நீதிப் பாடல்கள்

பழமொழி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  இழை என்னும் சொல்லின் பொருள் -------------.

இழை என்னும் சொல்லின் பொருள் நூல்.

2.  --------- செல்லும் வழியே நூல் செல்லும்.

ஊசி செல்லும் வழியே நூல் செல்லும்.

3.  தாமே முன் வந்து உதவிடும் உறவினர்கள் --------- போன்றவர்கள்.

தாமே முன் வந்து உதவிடும் உறவினர்கள் மழை போன்றவர்கள்.

4.  தாய்ப்பறவை மிதித்து -------- கால் முரியாது.

தாய் மிதித்து குஞ்சுப் பறவையின்கால் முரியாது.

5.  நல்ல அறிவுரைகளை ----------- கேட்க வேண்டும்.

நல்ல அறிவுரைகளை உறவினர்களிடம் கேட்க வேண்டும்.

6.  உடனே உதவும் நல்ல உறவினர் வீட்டில் வளரும் --------- மரம் போன்றவர்கள்.

உடனே உதவும் நல்ல உறவினர் வீட்டில் வளரும் மருந்துமரம் போன்றவர்கள்.

7.  தேவையான போது உடனே நன்மை செய்பவரே நல்ல ---------.

தேவையான போது உடனே நன்மை செய்பவரே நல்ல உறவினர் .

8.  நல்ல உறவினர்களை மதித்து நாமும் நல்ல --------- இருந்து நன்மை செய்ய வேண்டும்.

நல்ல உறவினர்களை மதித்து நாமும் நல்ல உறவினராக இருந்து நன்மை செய்ய வேண்டும்.

9.  முன்றுறை என்பது ஓர் --------- பெயர்.

முன்றுறை என்பது ஓர் ஊரின்பெயர்.

10.  பழமொழி என்பது --------- நூல்களில் ஒன்று.

பழமொழி என்பது பதினெண் கீழ்க்கணக்குநூல்களில் ஒன்று.