4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  ஆற்றிலே நாளை ---------- வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.

ஆற்றிலே நாளை வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.

2.  மலையாளப் பகுதியிலும் ஈழப் பகுதியிலும் --------- மின்னுகின்றது.

மலையாளப் பகுதியிலும் ஈழப் பகுதியிலும் மின்னல் மின்னுகின்றது.

3.  காற்று வீசுவதால் ---------- சுற்றுகின்றன.

காற்று வீசுவதால் கொம்புகள் சுற்றுகின்றன.

4.  கேணியில் வாழுகின்ற தவளை -------------- வகையைச் சார்ந்தது.

கேணியில் வாழுகின்ற தவளை சொறித் தவளை வகையைச் சார்ந்தது.

5.  வயல் வெளிகளில் வாழும் நண்டுகள் தங்கள் வளைகளை --------- உயர்த்தி அடைக்கின்றன.

வயல் வெளிகளில் வாழும் நண்டுகள் தங்கள் வளைகளை சேற்றால் உயர்த்தி அடைக்கின்றன.

6.  முக்கூடலில் பள்ளர்கள் வணங்கும் கடவுள் ------------.

முக்கூடலில் பள்ளர்கள் வணங்கும் கடவுள் திருமால்

7.  பள்ளமான நிலப்பகுதியில் உள்ள பண்ணையில் வேளாண்மைத் தொழில் செய்யும் மக்கள் -------- என அழைக்கப் பெறுகின்றனர்.

பள்ளமான நிலப்பகுதியில் உள்ள பண்ணையில் வேளாண்மைத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர் என அழைக்கப் பெறுகின்றனர்.

8.  முக்கூடற் பள்ளு இலக்கியத்தில் பள்ளனுக்கு மனைவியர் ----- ஆவர்.

முக்கூடற் பள்ளு இலக்கியத்தில் பள்ளனுக்கு மனைவியர் இருவர் ஆவர்.

9.  மூத்த மனைவி ----------- நாட்டில் வாழ்பவள்.

மூத்த மனைவி ஆசூர் வடகரை நாட்டில் வாழ்பவள்.

10.  முக்கூடல் என அழைக்கப் பெறுவது தண்பொருநை, சிற்றாறு, --------- ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடம்.

முக்கூடல் என அழைக்கப் பெறுவது தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடம்.