தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கரிசலாங்கண்ணி

  • சிவகரந்தை / கொட்டைக் கரந்தை

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Sphaeranthus indicus L.

    குடும்பம் : Asteraceae

    வளரிடம் : சமவெளிகள், கடற்கரையோரங்கள், தரிசு நிலங்கள், நெல்வயல்கள், களிமண் நிலங்களில் ஏராளமாகக் காணப்படும்.

    வளரியல்பு : ஏறுகிளைகளுடைய சிறு செடி 50 செ.மீ, இலைகள் மாற்று அடுக்கில், நீண்டு உருண்ட–கரண்டி வடிவானவை, சிரமஞ்சரி, இளஞ்சிவப்பு, இருதரப்பட்டது. நீள் மலர்தளத்தில் ஒருகிணைந்த இவை முட்டை–கோள வடிவ, ஒரே செதில் வட்டத்தினுள்ள சிரமஞ்சரி தொகுப்பாக அமைகின்றன. பூவடிச் செதில்கள் ஒரு சில, நீண்டு மெலிந்த ஈட்டி வடிவன. வெளிப்புறச் சிறு மலர்கள் பெண்பால், உள்புறம் இருபாலானவை, வெளிப்புற மலர்களைவிட குறைந்தவை, அக்கீன்கள் வழவழப்பானவை. உரோமங்கள் உண்டு.

    மருத்துவப் பயன்கள: இலைகள் மருத்துவப் பயனுடையவை. இசிவகற்றல், மணமூட்டல், திசுக்களை இறுகச் செய்தல், சிறுநீர் பெருக்கல், மாதவிலக்குத் தூண்டுதல், செரிமானம் மிகுதல் ஆகிய மருத்துவப் பயன்களுடையது. பூவிடுவதற்கு முன் இலைகளைப் பறித்துப் பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர குருதித் தூய்மையடையும். தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:36:07(இந்திய நேரம்)