இயேசு பெருமான்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா என்பதாகும்..
2. இயேசு காவியம் எத்தனைப் பாகங்களைக் கொண்டது?
இயேசு காவியம் ஐந்து பாகங்களைக் கொண்டது.
3. கண்ணதாசனால் எழுதப் பெற்ற கிறித்தவ நூல் எது?
கண்ணதாசனால் எழுதப் பெற்ற கிறித்தவ நூல் இயேசு காவியம்.
4. கண்ணதாசன் எங்கே பிறந்தார்?
கண்ணதாசன் சிவகங்கைக்கு அருகில் உள்ள சிறுகூடற்பட்டியில் பிறந்தார்.
5. கவிஞர் கண்ணதாசன் எந்த நாட்டில் இயற்கை எய்தினார்?
கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில் இயற்கை எய்தினார்.
6. தன் வாழ்நாளில் தனக்கு இரங்கற்பா எழுதிய கவிஞர் யார்?
தன் வாழ்நாளில் தனக்கு இரங்கற்பா எழுதிய கவிஞர் கண்ணதாசன் ஆவார்.
7. மண்ணிடை மறுபடி பிறக்கும் கடவுள் யார்?
மண்ணிடை மறுபடி பிறக்கும் கடவுள் இயேசு பெருமான்.
8. புண்கள் இருக்கும் வரை என்ன தேவை?
புண்கள் இருக்கும் வரை மருந்து தேவை.
9. உலகம் முழுவதும் யாருடைய ஆட்சி அமையப் போவதாகக் கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்?
உலகம் முழுவதும் தேவன் இயேசுவின் ஆட்சி அமையப் போவதாகக் கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்.
10. இயேசுவை நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறார் கண்ணதாசன்?
இயேசுவை நாம் நம்ப வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.