தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வன்னி மரம்

  • வன்னி மரம்

    முனைவர் கு.க.கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.


    வன்னிமரம்

    வன்னி மரம் இந்தியா, அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத், உத்திரப் பிரதேசம் மற்றும் தென்னகத்தின் வறண்ட பகுதிகளிலும் இந்த மரம் வளர்கின்றது. ஆண்டுக்கு 500 மில்லி மீட்டருக்கும் குறைவாக மழையுள்ள இடங்களிலும் இது வளரும் தன்மையது. வறண்ட, பாலைவனப் பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும்.வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா (Prosopis spicigera (L) ) ஆகும். இதனுடைய தாவரக் குடும்பம் மைமோசேசியே.

    புரதமும் சக்தியும் நிறைந்த நெற்றுக்களை உணவாகத்தரும். கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கும், கட்டிடம் கட்ட மரம் உதவும். விறகாகவும் பயன்படுத்தலாம். பாலை நிலைத்து மணலிலே வளர்ந்து மிகுந்த ஆழத்திலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு வாழும். 1988 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று வன்னி மரத்தை நம் இந்திய அரசு அஞ்சல் தலையில் வெளியிட்டு இந்த மரத்திற்குப் பெருமை சேர்த்தது. ராஜஸ்தான் பாலைவனத்தில் காலம் காலமாகச் செழித்து வளர்ந்து வரும் மரமாகும். வன்னி மரத்தின் பெருமை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனைத் தல விருட்சமாக எண்ணற்ற கோவில்களில் வளர்த்துப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.

    பயன்கள் :

    வன்னி மரத்தின் காய்கள் பெண்களின் அதிகமான மாதவிலக்கு இரத்தப்போக்கை தடுக்க மருந்தாகப் பயன்படுகிறது. இலைகளை அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போடலாம். குதிரைகளின் காயத்தைப் போக்க இலைகளை அரைத்து களிம்பாகப் பூசி கட்டு கட்டலாம். இலைகள் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும்.

    நோக்கீட்டு நூல் :

    மரம் மனிதனின் நண்பன் வ.சுந்தரராஜ் (2004) திருச்சி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:57:50(இந்திய நேரம்)