5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பாடல்
Poem


தாலாட்டு

ஆராரோ ஆரிவரோ ! ஆரிவரோ ஆராரோ !

தம்பி அழுத கண்ணீர் தடவழி பாய்ந்தேறி

ஆறாகப் பெருகி ஆனைகுளித் தேறி

இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சை வேரோடி

மஞ்சளுக்குப் பாய்ந்து மருக்கொழுந்து வேரோடி

தாழைக்குப் பாய்கையிலே தழும்பியதாம் கண்ணீரும்

வாழைக்குப் பாய்கையிலே வற்றியதாம் கண்ணீரும்.