4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

சொல்-பொருள்
Words-Meaning


▪ ஆறு - நீர் நிலை (ஆறு, ஏரி, குட்டை, குளம், கண்மாய், கேணி என்பன எல்லாம் நீர் நிலைகளாகும்.)
▪ இம்மி - சிறிய
▪ குறி - அடையாளம்
▪ கூப்பிடு - அழை
▪ கொம்பு - மரத்தின் கிளை (Branch) சில சமயத்தில் கொப்பு என்று அழைப்பர். (மாட்டின் தலைப்பகுதியில் கூர்மையாக இருப்பதுவும் கொம்பு என்றே அழைக்கப்பெறும்.)
▪ கேணி - கிணறு
▪ தோற்றுதல் - தோன்றுதல், தோற்றம், உண்டாதல்
▪ நண்டு - வயலில், சேற்றில் வளை தோண்டி வாழும் உயிரினம்
▪ மலையாளம் - கேரளம் - பழங்காலத்தில் மலைகள் மிகுந்த நாடு சேர நாடு
▪ பூங்குழலாள் - பூவைச்சூடிய முடியை உடையவள்
▪ மா - பெரிய (விலங்கு, உரிச்சொல்)
▪ மின்னல் - வானில் தோன்றும் ஒளி (தோன்றிய உடனே மறையும்) lightning
▪ வானம்பாடி - வானத்தில் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பறவையினம். மழைக்காலத்தில் அதிகம் காணப்படும்.
▪ ஏற்றம் - நீர் இறைக்கும் பொறி
▪ சமயம் - நேரம், காலம், பொழுது
▪ வேளாண்மை - உழவு (Agriculture)