சுதந்திர தேவி
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. இக்கால இலக்கியம் என்று எதனைக் கூறுகிறோம்?
பாரதியாரின் காலத்திலிருந்து படைக்கப் பெறுபவைகளை இக்கால இலக்கியம் என்று கூறுகிறோம்.
2. பாரதியார் வாழ்ந்த காலம் எது?
பாரதியார் வாழ்ந்த காலம் இந்திய விடுதலைப் போராட்டக் காலமாகும்.
3. பாரதியாரின் முழுப்பெயர் யாது?
சின்னச்சாமி சுப்பிரமணிய பாரதியார் என்பது பாரதியாரின் முழுப்பெயராகும்.
4. பாரதியாரின் பெற்றோர் யாவர்?
பாரதியாரின் பெற்றோர் சின்னச்சாமி, இலக்குமியம்மாள் ஆவர்.
5. பாரதியார் எவ்வாறு சிறப்பிக்கப் பெறுகிறார்?
பாரதியார் ‘தேசிய கவி’ என்றும், ‘மகாகவி’ என்றும் சிறப்பிக்கப் பெறுகிறார்.
6. பாரதியார் எங்குப் பணியாற்றினார்?
பாரதியார் சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களில் பணியாற்றினார்.
7. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் யாவை?
பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவாகும்.
8. ‘சுதந்திர தேவி’ என்னும் பாடலை எழுதியவர் யார்?
‘சுதந்திர தேவி’ என்னும் பாடலை எழுதியவர் பாரதியார்.
9. பாரதியார் யாரைத் தொழுகிறார்?
பாரதியார் சுதந்திர தேவியைத் தொழுகிறார்.
10. கவிதையால் விடுதலை வேண்டிய கவிஞர் யார்?
கவிதையால் விடுதலை வேண்டிய கவிஞர் பாரதியார்