மரணத்துள் வாழ்வோம்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மக்களின் வாழ்நிலைகளை நாட்டின் ---------- சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன.
மக்களின் வாழ்நிலைகளை நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன.
2. உள்நாட்டுச் சூழல் காரணமாகப் பலர் --------- ஆக்கப்பெற்றுள்ளனர்.
உள்நாட்டுச் சூழல் காரணமாகப் பலர் பலர் அகதிகளாக (ஏதிலிகளாக) ஆக்கப்பெற்றுள்ளனர்.
3. அரசியல் தாக்கங்களை அந்தந்த நாட்டு --------- படைப்புகளில் காணமுடியும்.
அரசியல் தாக்கங்களை அந்தந்த நாட்டு இலக்கியப் படைப்புகளில் காணமுடியும்.
4. கவிஞர் உ.சேரன் ----------- படைப்பாளி.
கவிஞர் உ.சேரன் ஈழத்தின் படைப்பாளி
5. கவிஞன் முருகையன் ஈழத்தின் ----------- கவிஞர் ஆவார்.
கவிஞன் முருகையன் ஈழத்தின் மூத்தக் கவிஞர் ஆவார்.
6. சேரன் சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல், நூலின் ----------- உள்ளார்.
சேரன் சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல், நூலின் தொகுப்பாளராகவும் உள்ளார்.
7. கவிஞர் சேரன் தொகுத்த நூலின் பெயர் ------------.
கவிஞர் சேரன் தொகுத்த நூலின் பெயர் மரணத்துள் வாழ்வோம்.
8. ‘மரணத்துள் வாழ்வோம்’ ---------- இல் வெளியிடப்பட்டது.
‘மரணத்துள் வாழ்வோம்’ 1985 இல் வெளியிடப்பட்டது.
9. ‘தமிழியல் பதிப்பகம்’ ---------------- உள்ளது.
‘தமிழியல் பதிப்பகம்’ யாழ்ப்பாணத்தில் உள்ளது
10. பயிர்களைக் காப்பதற்கே ----------- போடப்பெறுகிறது.
பயிர்களைக் காப்பதற்கே வேலி போடப்பெறுகிறது.