நீதிப் பாடல்கள்

திருக்குறள்

பாடல் கருத்து
Theme of the Poem


(1)  நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

திருக்குறள்

குறள் - 1

செயற்குஅரிய யாஉள, நட்பின் அதுபோல்

வினைக்குஅரிய யாஉள, காப்பு.

நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன?

அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?


(2) அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.

திருக்குறள்

குறள் - 2

நிறைநீர, நீரவர் கேண்மை, பிறை;மதிப்

பின்நீர, பேதையார் நட்பு.

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன;

அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.


(3)  பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

திருக்குறள்

குறள் - 3

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்,

பண்பு உடையாளர் தொடர்பு.

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

(4)  நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

திருக்குறள்

குறள் - 4

நகுதல்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு.

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

(5)  நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

திருக்குறள்

குறள் - 5

புணர்ச்சி, பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்

நட்புஆம் கிழமை தரும்.

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

(6)  முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

திருக்குறள்

குறள் - 6

முகம்நக, நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து

அகம்நக, நட்பது நட்பு.

முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

7.  அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

திருக்குறள்

குறள் - 7

அழிவினவை நீக்கி, ஆறுஉய்த்து, அழிவின்கண்

அல்லல் உழப்பதுஆம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி , நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

(8)  உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

திருக்குறள்

குறள் - 8

உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே

இடுக்கண் களைவதுஆம் நட்பு.

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

(9)  நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

திருக்குறள்

குறள் - 9

நட்பிற்கு வீற்றுஇருக்கை யாதுஎனில், கொட்பு இன்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

(10)  ‘இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்’ என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.

திருக்குறள்

குறள் - 10

இனையர், இவர்எமக்கு; இன்னம்யாம் என்று

புனையினும், புல்லென்னும் நட்பு.

‘இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்’ என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.