4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  காளமேகப் புலவர் பாடிய பாடலின் பெயர் யாது?

காளமேகப் புலவர் பாடிய பாடலின் பெயர் இரட்டுற மொழிதல்.

2.  காளமேகப் புலவர் எங்குப் பிறந்தார்?

காளமேகப் புலவர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள எண்ணாயிரம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.

3.  இரட்டுற மொழிதல் பாடலில் உள்ள கருப்பொருள்கள் யாவை?

இரட்டுற மொழிதல் பாடலில் உள்ள கருப்பொருள்கள் பாம்பு, எள்.

4.  எள் செக்கிலிட்டால் கிடைக்கும் பொருள்கள் யாவை?

எள் செக்கிலிட்டால் கிடைக்கும் பொருள்கள் எண்ணெய், பிண்ணாக்கு.

5.  காளமேகப் புலவர் வாழ்ந்த ஊர் எது?

காளமேகப் புலவர் வாழ்ந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்தி என்னும் ஊராகும்.

6.  படமெடுத்து ஆடுவது எது?

படமெடுத்து ஆடுவது பாம்பு.

7.  பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு எதைக் காட்டும்?

பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு முகம் காட்டும்.

8.  எள் எதில் இட்டு ஆட்டப் பெறும்?

எள் செக்கில் இட்டு ஆட்டப் பெறும்.

9.  இலக்கியத்தில் சுவையான வடிவம் உடைய நூல் எது?

இலக்கியத்தில் சுவையான வடிவம் உடைய நூல் இரட்டுற மொழிதல் ஆகும்.

10.  காளமேகப் புலவர் எதில் வல்லவர்?

காளமேகப் புலவர் கவி பாடுவதில் வல்லவர்.