நாலடியார்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நாலடியாரைப் பாடியவர்கள் --------------.
நாலடியாரைப் பாடியவர்கள் சமண முனிவர்கள்.
2. நாலடியார் கல்வியின் --------- கூறுகிறது.
நாலடியார் கல்வியின் உயர்வைக் கூறுகிறது.
3. குஞ்சி அழகு என்பது --------- அழகு ஆகும்.
குஞ்சி அழகு என்பது தலைமுடியின் அழகு ஆகும்.
4. அறியாமை நோயை நீக்கும் மருந்து ----------.
அறியாமை நோயை நீக்கும் மருந்து கல்வி.
5. ----------- போல் சிறந்தது வேறு எதுவும் இல்லை.
கல்வி போல் சிறந்தது வேறு எதுவும் இல்லை.
6. தண்ணீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் பறவை-------.
தண்ணீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் பறவை அன்னப்பறவை.
7. நாம் உயிரோடு இருக்கும் வரை --------- அழியாது.
நாம் உயிரோடு இருக்கும் வரை கற்ற கல்வி அழியாது.
8. கல்வியால் ---------- அழகு பெறும்.
கல்வியால் உள்ளம் அழகு பெறும்.
9. கேண்மை என்ற சொல்லின் பொருள் -----------.
கேண்மை என்ற சொல்லின் பொருள் நட்பு.
10. திருக்குறளுக்கு அடுத்த சிறப்புடைய நூல் -----------.
திருக்குறளுக்கு அடுத்த சிறப்புடைய நூல் நாலடியார்.