திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning
• அகம்நக | - உள்ளத்தளவில் சிரிப்பது |
• அல்லல் | - துன்பம் |
• ஆறு உய்த்து | - நல்வழிப்படுத்தி |
• இடித்தல் | - சுட்டிக் காட்டுதல் |
• இடுக்கண் | - துன்பம் |
• இனையர் | - இத்தன்மையவர் |
• உடுக்கை | - உடுத்துகின்ற ஆடை |
• உழப்பது | - பங்கிட்டுக் கொள்வது |
• ஒல்லும் வாய் எல்லாம் | - இயன்ற பொழுதெல்லாம் |
• காப்பு | - காவலாக அமைவது |
• கிழமை | - உரிமை |
• கேண்மை | - நட்பு |
• கொட்பின்றி (கொட்பு+இன்றி) | - மாறுபாடு இன்றி |
• செயற்கு அரிய | - செய்வதற்குக் கடினமான |
• நகுதல் | - சிரித்தல் |
• நட்டல் | - நட்புக் கொள்ளல் |
• நவில்தொறும் | - படிக்கும் பொழுதெல்லாம் |
• நீரவர் | - பண்பாளர்கள் |
• புல்என்னும் | - கெட்டுவிடும் |
• பேதையார் | - அறிவில்லாதவர் |
• மிகுதிக்கண் | - தவறு செய்யும் பொழுது |
• மதி | - நிலவு |
• பகுப்பு | - பிரிவு |
• முகம்நக | - முகத்தளவில் சிரிப்பது |