4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  இரட்டுற மொழிதல் பாடலை இயற்றியவர் யார்?

அ) செயங்கொண்டார்

ஆ) காளமேகப் புலவர்

இ) உமறுப் புலவர்

ஈ) நம்மாழ்வார்

ஆ) காளமேகப் புலவர்

2.  காளமேகப் புலவர் பிறந்த எண்ணாயிரம் என்ற ஊர் எதற்கு அருகில் உள்ளது?

அ) விழுப்புரம்

ஆ) கடலூர்

இ) தஞ்சாவூர்

ஈ) காஞ்சிபுரம்

அ) விழுப்புரம்

3.  பாம்பின் நாக்கு எப்படி இருக்கும்?

அ) பிளவு பெற்று

ஆ) மூடி

இ) நாக்கு இல்லை

ஈ) கூர்மையாக

அ) பிளவு பெற்று

4.  காளமேகப் புலவர் எதில் வல்லவர்?

அ) கவி பாடுவதில்

ஆ) இலக்கணத்தில்

இ) இலக்கியத்தில்

ஈ) உரையாற்றுவதில்

அ) கவி பாடுவதில்

5. படமெடுத்து ஆடுவது எது?

அ) பாம்பு

ஆ) மயில்

இ) யானை

ஈ) வான்கோழி

அ) பாம்பு

6.  எண்ணெய் சேமித்து வைக்கப் பெற்றுள்ள பாத்திரம் எது?

அ) குடம்

ஆ) குவளை

இ) தொட்டி

ஈ) கொப்பரை

அ) குடம்

7.  மேகத்தின் நிறம் என்ன?

அ) கருமை

ஆ) செம்மை

இ) வெண்மை

ஈ) நீலம்

அ) கருமை

8.  காளமேகப் புலவர் முதலில் பின்பற்றிய சமயம் எது?

அ) வைணவம்

ஆ) சமணம்

இ) சைவம்

ஈ) பவுத்தம்

அ) வைணவம்

9.  காளமேகப் புலவர் வாழ்ந்த சிற்றூர் எது?

அ) எண்ணாயிரம்

ஆ) களத்தூர்

இ) மருதூர்

ஈ) நந்தி

ஈ) நந்தி

10.  தன்னை அடைத்து வைக்கப் பெற்றுள்ள பெட்டி திறந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பது எது?

அ) கோழி

ஆ) பாம்பு

இ) எலி

ஈ) கிளி

ஆ) பாம்பு