாழ்சிகை திருத்தி
வளர்ந்தேந்து இளமுலை மருங்கிவர்ந்து கிடந்த
 பொலங்கலம் மணிப்பூண் பொலியப் புல்லிஅவள்
மனங்கொளத் தேற்றும்ஓர் மைந்தனைக் காண்மின்

 



185

ஏமம் முந்நீர் ரெறிசுற உயர்த்த
காமனும் விழையும் காமர் காரிகைக்
கலைஉணர் மகளிர் உள்ளம் போல
 நிலையின்று உழிதரும் நெடுஞ்சுழி நீத்தத்து
வினைதீர் உயிரின் மிதந்தது கீழாப்
பண்ணமை நெடும்புணை திண்ணிதின் தழீஇ
ஆய மாக்களொடு சேய்வழி ஓடிக்
கலந்து காதலின் ஆடலின் கைசோர்ந்து

 
190




195




200

 மலர்ந்துகடை போழ்ந்து மாழை கழீஇக்
காமம் கனிந்த கருந்தடம் கண்ணின்
இமைதீர் வெம்பனி முலைமுகம் நனைப்ப
மாரிப் பிடிக்கை நால்புறல் கடுப்ப
நீர்பொறை ஆற்றாது நெகிழ்ந்துவீழ் இசைந்த
 காரிரும் கூந்தல் கையின் ஏந்தி
அகலின் அகலும் உயிரினள் ஆகித்
தலைநீர்ப் பெருந்துறை நிலைநீர் நின்ற
வண்டார் கோதையைக் கண்டனன் ஆகி
நீள்நீர் நீந்தி நெடும்புணைள் ஒழியத்
 தன்வயின் செல்லும் இல்வளக் கொழுநனை

 




205

நின்வயின் காதல் நில்லா ஊர்தரும்
பூம்புனல் மடந்தையைப் புணர்ந்துவிளை யாடித்
தேம்பட மொழிந்து வேம்புமனத்து அடக்கி
வார லோஎன வாய்திறந்து மிழற்றி
 ஓராது புலக்கும்ஓர் ஒள்ளிழை காண்மின்

 




210




215

நச்சுமன வேந்தர்க்குத் துச்சில் அமைத்த
சிறுவலி ஒருவனின் தன்மனம் சுருங்கி
நறுமெல் ஆகம் நந்துபொறை எள்கப்
போக்கிடம் இன்றி வீக்கமொடு பெருகி
 அம்மையும் அழகும் கொம்மையொடு கழுமிக்
கால்பரந்து இருந்த கருங்கண் வெம்முலை
மேலிருந் தன,யான் பொறையாற் றேன்என்று
ஒசிவது போலும்நின்நு சிசுப்பு உணராது
இனக்கிடை இப்புனல் குடைகுவை யாயின்
 நினக்கிடை மற்றொன்று உடையை யோவெனக்
காதற் செவிலி கழறுபு விலக்கவும்

 



220




225




230

போதற் கண்ணே புரிந்த வேட்கையின்
ஐயரி பரந்த அரிமலர் நெடுங்கண்
மையுண்டு மதர்த்த மணிஒழுக்கு ஏய்ப்பக்
 கோல ஆகத்துக் கொடிபட எழுதிய
சாதிங் குலிகம் ஆதி யாகச்
சுட்டிச் சுண்ணமொடு மட்டித்துக் கலந்த
குங்குமக் கொழுஞ்சேறு கூடக் குழைத்திட்டு
இந்திர வில்நெகிழ்ந்து உருகி யாங்கு
 நீடுர வழியின் ஊடுநிமிர்ந்து ஒழுகிப்
பிணர்முரிப் பட்டுடைப் பெருநல அல்குல்
காசுநிழல் காட்டும் சின் மாமை
ஆவி நுண்டுகி லணிநல நனைப்பப்
பூவினுள் பிறந்த புனைஇழை போலத்
 தண்ணீர் தோழியர் ஆடத் தான்தன்
கண்ணீர் ஆடுமோர் கனங்குழை காண்மின்

 



235




240

திருவீற்று இருந்த திருநகர் வரைப்பின்
உருமீக் கூறும் மன்னவன் ஒருமகள்
கண்டுகண் ஓராக் காமர் காரிகை
 வண்டுஉளர் ஐம்பால் வாசவ தத்தை
போணி ஆடும் பெரும்புனல் விழவினுள்
நாணிச் செல்லா நல்குரவு உடையோர்க்கு
அரும்பொறி அணிகல மாரப் பெய்த
பெரும்பொறிப் பேழை யிவையெனக் கூறிக்
 கறைவாந் முரசங் கண்ணதிரிந் தியம்ப
அறையவுங் கொள்ளுங் குறையில ராகித்
துறைதுறை தோறும் இறைகொண் டோருள்
அணியா தோரை ஆராய்ந்து உழிதரும்
பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்

 
245




250




255

 புழல்கால் றாமரை அழல்போது அங்கண்
அல்லி மெல்லணைப் பள்ளி கொண்ட
தார்ப்பூம் பேடை தையலர் எடுத்த
நீர்ப்போர்க் கவ்வையின் நீங்கி முனாஅது
ஒள்ளொளிப் பவளத்து உள்ளொளி அடக்கி
 வெள்ளிப் பூந்தார் எள்ளும் தோற்றத்துப்
போதுபொறை ஆற்றாப் புன்னைஅம் பொதும்பர்த்
தாதுபுறத்து உறைப்பத் தங்கலின் தலைபரிந்து
இகழ்வின் நோக்கமொடு இரைவேட்டு எழுந்த
பவழச் செங்கால் பால்நிறச் சேவல்
 திரைஉமிழ் பொய்கையுள் இரைஉமிழ்ந்து மயங்கி

 




260

மதிபுரை தாமரைப் பொதிபோது புல்லிஅஃது
அன்மையின் அழிந்து புன்மையின் புலம்பி
அருப்பிள முலையவர் அடைகரை வைத்த
மருப்பியல் செப்பை மதித்த தாகி
 அழல்வெங் காமத்து அன்புதலைக் கொண்ட
மழலைத் தீங்குரல் மருட்டி அழைஇக்
குறுகச் சென்றுஅதன் உறுநோக்குப் பெறாது
புன்னையம் பள்ளிப் பொழில்தொறும் நாடும்
அன்னப் புள்ளின் அலமரல் காண்மின்

 
265




270




275

 நானம் தோய்த்த நறுமென் கூந்தலுள்
ஆன்ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி
ஆவிரை அலரு அறுகையும் செரீஇக்
கொட்டுமடி விரித்த பட்டுஉடைத் தானையள்
அங்கோல் தீந்தொடைச் செங்கோட்டு யாழின்
 பத்தர் அன்ன மெத்தென் அவ்வயிற்றுத்
திரையொடு பட்டு நுரையொடு மறுகி
மட்டுஊண் மறுத்த பட்டினிப் படிவமொடு
கட்டளை பிழையாப் பட்டுடை அல்குலள்
பெட்ட வாய்மொழிப் பெரும்பாகு உதிர
 எதிர்ப்புனல் ஆடுநர்க்கு ஏமம் ஆகப்
புனல்துறை விடுத்த பொங்குமடைப் புழுக்கலைக்

 



280




285

காக்கை ஓட்டி நோக்கின் உண்டு
வேண்டலன் ஆயினும் விறலும் சேனையும்
நீண்ட இஞ்சியும் நிறைமணி மாடமும்
 உருக்குறு நறுநெய் உள்ளுறப் பெய்த
புழுக்கலொடு பால்சோறு ஆயின வாயின்
வழுக்கல் இன்றிஎன் வயிற்றகம் ஆர
உண்பல் என்றுதன் கண்பனி வாரக்
கொள்ளா வயிற்றின் ஆண்ட கையன்
 செல்வோன் கண்டு பொள்ளென நக்கு

 




290

நுரைபுரை வெண்துகில் அரைமிசை வீக்கி
அவிஇடப் படின் ஆருயிர் வைப்பது
கடிவோ ரில்லை முடிகுவெ னின்றெனச்
செவிமடுத் தெற்றிச் சிவந்த கண்ணினன்
 உண்டற் புண்ணிய முடைஎனை ஒளித்துக்
கொண்டனை போகின் கூடுமோ நினக்குஎனப்
பிண்டம் பெருங்கவுள் பெருவியர் இழிதரக்
கண்டோர் ஆர்ப்பக் கலாஅங் காமுறூஉம்
பண்டப் பார்ப்பான் பட்டிமை காண்மின்

 
290




300




305




310

 நுரையொடு பொங்கும் நுண்நூல் வெண்துகில்
அரைஇடை நெகிழ அசைத்தல் செல்லார்
இறும்என நுடங்கும் சிறுகொடி மருங்கில்
மதுகை ஓரா மறங்கூர் மனத்தர்
எதிர்நீர் தூஉம் இளையோர் திருமுகத்து
 ஆழ மிகவா அரிபரந்து அகன்ற
மாழை உண்கண் மலரென மதித்துத்
தண்செம் கழுநீர் தகைமலர்த் தாதும்
ஒண்செந் தாமரைப் பைம்பொன் தாதும்
ஆராய்ந்து உழிதரும் அஞ்சிறை வண்டினம்
 ஓராங்கு நிலைபெற்று உள்நெகிழ்ந்து அவிழ்ந்த
பேரா இவையெனப் பேர்தல் செல்லா
மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் நீங்கத்
தத்துஅரி நெடுங்கண் தகைவிரல் புதைஇப்
புதுமண மகளிரின் கதுமெனத் தோன்றும்
 மதுர மழலை மடவோர்க் காண்மின்

 




315




320

நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்
பொறிப்படை அமைந்த பொங்கில வந்திகை
முன்னம் புக்க தன்அமர் காதலன்
பாடகச் சீறடிப் பைந்தொடி மாதரை
 ஆடுக வாவிதன் அகவயின் என்றலின்
செஞ்சூட்டு இட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால்
அஞ்சிறை அன்னத்தின் அணிபெற இயலி
மண்ணுமணி அன்ன ஒள்நிறத் தெள்நீர்த்
தண்நிழல் கண்டே என்நிழல் என்னும்
 நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக

 




325




330

எழுதி அன்ன ஏந்துநுண் புருவம்
முழுதும்நுதல் நெருங்க முரிய ஏற்றிச்
செதும்பல் தாமரைச் செவ்விதழ் போலப்
பதம்பார்த்து மலரும் பனிமலர்த் தடம்கண்
 கைஇகந்து சிவப்ப வெய்துபட உயிரா
நிரைகொள் அன்புத்தளை நெரிய ஊர்தரும்
புலவி நோக்கத்துப் பூந்தொடி புலம்பி
நீர்அர மகளிரொடு நிரந்துடன் நின்ற
சூரன் இவனெனச் சொல்லுங் குறிப்பினள்
 பேரும் உள்ளமொடு பிறக்குஅடி இடுதலின்

 




335




340

நண்ணிய காதலி கண்ணியது உணர்ந்து
காளை போந்துஅவள் சிறுபுறம் கவைஇப்
பூளை மெல்அணைப் பொதிஅவிழ்ந்து அன்ன
மென்தோள் நெகிழப் பற்றிக் குன்றா
 அழல்புரை வேகத்துள் அன்புநீ ராட்டிச்
சிறுவரைத் தணித்துஅவள் திருமுகம் திருத்தி
நீர்அர மடந்தையும் கணவனும் இதனுள்
ஆர்வ உள்ளமொடு ஆனோர்க் காண்அகம்
ஏகென உய்த்துத்தம் இருநலங் காட்டி
 வேக ஊடல் லவள்வயின் நீக்கி
உருவக் கோலமொடு ஓம்பல் செல்லாது
ஒருவயின் ஆடும் இருவரைக் காண்மின்

 


345




350

ஒரு மீக் கொற்றவன் உடைப்பொருள் உடைய
செருவார் சேனைப் பெருவா ணிகன்மகள்
 தன்னொடு நவிலத் தன்ஐ மார்கள்
கலத்தில் தந்த நலத்தகு விழுச்சீர்
வேறுபடு திருவினுள் விளங்கிழை மகளிரைக்
கூறுபட நிறீஇக் குளித்தனள் எழுவோள்
மின்னிருங் கூந்தல் மேதகப் புனைந்த
 பொன்அரி மாலையைப் புனல்கொண்டு ஈர்ப்ப
அத்துறை மருங்கின் அயற்துறை ஆடும்
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்துதன்
சென்னி சேர்த்துஅவள் முன்னர்த் தோன்ற
நெடும்புணை தழீஇ நீத்தொடு மறலத்

 
355




360




365

 தடம்பெரும் கண்ணி தலைகவிழ்த்து இறைஞ்சிச்
செறிப்பின் ஆகிய செய்கையின் ஒரீஇயவள்
குறிப்பில் கொண்டனன் கோதை என்பது
அயலோர் கருதின் அற்றம் தரும்எனக்
கயலேர் நெடுங்கண் கடும்பனி கால
 மாலை கவர்ந்து மற்றவற்கு ஈத்தனை
கோல வைவேல் ஏனைய குமரர்க்கு
அறியக் கூறுவென் அஞ்சுவை ஆயின்
பெயர்த்துத் தம்மெனச் செயிர்த்தவள் நோக்கி
நீரணி ஆட்டொடு நெஞ்சுநொந்து உரைக்கும்
 வாணிக மகளின் மடத்தகை காண்மின்

 




370

மின்அவிர் மணிப்பூண் மன்னவன் மடமகள்
அம்கலுழ் பணைத்தோளன் செங்கடை மழைக்கண்
நங்கை யாடும் பொங்குபுனல் பூந்துறைக்
குங்குமக் குழங்கல் கொழும்களி ஆக
 இத்துறை மேவ எத்துறை ஆயினும்
ஆடல்மின் யாவிரும் ஆடுவிர் உளிர்எனின்
ஆடகப் பொன்னினும் மளவின் இயன்ற
பாவை ஆகும் படுமுறை அதுஎம்
கோவின் ஆணை போமின் நீவிர்எனத்

 
375




380

 தென்மலைப் பிறந்த பொன்மருள் சூரல்
கருங்கண் தோறும் பசும்பொன் ஏற்றித்
தொடித்தலைப் படுகோல் பிடித்த கையர்
வரிக்குப் பாயத்து வார்பொன் கச்சையர்
திருப்புனல் ஆடிச் செயிர்த்த நோக்கினர்
 முழுநீர் விழவின் மூஎழு நாளும்
கழுநீர்ப் பெருந்துறைக் காவல் நண்ணிய
வண்டும் சேரா அஞ்சுவரு சீற்றத்துக்
குண்டுதுறைக் காவலர் குழாஅங் காண்மின்

 

385




390

இன்னவை பிறவும் கண்ணொடு புணர்ந்த
 புண்ணியம் உடைமையின் காண்மின் நீரெனப்
பணிவில் நல்வினைப் பயன்உண்டு ஆயின்
மணிமுடி மன்னன் அணியும் சேனையுள்
எழுமைப் பிறப்பும் எய்துகம் யாமெனக்
கழுமிய காதலொடு கைதொழுது ஏத்தி
 நகர மாந்தர் பகர்வரால் பரந்தென்.