நீதிப் பாடல்கள்

திருக்குறள்

சொல்-பொருள்
Words-Meaning


• அகம்நக - உள்ளத்தளவில் சிரிப்பது
• அல்லல் - துன்பம்
• ஆறு உய்த்து - நல்வழிப்படுத்தி
• இடித்தல் - சுட்டிக் காட்டுதல்
• இடுக்கண் - துன்பம்
• இனையர் - இத்தன்மையவர்
• உடுக்கை - உடுத்துகின்ற ஆடை
• உழப்பது - பங்கிட்டுக் கொள்வது
• ஒல்லும் வாய் எல்லாம் - இயன்ற பொழுதெல்லாம்
• காப்பு - காவலாக அமைவது
• கிழமை - உரிமை
• கேண்மை - நட்பு
• கொட்பின்றி (கொட்பு+இன்றி) - மாறுபாடு இன்றி
• செயற்கு அரிய - செய்வதற்குக் கடினமான
• நகுதல் - சிரித்தல்
• நட்டல் - நட்புக் கொள்ளல்
• நவில்தொறும் - படிக்கும் பொழுதெல்லாம்
• நீரவர் - பண்பாளர்கள்
• புல்என்னும் - கெட்டுவிடும்
• பேதையார் - அறிவில்லாதவர்
• மிகுதிக்கண் - தவறு செய்யும் பொழுது
• மதி - நிலவு
• பகுப்பு - பிரிவு
• முகம்நக - முகத்தளவில் சிரிப்பது