தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரளி

  • அரளி

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Nerium oleander L.

    குடும்பம் : Apocyanaceae

    ஆங்கிலம் : Indian oleander

    வளரிடம் : அரளி, அலரி, செவ்வரளி என அழைக்கப்படும். இத்தாவரம் இந்திய முழுவதும் தோட்டங்களில் அலங்காரமாக வளர்க்கப்படுகிறது. கோயிலில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்தவதற்கென வளர்க்கப்படுகிறது. மலர்கள் சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களில் உள்ளன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும் கருக்கலைப்புடனும் தொடர்புப் படுத்தப்பட்டதாகும்.

    வளரியல்பு : உயரமான புதர்ச்செடி 5 மீ உயரம் வளரக்கூடியது. இலைகள் கத்தி போன்றுள்ளது; தடித்து தோல் போன்றது, மேல்புறம் ஒளிரும் பசுமை வண்ணம் கொண்டது. நடு நரம்பு எடுப்பானது. கனிகள் நீளமான உருளை வடிவான ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மலர்கள் தோன்றும்.

    மருத்துவப் பயன்கள் : அனைத்துப் பகுதியும் மேல் பூச்சாகப் பயன்படுகிறது. இலைகளின் சாறு (இளஞ்சூடு) வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. இச்சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. வேர்பட்டை மற்றும் இலைக் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுகிறது. கருச்சிதைவினைத் தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:27:11(இந்திய நேரம்)