பெண்கல்வி
பாடல்
Poem
பெண்கல்வி
பெண்களால் முன்னேறக் கூடும் - நம்
வண்தமிழ் நாடும் எந்நாடும்
கண்களால் வழிகாண முடிவதைப் போலே
கால்களால் முன்னேற முடிவதைப் போலே
பெண்களால் முன்னேறக் கூடும்.
படியாத பெண்ணினால் தீமை - என்ன
பயன்விளைப் பாள் அந்த ஊமை
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி
பெண்களால் முன்னேறக் கூடும்.
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
