முகப்பு |
பாடினோர் பெயர் காணப் பெறாத பாடல்கள் |
8. குறிஞ்சி |
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
||
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
||
திரு மணி புரையும் மேனி மடவோள் |
||
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
||
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
||
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
||
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
||
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! | உரை |
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.
|
10. பாலை |
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், |
||
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த |
||
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், |
||
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர! |
||
5 |
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் |
|
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர், |
||
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் |
||
பழையன் வேல் வாய்த்தன்ன நின் |
||
பிழையா நல் மொழி தேறிய இவட்கே. | உரை | |
உடன்போக்கும் தோழி கையடுத்தது.
|
22. குறிஞ்சி |
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
||
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
||
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
||
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
||
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
||
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
||
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
||
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
||
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. | உரை | |
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
24. பாலை |
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு |
||
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், |
||
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, |
||
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் |
||
5 |
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
|
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!- |
||
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; |
||
செயல்படு மனத்தர் செய்பொருட்கு |
||
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. | உரை | |
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்
|
45. நெய்தல் |
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, |
||
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு |
||
மீன் எறி பரதவர் மகளே; நீயே, |
||
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் |
||
5 |
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: |
|
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, |
||
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? |
||
புலவு நாறுதும்; செல நின்றீமோ! |
||
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை |
||
10 |
நும்மொடு புரைவதோ அன்றே; |
|
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! | உரை | |
குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.
|
46. பாலை |
வைகல்தோறும் இன்பமும் இளமையும் |
||
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; |
||
காணீர் என்றலோ அரிதே; அது நனி |
||
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி |
||
5 |
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் |
|
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, |
||
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர, |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, |
||
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து, |
||
10 |
நன் வாய் அல்லா வாழ்க்கை |
|
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே. | உரை | |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.
|
84. பாலை |
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும், |
||
திதலை அல்குலும் பல பாராட்டி, |
||
நெருநலும் இவணர் மன்னே! இன்றே, |
||
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் |
||
5 |
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், |
|
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற |
||
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன |
||
உவர் எழு களரி ஓமை அம் காட்டு, |
||
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் |
||
10 |
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின் |
|
இரந்தோர் மாற்றல் ஆற்றா |
||
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.
|
92. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
||
வேனில் ஓதி பாடு நடை வழலை |
||
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
||
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
||
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
||
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
||
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
||
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|
107. பாலை |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
||
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
||
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
||
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
||
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
||
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
||
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
||
ஆனாக் கௌவை மலைந்த |
||
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|
108. குறிஞ்சி |
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
||
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
||
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
||
கணையர், கிணையர், கை புனை கவணர், |
||
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
||
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
||
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
||
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! | உரை | |
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|
111. நெய்தல் |
அத்த இருப்பைப் பூவின் அன்ன |
||
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், |
||
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், |
||
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் |
||
5 |
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
|
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, |
||
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, |
||
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் |
||
பெருங் கழிப் பாக்கம் கல்லென |
||
10 |
வருமே-தோழி!-கொண்கன் தேரே. | உரை |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
|
115. முல்லை |
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
||
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
||
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் |
||
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, |
||
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
||
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
||
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
||
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
||
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
125.குறிஞ்சி |
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
||
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
||
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
||
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
||
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
||
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
||
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
||
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
||
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. | உரை |
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|
126. பாலை |
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
||
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
||
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
||
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
||
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
||
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
||
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
||
இளமை கழிந்த பின்றை, வளமை |
||
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
||
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! | உரை | |
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
132. நெய்தல் |
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; |
||
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் |
||
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி |
||
போர் அமை கதவப் புரை தொறும் தூவ, |
||
5 |
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் |
|
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை |
||
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை, |
||
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும் |
||
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி |
||
10 |
ஒன்று எறி பாணியின் இரட்டும்; |
|
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? | உரை | |
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
|
134. குறிஞ்சி |
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது |
||
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர் |
||
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் |
||
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி! |
||
5 |
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, |
|
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர், |
||
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! |
||
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது |
||
10 |
ஒல்லேன் போல உரையாடுவலே! | உரை |
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
|
160. குறிஞ்சி |
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும், |
||
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும், |
||
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென |
||
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை |
||
5 |
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், |
|
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி |
||
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி, |
||
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை |
||
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
||
10 |
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. | உரை |
கழற்று எதிர்மறை.
|
161. முல்லை |
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, |
||
கண் போல் நீலம் சுனைதொறும் மலர, |
||
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், |
||
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, |
||
5 |
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
|
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் |
||
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, |
||
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் |
||
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின் |
||
10 |
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
|
புதல்வற் காட்டிப் பொய்க்கும் |
||
திதலை அல்குல் தேம் மொழியாட்கே? | உரை | |
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
|
162. பாலை |
'மனை உறை புறவின் செங் காற் பேடைக் |
||
காமர் துணையொடு சேவல் சேர, |
||
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
||
தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின் |
||
5 |
பனி வார் உண்கண் பைதல கலுழ, |
|
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு- |
||
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் |
||
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது |
||
வேனில் இற்றித் தோயா நெடு வீழ், |
||
10 |
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
|
துஞ்சு பிடி வருடும் அத்தம் |
||
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? | உரை | |
'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
|
163. நெய்தல் |
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்- |
||
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு |
||
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் |
||
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப, |
||
5 |
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, |
|
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி |
||
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல் |
||
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, |
||
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் |
||
10 |
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று |
|
வைகுறு வனப்பின், தோன்றும் |
||
கைதைஅம் கானல் துறைவன் மாவே! | உரை | |
வரைவு மலிந்து சொல்லியது.
|
164. பாலை |
'உறை துறந்திருந்த புறவில், தனாது |
||
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, |
||
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் |
||
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச் |
||
5 |
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்- |
|
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் |
||
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, |
||
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, |
||
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது |
||
10 |
மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
|
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. | உரை | |
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
|
165. குறிஞ்சி |
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது |
||
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன், |
||
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக் |
||
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து, |
||
5 |
கிளையொடு மகிழும் குன்ற நாடன் |
|
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப, |
||
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு |
||
அன்ன ஆகுக' என்னான்; |
||
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே. | உரை | |
நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
|
166. பாலை |
பொன்னும் மணியும் போலும், யாழ நின் |
||
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்; |
||
போதும் பணையும் போலும், யாழ நின் |
||
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்: |
||
5 |
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் |
|
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை, |
||
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; |
||
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின், |
||
யாதனின் பிரிகோ?-மடந்தை!- |
||
10 |
காதல் தானும் கடலினும் பெரிதே! | உரை |
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
|
167. நெய்தல் |
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
||
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
||
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
||
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
||
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
||
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
||
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
||
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
||
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. | உரை | |
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
|
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
170. மருதம் |
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், |
||
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், |
||
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் |
||
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; |
||
5 |
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
|
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், |
||
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது |
||
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் |
||
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? | உரை | |
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
|
171. பாலை |
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
||
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் |
||
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி |
||
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
||
5 |
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
|
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, |
||
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க |
||
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |
||
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், |
||
10 |
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
|
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
|
172. நெய்தல் |
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, |
||
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, |
||
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; |
||
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று, |
||
5 |
அன்னை கூறினள், புன்னையது நலனே- |
|
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; |
||
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, |
||
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் |
||
துறை கெழு கொண்க!-நீ நல்கின், |
||
10 |
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. | உரை |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.
|
173. குறிஞ்சி |
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், |
||
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், |
||
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, |
||
வெறி என உணர்ந்த அரிய அன்னையை, |
||
5 |
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் |
|
என்னினும் வாராது; மணியின் தோன்றும் |
||
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின், |
||
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் |
||
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- |
||
10 |
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. | உரை |
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
|
174. பாலை |
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன |
||
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் |
||
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், |
||
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் |
||
5 |
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
|
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து |
||
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!- |
||
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; |
||
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
||
10 |
மல்லல் மார்பு மடுத்தனன் |
|
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? | உரை | |
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
|
175. நெய்தல் |
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் |
||
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, |
||
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய |
||
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் |
||
5 |
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை |
|
தான் அறிந்தன்றோ இலளே; பானாள் |
||
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி, |
||
சுடுவான் போல நோக்கும், |
||
அடு பால் அன்ன என் பசலை மெய்யே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. | உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
177. பாலை |
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப, |
||
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு |
||
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்; |
||
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட, |
||
5 |
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் |
|
பீலி சூட்டி மணி அணிபவ்வே; |
||
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே |
||
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து, |
||
எழுது எழில் உண்கண் பாவை |
||
10 |
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. | உரை |
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
|
178. நெய்தல் |
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன |
||
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை |
||
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை |
||
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, |
||
5 |
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
|
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் |
||
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி |
||
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; |
||
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, |
||
10 |
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
|
179. பாலை |
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, |
||
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, |
||
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் |
||
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, |
||
5 |
யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
|
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, |
||
நெருநலும் அனையள்மன்னே; இன்றே, |
||
மை அணற் காளை பொய் புகலாக, |
||
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன் |
||
10 |
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. | உரை |
மனை மருட்சி
|
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. | உரை |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
182. குறிஞ்சி |
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; |
||
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், |
||
பாவை அன்ன நிற் புறங்காக்கும் |
||
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; |
||
5 |
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
|
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, |
||
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!- |
||
கீழும் மேலும் காப்போர் நீத்த |
||
வறுந் தலைப் பெருங் களிறு போல, |
||
10 |
தமியன் வந்தோன், பனியலை நீயே! | உரை |
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
|
183. நெய்தல் |
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, |
||
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, |
||
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, |
||
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, |
||
5 |
உமணர் போகலும் இன்னாதாகும்- |
|
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு |
||
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் |
||
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; |
||
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த |
||
10 |
வறு நீர் நெய்தல் போல, |
|
வாழாள் ஆதல் சூழாதோயே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
|
184. பாலை |
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் |
||
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு |
||
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; |
||
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று |
||
5 |
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
|
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண் |
||
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் |
||
அணி இயற் குறுமகள் ஆடிய |
||
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. | உரை | |
மனை மருட்சி
|
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. | உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
186. பாலை |
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி, |
||
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு, |
||
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும் |
||
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை, |
||
5 |
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, |
|
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர் |
||
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில- |
||
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு |
||
காமர் பொருட் பிணி போகிய |
||
10 |
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. | உரை |
பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.
|
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. | உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
189. பாலை |
தம் அலது இல்லா நம் நயந்து அருளி |
||
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், |
||
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் |
||
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் |
||
5 |
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
|
எவ் வினை செய்வர்கொல் தாமே?-வெவ் வினைக் |
||
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய |
||
கானப் புறவின் சேவல் வாய் நூல் |
||
சிலம்பி அம் சினை வெரூஉம், |
||
10 |
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
|
190. குறிஞ்சி |
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
||
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
||
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
||
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
||
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
||
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
||
வலை மான் மழைக் கண், குறுமகள் |
||
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! | உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
193. பாலை |
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் |
||
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, |
||
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், |
||
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! |
||
5 |
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
|
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் |
||
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, |
||
யாரும் இல் ஒரு சிறை இருந்து, |
||
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
|
195. நெய்தல் |
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
||
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி, |
||
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
||
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
||
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
||
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
||
நீர் அலைத் தோற்றம் போல, |
||
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. | உரை | |
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|
207. நெய்தல் |
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை |
||
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
||
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, |
||
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; |
||
5 |
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
|
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், |
||
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
||
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் |
||
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், |
||
10 |
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
|
திரை எழு பௌவம் முன்னிய |
||
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. | உரை | |
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
|
229. பாலை |
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து, |
||
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே; |
||
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர் |
||
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே; |
||
5 |
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, |
|
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து, |
||
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி, |
||
உழையீராகவும் பனிப்போள் தமியே |
||
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென, |
||
10 |
ஆடிய இள மழைப் பின்றை, |
|
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே? | உரை | |
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
|
234. குறிஞ்சி |
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது |
||
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் |
||
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் |
||
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே |
||
5 |
அஃது ஆன்று |
|
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
||
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் |
||
பங்குனி விழவின் உறந்தையொடு |
||
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. | உரை | |
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
|
235. நெய்தல் |
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், |
||
அரவு வாள் வாய முள் இலைத் தாழை |
||
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் |
||
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் |
||
5 |
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
|
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, |
||
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!- |
||
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, |
||
படு மணிக் கலி மாக் கடைஇ, |
||
10 |
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. | உரை |
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
|
271. பாலை |
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி |
||
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் |
||
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய, |
||
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச் |
||
5 |
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் |
|
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று, |
||
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த |
||
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன, |
||
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம், |
||
10 |
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, |
|
மா இருந் தாழி கவிப்ப, |
||
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே. | உரை | |
மனை மருண்டு சொல்லியது.
|
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! | உரை | |
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|
385. நெய்தல் |
எல்லை சென்றபின், மலரும் கூம்பின; |
||
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு |
||
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி |
||
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப் |
||
5 |
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், |
|
பொழுதன்றுஆதலின், தமியை வருதி: | உரை | |
எழுது எழில் மழைக்க..............
|
396. குறிஞ்சி |
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, |
||
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, |
||
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், |
||
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, |
||
5 |
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
|
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று |
||
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! |
||
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் |
||
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள் |
||
10 |
காமர் நனி சொல் சொல்லி, |
|
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? | உரை | |
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
|