4. சிற்றிலக்கியம்

நாரைவிடு தூது

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடம் -----------.

குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடம்சத்திமுத்த வாவி

2.  கூடலில் வாடைக் காற்றில் வருந்திக் கொண்டிருந்த சத்திமுத்தப் புலவருக்கு உவமையாகக் கூறப்பட்டது --------.

கூடலில் வாடைக் காற்றில் வருந்திக் கொண்டிருந்த சத்திமுத்தப் புலவருக்கு உவமையாகக் கூறப்பட்டதுபேழையுள் இருக்கும் பாம்பு .

3.  சத்திமுத்த வாவியுள் தங்கி - இவ்வடியில் இடம் பெற்றுள்ள 'வாவி' என்னும் சொல்லுக்குப் பொருள் -----------.

சத்திமுத்த வாவியுள் தங்கி - இவ்வடியில் இடம் பெற்றுள்ள 'வாவி' என்னும் சொல்லுக்குப் பொருள் குளம்.

4.  பிளந்த பனங்கிழங்கு நாரையின் அலகுக்கு உவமையாகக் கூறப்பெற்றது ----------.

பிளந்த பனங்கிழங்கு நாரையின் அலகுக்கு உவமையாகக் கூறப்பெற்றது வடிவத்தால்.

5.  கிழக்கிலிருந்து வீசும் காற்று -----------.

கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.

6.  இலக்கியச் சுவைகள் ------------- வகை.

இலக்கியச் சுவைகள் ஒன்பது வகை.

7.  நீர்வாழ் பறவையான நாரையின் கால் நிறம் ----------.

நீர்வாழ் பறவையான நாரையின் கால் நிறம் சிவப்பு.

8.  ----------- ஒலி எழுப்புவதைக் கொண்டு சகுனங்கள் அறியப்படும்.

பல்லி ஒலி எழுப்புவதைக் கொண்டு சகுனங்கள் அறியப்படும்.

9.  சத்திமுத்தப் புலவர் இற்றுப்போன ஓலைகளைக் கொண்ட ----------- வாழ்ந்தார்.

சத்திமுத்தப் புலவர் இற்றுப்போன ஓலைகளைக் கொண்ட குடிசையில் வாழ்ந்தார்.

10.  நாரை -------- வாழ் பறவை.

நாரை நீர் வாழ் பறவை.