திருமால்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. திவ்வியப் பிரபந்தத்தை எழுதியவர் யார்?.
திவ்வியப்பிரபந்தத்தை எழுதியவர் திருமங்கை ஆழ்வார்.
2. வழிபாட்டுப் பாடல் என்றால் என்ன?
வழிபாட்டுப் பாடல் என்பது பின்பற்றி ஒழுகுதல் எனப்படும்.
3. திருமங்கை ஆழ்வார் எங்குப் பிறந்தார்?
திருமங்கை ஆழ்வார் திருக்குறையலூரில் பிறந்தார்.
4. திருமங்கை ஆழ்வார் யாரிடம் பணியாற்றினார்?
திருமங்கை ஆழ்வார் சோழ மன்னரிடம் படைத் தளபதியாகப் பணியாற்றினார்.
5. திருமங்கையாழ்வார் எதனைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்?
திருமங்கையாழ்வார் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தைக் கண்டதாகக் கூறுகிறார்.
6. திருமங்கை ஆழ்வார் எந்த நாட்டு மன்னராக இருந்தார்?
திருமங்கையாழ்வார் திருமங்கை நாட்டு மன்னராக இருந்தார்.
7. திருமங்கை ஆழ்வார் பிறந்த காலம் எது?
திருமங்கை ஆழ்வார் பிறந்த காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.
8. திருமாலை எந்தக் கோலத்தில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் கூறினார்?
திருமாலைத் திருமணக் கோலத்தில் கண்டதாகத் திருமங்கைஆழ்வார் கூறினார்.
9. நாராயணா என்னும் நாமம் தரக்கூடியவை யாவை?
நற்குடிப்பிறப்பையும், செல்வத்தையும், வீட்டுலக இன்பத்தையும் ‘நாராயணா’ என்னும் நாமம் தரக்கூடியதாகும்.
10. திருமாலிடம் எட்டெழுத்து அறிவுரை பெற்று ஆழ்வார் ஆனவர் யார்?
திருமாலிடம் எட்டெழுத்து அறிவுரை பெற்று ஆழ்வார் ஆனவர் திருமங்கை ஆழ்வார்.