5. இக்கால இலக்கியம்

சுதந்திர தேவி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  அக்காலத்தில் பல புலவர்களும், கவிஞர்களும் தோன்றி ------------- படைத்தனர்.

அக்காலத்தில் பல புலவர்களும், கவிஞர்களும் தோன்றி இறவா இலக்கியங்கள் படைத்தனர்.

2.  ‘சுதந்திர தேவியின் துதி’யை இயற்றியவர் --------------.

'சுதந்திர தேவியின் துதி’யை இயற்றியவர் பாரதியார்

3.  சுப்பிரமணிய பாரதியார் ---------- அன்று பிறந்தார்

சுப்பிரமணிய பாரதியார் 1882 திசம்பர் 11 அன்று பிறந்தார்.

4.  பாரதியார் சுதேசமித்திரன், ------------- இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பாரதியார் சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

5.  பாரதியார் காலம் இந்திய ------------- போராட்டக் காலமாகும்.

பாரதியார் காலம் இந்திய விடுதலைப் போராட்டக் காலமாகும்.

6.  பாரதியார் -------- என்றும், மகாகவி என்றும் சிறப்பிக்கப்பெறுகிறார்.

பாரதியார் தேசிய கவி என்றும், மகாகவி என்றும் சிறப்பிக்கப்பெறுகிறார்.

7.  பாரதியார் தாயார் -------------.

பாரதியார் தாயார் இலக்குமியம்மாள்

8.  இதம் என்பதற்கு ----------- என்று பொருளாகும்.

இதம் என்பதற்கு இன்பம் என்று பொருளாகும். .

9.  பாரதியார் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் --------- கொண்டவர்.

பாரதியார் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்

10.  பாரதியார் காலம் முதல் ----------- தொடங்குகிறது எனலாம்.

பாரதியார் காலம் முதல் இக்கால இலக்கியம் தொடங்குகிறது எனலாம்.