6. சமய இலக்கியம்

திருமால்

பாடல்
Poem


திருமால்

குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார்

படுதுய ராயின வெல்லாம்

நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்

அருளொடு பெருநில மளிக்கும்

வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற

தாயினு மாயின செய்யும்

நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்

நாராய ணாவென்னும் நாமம்.

- திருமங்கையாழ்வார்