36. சாங்கித்தாயுரை

    இதன்கண் : உதயணன் வாசவதத்தைக்கு யாழ் கற்பித்து வருங் காலத்தே அயல் நாட்டரசர் பலர் அவ்வாசவதத்தையைத்
தாம் தாம் மணந்து கொள்ள  விரும்பியவராய்த் தூது விடுதலும், இந்நிகழ்ச்சி யறிந்த வாசவதத்தை வருந்துதலும், அதுகண்ட
அவள் செவிலியாகிய சாங்கியத்தாய் என்னுந் தவமூதாட்டி (வாசவதத்தையை) அவளைத் தேற்றுதலும், சாங்கியத்தாய்
உதயணனைத்  தனியிடத்தே காண்டலும், தன் வரலாற்றினை அவனுக்குக் கூறுதலும் பிறவுங் கூறப்படும்.
 




5

 மின்னிழை பொருட்டா மேலவன் கொண்ட
 துன்னரும் பெரும்பழி நன்னகர் கழுமக்
 கம்பலை மூதூர் வம்பலர் எடுத்த
 படுசொல் ஒற்றர் கடிதுஅவண் ஓடி
 வானுற நிவந்த வசையின் மாநகர்த்
 தாம்பெறு செவ்வியுள் தலைமகற்கு உணர்த்தக்

 



10




15

 காமத்து இயற்கை காழ்ப்படல் உணர்ந்து
 நகையும் நாணும் தொகஒருங்கு எய்தி
 இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்
 பழிப்புறஞ் சொல்லாப் பண்பினன் ஆதலின்
 உருவுவழி நில்லாது ஆயினும் ஒருவர்க்குத்
 திருவுவழி நிற்கும் திட்பம் ஆதலின்
 கேட்டது கரந்து வேட்டது பெருக்கிப்
 பட்டது நாணாது பெட்டது மலையும்
 காலம் அன்மை அல்லது காணின்
 கோலம் அன்றோ குமரற்கு இதுவென
 எள்ளியும் உரையான் இளமையது இயல்பென
 முள்ளெயிறு இலங்கு முறுவலன் ஆகித்

 

20




25

 தண்கய மருங்கில் தாமரை போல
 அண்ணல் மூதூர்க்கு அணியெனத் தோன்றிச்
 சாமரை இரட்டையும் தமனியக் குடையும்
 மாமணி யடைப்பையும் மருப்பியல் ஊர்தியும்
 பைந்தொடி ஆயமும் பட்டமும் உடையோர்
 ஐம்பதின் ஆயிரர் அரங்கியன் மகளிருள்
 மன்னருள் பிறந்த மக்களுள் அருங்கலம்
 தன்னயந்து அரற்றத் தன்கடன் தர்த்த
 தகைசால் அரிவைக்குத் தக்கன இவையென

 


30

 இசைசால் சிறப்பின் இருங்கலப் பேழையொடு
 மணியினும் பொன்னினும் மருப்பினும் அல்லது
 மரத்தின் இயலாத் திருத்தகு வையம்
 முத்த மாலை முகமிசை அணிந்து
 பொற்றார் புனைந்த புள்ளியல் பாண்டில்
 கடைமணை பூட்டிக் கணிகையில் விட்டுப்

 

35




40

 பொய்தல் மகளிரொடு புனலாட்டு அயரினும்
 தெய்வ விழவொடு தேர்ப்பின் இயலினும்
 நகர்கடந் திறத்த நருமதை பெறாளென
 எயின்மூ தாளரை வயின்வயி னேஎய்
 வாயில் சுட்டி வளநகந் அறியக்
 கோயில் கூத்தும் கொடுங்குழை ஒழிகெனத்
 தொன்றியல் அவையத்து நன்றவட்கு அருளித்
 தருமணல் பந்தர்த் தான்செயற்கு ஒத்த
 கரும மறுத்த கைதூ வமையத்

 


45

 திருநிலத்து இறைமை ஏயர் பெருமகன்
 பெருங்களிறு அடக்கிய பெறற்கரும் பேரியாழ்
 கல்லா நின்றனள் கனங்குழை யோளென
 எல்லா வேந்தரும் மிசையின் விரும்பி
 வழிமொழிக் கிளவியொடு வணக்கஞ் சொல்லிக்
 கழிபெரு நன்கலம் களிற்றின்மிசை உயரித்
 துன்னருங் கோயிலுள் தூதரை விடுத்தர

 
50




55

 ஓலையுள் பொருளும் உரைத்த மாற்றமும்
 நூலிய லாளரொடு நுண்ணிதின் கேட்டு
 நன்றும் என்னான் நன்றென மறாஅன்
 மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
 நிலைமையொடு தெரிதரு நீதிய னாகி
 ஆவது துணிதுணை ஆசையின் இறீஇத்
 தார்கெழு வேந்தன் தமர்களை விடுத்தபின்

 
 

      கோமகன் குறித்தது கொண்டுகை புனைந்து
      தாய்மகள் தேரிய தன்வயின் உரைக்க

 

60




65




70

 நொதுமல் கிளவி கதுமென வெரீஇப்
 புதுமரப் பாவை பொறிஅற் றாங்கு
 விதுப்புறு நடுக்கமொடு விம்முவனள் ஆகி
 இதுமெய் ஆயின் இன்னுயிர் வேண்டி
 வாழ்வோர் உளரெனில் சூழ்கதன் வினையென
 ஆவி நுண்துகில் யாப்புறுத் தாயினும்
   சாவது உறுதியான் தப்பிய பின்றை
 என்பின் தீர்க எந்தைதன் குறையென
 அன்பிற் கொண்ட அரற்றுறு கிளவி
 வளைக்கை நெருக்கி வாய்மிக்கு எழுதரக்
 கதிர்முத் தாரம் கழிவன போலச்
 சிதர்முத தாலி சிதறிய கண்ணள்
 மாழ்குபு கலிழும் மகள்வயின் தழீஇ

 



75

 வீழ்தரு கண்ணீர் விரலின் நீக்கிக்
 கவாஅற் கொண்டு காரணம் காட்டி
 அழேற்கென் பாவா யதுவு முண்டோ
 யாயும் நீயும் யானும் எல்லாம்
 இதுமுத லாக இவ்வகை நிகழின்
   தலைமகன் துறந்து தவம்புரி வேமென
 அஞ்சில் ஓதியை நெஞ்சு வலியுறீஇச்


80

 சேயுயர் உலகம் செம்மையில் கூறும்
   தீதறு நோன்பின் தெய்வந் தேற்றிய
   தீம்பால் காட்சித் தெரிவுபல காட்டி
 மாற்றாக் கவலையின் மனங்கொண் டாங்கு
 நிறைமை சான்றநின் நெஞ்சங் கொண்ட
 பொறைமை காணிய பொய்யுரைத் தேன்என

 
85




90




95

 ஓதியும் நுதலும் மாதரை நீவித்
 தக்கது நோக்கான் பெற்றது விரும்பி
 நுந்தை நேரான் நெஞ்சுகொள் காரணம்
 பைந்தொடித் தோளி பரிவறக் கேளென
 இளமையும் வனப்பும் இல்லொடு வரவும்
 வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும்
 தேசத்து அமைதியு மாசில் சூழ்ச்சியொடு
 எண்வகை நிறைந்த நன்மகன்கு அல்லது
   மகள்கொடை நேரார் மதியோர் ஆதலின்
 அவைஒருங்கு உடைமை அவர்வயின் இன்மையின்
 அதுபொய் யாதல் அதனினுந் தேறெனக்
 காரணக் கிளவி நீர காட்டிச்
 செவிலி தெளிப்பக் கவிழ்முகம் எடுத்து

 


100




105

 நெடுவெண் தானை வாங்கிக் கொண்டுதன்
 வடிவேல் உண்கண் வருபனி அரக்கித்
   தோற்ற நிகர்ப்போர் இன்றி ஆற்றல்
 காலனொடு ஒக்கு ஞாலப் பெரும்புகழ்
 புகரின்று ஓங்கிய நிகரில் கேள்வியன்
 காமம் நுகர்வோர்க்கு ஆரணங்கு ஆகிய
 ஏம வெண்குடை ஏயர் மகனொடு
 வையகம் அறியக் கையகம் புக்குத்
 தானறி வீணை தனியிடத்து எழீஇக்
 காணும் என்னும் கட்டுரை அன்றியும்

 


110




115

 உலக மாந்தர் உள்ளங் கொண்ட
 ஐயக் கிளவி தெய்வம் தேற்றினும்
 தூயள் என்னாத் தீதுரை எய்தி
   வாசவ தத்தையும் வாழ்ந்தனள் என்னும்
 ஓசை நிற்றல் உலகத்து அஞ்சுவன்
 எமர்தர வாராது ஆயினும் மிவண்நோற்று
 அவனுறை உலகத்து அழித்துப்பிறந் தாயினும்
 எய்துதல் வலித்தனெனு செய்வது கேளெனத்
 தெய்வ மாதர் திட்பங் கூற

 



120

 அண்ணல் மருங்கின் ஆவது வேண்டும்
 தன்மனம் உவந்தது தலைவர நோக்கி
 ஏற்ற முன்கைத் தொடிவீழ்ந்து அற்றால்
 கொற்றொடி கொண்ட கொள்கையென் ஏத்தி
 மிகுதியின் மிக்கதன் மேற்றிணைக் கேற்பத்
 தகுவன கூறும் தலைமகன் மகளென
 உவகை நெஞ்சமொடு உவப்பன கூறிப்

 

125




130

 பைந்தொடி ஆயமொடி பன்னொடி பகர்ந்து
 கங்குல் யாமத்தங் கண்படுத் திலையாற்
 கல்விச் சேவகம் கடவோன் வருந்துணைப்
 பல்பூங் கோதாய் பள்ளிகொண்டு அருளெனப்
 பூமென் சேக்கையுள் புனைஇழைப் புகீஇ
 யான்வரு மாத்திரை யாரையும் விலக்கிக்
 காஞ்சன மாலாய் காவல் போற்றெனத்

 




135




140

 தொகுவேன் முற்றஞ் சிவிகையில் போந்து
   மயிலாடு இடைகழி மாடத்து ஒருசிறைப்
 பயில்பூங் கொம்பர்ப் பந்தர்முன் இழிந்து
 கிளரிழை கற்கும் கேள்விப் பொழுதெனத்
 தளரியல் ஆயமொடு தாய்முதல் இசைப்பக்
 கீத சாலை வேதிகை காக்கும்
 கோல்கொள் சுற்றமொடு குமரன் புகுதர
 இடுமணல் முற்றத்து இவ்வழி வருகெனக்
 கொடிமுதிர் குருகின் கொம்புதலைக் கொண்ட
 உதிர்பூம் புன்கின் ஒருசிறை இரீஇ

 




145

 இனைத்திறம் பகருறும் எந்தையொடு என்னிடைக்
 கிளைத்திறம் பகருநர் தலைப்பெயல் அரிதெனக்
 கண்ணினும் செவியினும் நண்ணுநர்ப் போற்றி
 மண்ணகம் காவலன் மாபெருந் தேவி
 திருவயிற்று இயன்ற பெருவிறல் பொலிவே
 இனையை யாவதும் எம்மனோர் வினையென
 யாக்கையது இயல்பினும் அன்பினுங் கொண்டதன்
 காட்சிக் கண்ணீர் கரந்தகத்து அடக்கி

 

150

 இன்னள் என்றியான் என்முதல் உரைப்பேன்
   மன்னவன் மகனே மனத்தில் கொள்ளெனச்
   செம்மல் செங்கோல் நுந்தை அவையத்து
 என்னிகந்து ஒரீஇயினன் இளமையிற் கணவன்
 தன்னிகந் தொரீஇயான் தகேஎன் ஆகக்
 கொண்டோன் பிழைத்த தண்டந் தூக்கி

 
155




160

   வடிக்கண் இட்டிகைப் பொடித்துகள் அட்டிக்
   குற்றம் கொல்லும்எம் கோப்பிழைப் பிலன்என
 முற்றந் தோறும் மூதூர் அறிய
   நெய்தல் புலையன் நெறியில் சாற்றிப்
 பைதல் பம்பை இடங்கண் நெருக்கி
 மணற்குடம் பூட்டி மாநீர் யமுனை
 இடைக்கயத்து அழுந்த விடீஇய செல்வுழிப்

 



165

 புனல்கரைப் படீஇயர் புதல்வரொடு ஆர்க்கும்
 தோணி அரவம் சேணோய்க் கிசைப்பத்
 தழூஉப்புணை ஆயமொடு குழூஉத்திரை மண்டி
 ஆவி நுண்துகில் யாப்புறுத்து அசைத்துப்
 பாகவெண் மதியில் பதித்த குடுமிக்
 களிற்றொடு புக்குக் கயங்கண் போழ்வோய்
 அவ்வயின் எழுந்த கவ்வை என்னென

 

170




175

 முந்தை உணர்ந்தோர் வந்துநினக்கு உரைப்ப
 யாமுங் காண்கம் கூமின் சென்றெனக்
 கோல்கொண் மள்ளர் கா லின்டி
 நம்பி வேஎண்ம் அம்பி வருகென
 ஆணையிற் திரீஇயர் அஞ்சன்மின் நீரெனத்
 தோணி இழிப்புழித் துடுப்புநனி நீண்டி
 நெற்றி யுற்ற குற்றம் இதுவென

 




180

 இதுமுத லாக இன்னே இம்மகள்
 அழிதவப் படுதல் ஆற்றுமென்று உரைத்த
 குறிகோள் ஆளன் அறிவிகழ்ந்து எள்ளி
 எல்லை ஞாயிறு இரவெழும் எனினும்
 பல்கதிர்த் திங்கள் பகல்படும் எனினும்நின்
 சொல்வரைத்து ஆயின் சொல்லுவை நீயென
 இன்னகை முறுவலை ஆகி இருங்களிற்று
 நண்நுதல் மத்தகத்து ஊன்றிய கையை

 

185




190

 கொண்டோன் கரப்பவும் கொள்கையின் இகப்போன்
   தன்குறிப்பு ஆயுழித் தவம்வஇள்கு எளிதென
 வம்ப மாக்கள் வாயெடுத்து உரைத்த
 வெஞ்சொல் கிளவிநின் அங்கையின் அவித்து
 வேண்டியது உரைமி ன்ண்டியான் ஈருகெனப்
 புலைமகன் அறையப் பூசலில் போந்தேன்
   நிலைமை வேண்டியான் இன்னகர் வாழ்வேன்
   தலைமகன் மகனே தவமென் துணிவென
 நிகழ்வதை உரைக்கும் நிமித்திக்கு அஞர்அறப்
 புகழ்வினை யாகிப் பூக்கொண்டு எறிந்தபின்

 

195




200

 மற்றும் அவனே கற்றது நோக்கி
   யானை அணிநிழல் படுதலின் அந்தணி
 தான்கொண்டு எழுந்த தவத்துறை நீங்கித்
 தானை வேந்தன் தாள்நிழல் தங்கி
 முற்றிழை மகளிர்க்கு முதுகண் ஆமெனச்
 செவ்வகை உணர்ந்தோன் சேனைக்கு அணிமகன்
 கோசிகன் என்றவன் குறிப்பெயர் கூறி
 அடையாண் கிளவியொடு அறியக் கூறலும்

 



205

 கடிதார் மார்பனும் கலிழ்ச்சி நோக்கிப்
 பிறப்பிடை இட்டேன் ஆயினும் எனக்கோர்
 சிறப்பினர் ஆதல் தேற்றும்என் மனன்எனக்
   கண்டதற் கொண்டு தண்டாது ஊறுமென்
 அன்புகரி யாக அறிபுதுணி கல்லேன்
 இன்றிவை கரியா இனித்தெளிந் தனன்என
 உதயண குமரன் உணர்ந்தமை தேற்றலும்

 

210




215

 மறைமூ தாட்டி மற்றுங் கூறும்
 கதிர்வினை நுனித்தநின் கணியெனைக் கூறிய
 எதிர்வினை எல்லாம் எஞ்சாது எய்தி
 இந்நகர்ப் பயின்றுயான் இந்நிலை எய்திற்று
 என்னி னாயிற்று என்குவை ஆயின்
 என்முதல் கேளெனத் தொன்முதல் தொடங்கி
   ஆக்கையின் னிழிந்துநின் அருளில் பிறந்தஎன்
 நோக்கரு நல்வினை நுகரிய செல்கெனக்
 கொற்றவன் மகனே பற்றாது விடுவேன்
 நீராட் டியலணி நின்வயி னீங்கியப்
 பேர்யாற்று ஒருகரைப் பெயர்ந்தனென் போகிக்

 
220

 கெங்கா தீரத்துத் தேசம் கெழீஇ
 அங்காங்கு ஒல்வனென்று ஆத்திரை முன்னி
 வம்பலர் மொய்த்ததோர் வழிதலைப் பட்டு
 வயிரச் சாத்தொடு வடதிசைப் போகி
 அயிரிடு நெடுவழி அரசிடை இருந்துழிப்

 
225




230

 பூதியும் மண்ணும் பொத்தகக் கட்டும்
 மானுரி மடியும் மந்திரக் கலப்பையும்
 கானெடு மணையுங் கட்டுறுத்து யாத்த
 கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
 தரும தருக்கர் தற்புறஞ் சூழப்
   பரிபு மெலிந்த படிவப் பண்டிதன்
 சாங்கிய நுனித்தவோர் சாறயர் முனிவனை
 ஆங்கெதிர்ப் பட்டாங்கு அவனொடும் போகி

 


235

 அத்தவப் பட்டாங்கு அறுவகைச் சமயமும்
 கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி
   இமயப் பொருப்பகத்து ஈராண்டு உறைந்தபின்
 குமரித் தீர்த்தம் மரீஇய வேட்கையின்
 அருந்தவ நுனித்த அறவா சிரியன்
 தருமவாத் திரையெனத் தக்கணம் போந்துழி

 

240

 மாவுஞ் சேனை மதில்புறம் கவைஇய
   காள வனத்தோர் கபாலப் பள்ளியுள்
 செலவயா உயிர்த்த காலை நூற்றுறை
 யாற்றுளிக் கிளந்த அறுவகைச் சமயமும்
 ஏற்றல் காணுஎம் இறைவன் தானென
 மாற்றக் கோடணை மணிமுரசு அறைதலின்

 
245




250

 கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்
 தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுள்முன்
 பாலகன் என்னும் பண்ணவர் படிவத்துக்
 காள சமணன் காட்சி நிறுப்ப
 ஐம்பெருஞ் சமயமும் அறந்தோற் றனவென
 வேந்தவன் நுதலிய வேதஆ சிரியரும்
 தாந்தம் மருங்கிற்று ஆழங் காட்டிச்
 சாங்கிய சமயம் தாங்கிய பின்னர்
 நல்வினை நுனித்தோன் நம்மொடு வாழ்கெனப்
 பல்வேல் வேந்தன் பரிவுசெய்து ஒழுகலின்

 
255




260

 எழுந்த வாத்திரை ஒழிந்துஈண்டு உறைவுழிக்
 கையது வீழினும் கணவன் அல்லது
 தெய்வம் அறியாத் தேர்த்துணர் காட்சிப்
 படிவக் கற்பின் பலகோ மகளிருள்
 தொடியோடு அம்மனை தோழி எனத்தன்
 குடிவழி யாகக் கொண்ட கொள்கையின்
 இத்தவம் உவக்கும் பத்தினி ஆதலின்
 வஞ்சார் வாகத் தலைப்பெயல் விரும்பி
 அறஞ்சார் வாக அன்புசெய்து அருளி
 இறைமகன் அறிய இன்துணை யாகிப்

 
265




270

 பிறைநுதல் மாதர் பிறந்த யாண்டினுள்
 நாவொடு நவிலா நகைபடு மழலையள்
 தாய்கைப் பிரிந்துதன் தமர்வயின் நீங்கி
 என்கைக் கிவரும் அன்பினள் ஆதலின்
 தாயென்று அறிந்தனன் நீயினி வளர்க்கெனக்
 காதல் வலையாக் கைத்தரக் கொண்டவள்
 பால்வகை அறிந்தபின் படர்வேன் தவமென
 மைத்துன மங்கை மரூஉமா கண்டு
 நட்புவலை யாக நங்கையொடு உறைவேன்
 ஒன்பதிற்று யாட்டை உதயண கேளெனத்

 
275




280




285

 தன்வயின் பட்ட தவ்வியிற் கிளரி
 அகம்புரி செம்மை அன்பிற் காட்டி
 மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுள்
 புள்ளும் மாவும் உள்ளுறுத்து இயன்ற
 ஆண்பெயர்க் கிழவி நாண்மகிழ் கடவ
 வழுக்கிக் கூறினும் வடுவென நாணி
 ஒழுக்கம் நுனித்த வூராண் மகளிர்
 தாநயந்து அரற்றினும் தக்குழி அல்லது
   காமுறற்கு ஒவ்வாக் கயக்கமி லாளநீ
 ஒட்டாக் கணிகையைப் பெட்டனை என்பது
 புலவோர் தெரியின் பொருத்தமின் றாகி
   அலவலை நீர்த்தால் அத்தைநின் அலரென

 



290

 மற்றவள் வினவவும் பற்றியது அவிழான்
 பண்டறி உண்டெனப் பகைநிலத்து உறைந்த
 பெண்டிரைத் தெளிந்து பெருமறை உரைத்தல்
   நுண்டுறை யாளர் நூலொழுக்கு அன்றெனத்
 தேறாத் தெளிவோடு கூறாது அடக்கி
 மாயமென்று அஞ்சின் மற்றிது முடிக்கும்
 வாயில் இல்லென வலித்தனன் துணிந்து
 தாய்முதல் இருந்துதன் நோய்முதல் உரைப்ப

 
295




300

 ஒள்ளிழை கணவனும் உரிமையுள் தெளிந்த
 கொள்கை அறிந்தியான் கூறவும் வேண்டா
 அருமறை அன்மையின் அன்பின் காட்டி
 ஒருவயின் ஒண்தொடிக்கு உற்றது கேளென
 ஏதின் மன்னர் தூதுவ மாக்கள்
 வந்தது வடுவெனத் தந்தையோடு ஊடி
 அறத்தாறு அன்றியும் ஆகுவ தாயின்
 துறத்தல் வேண்டுந் தூய்மை யோற்கெனத்
 துணிவுள் ளுறுத்த முனிவினள் ஆகி

 

305




310

 நன்மணி யைம்பால் நருமதைக்கு அரற்றிய
 மன்ன குமரன் மனம்பிறிது ஆயினும்
 எந்தையும் யாயும் இன்னகை ஆயத்துப்
 பைந்தொடிச் சுற்றமும் பலபா ராட்ட
 மாசில வீணை மடமொழிக்கு ஈந்தோன்
 ஆசான் என்னும் சொல்பிறிது ஆமோ
 அண்ணல் குமரற்கு அடிச்செருப் பாகெனத்
 தன் மனங் கொண்டவள் தாவ முற்றிச்

 



315




320

 சாவினை துணியும் மாத்திரை யாவதும்
 மறுவொடு மிடைந்து மாண்பில ஆகிய
 சிறுசொற் கிளவி கேளல செவியென
 அங்கையில் புதைஇ யணிநிற மழுகிய
 நங்கையைத் தழீஇ நன்னுதல் நீவி
 மனங்கொள் காரணம் மருளக் காட்டி
 இனமில் ஒருசிறை இன்னினி தாகப்
 பூமலி சேக்கையுள் புகுத்தினென் போந்தேன்
 பாயலுள ஆயினும் பரிவுஅவள் தீர்கென

 




325




330

 இஃதவள் நிலைமை இன்னினிக் கொண்டு
 பரிவுமெய்ந் நீங்கிப் பசலையும் தீர்கென
 ஒண்ணுதல் மாதர் கண்ஏப் பெற்ற
 புண்ணுறு நெஞ்சில் புலம்புகை அகல
 மாதர் நுதலிய மருந்தியல் கிளவி
 ஆருமில் ஒருசிறை அன்புறப் பயிற்றி
 நிலைமைக்கு ஒத்த நீதியை யாகித்
 தலைமைக் கொத்த வதுவை எண்ணென
 இழுக்கம் இல்லா இயல்பொடு புணர்ந்த
 ஒழுக்கம் எல்லாம் ஓம்படுத்து உரைஇப்

 




335




340

 பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன்
 வில்விசை கேட்ட வெரூஉப்பிணை போலக்
 காவல் பூட்டியர் நாமிசை யெடுத்த
 சொல்லிசை வெரீஇய மெல்லென் பாவை
 என்முகத் தேயும் இறைஞ்சிய தலையள்
 நின்முகத் தாயின் நிகழ்ந்ததை நாணி
 நிலம்புகு வன்ன புலம்பினள் ஆ£கிச்
 சிறுமையின் உணர்ந்த பெருமகன் இரங்க
 மண்கெழு மடந்தாய் மறைவிடந் தாவென
 ஒன்றுபுரி கற்பொடு உலகுவிளக் குறீஇப்
 பொன்றல் ஆற்றிய புகழாள் போல
 கொண்ட கொள்கையின் ஒண்தொடி யோளும்
 துளிப்பெயன் மொக்குளின் ஒளித்தல் அஞ்சுவென்

 

345

 இன்றைக் கேள்வி இடையிடு மெனினும்
 சென்றுஅயா நங்கையைச் செவ்வி நோக்கி
 இன்துணை மகளிரொடு ஒன்றியான் விடுத்தரும்
 சொல்லோடு படுத்துச் செல்கவென் களிறென

 


350

 அவன்வயின் நீங்கி ஆயங் கூஉய்
 மகள்வயின் புக்கு மம்மர்நோய் நீக்கி
 நல்லோள் கற்கும் நாழிகை இறந்தன
 வல்லோன் செல்கதன் வளநக ரத்துஎனக்
 காஞ்சன மாலாய் காவலற்கு உரையென
 மணிப்படு மாடத்து வாயில் போந்தவள்
 பணித்த மாற்றம் அணித்தகைக்கு உரைப்ப

 
355




360

 ஆர மார்பனும் போவனன் எழுந்து
 கற்றிலள் என்னும் கவற்சி வேண்டா
 பற்றிய கேள்வியும் முற்றிழை முற்றினள்
 குஞ்சர வேற்றும் கொடித்தேர் வீதியும்
 பொங்குமயிர்ப் புரவியும் போர்ப்படைப் புணர்ப்பும்
 நீதியும் பிறவும் ஓதிய எல்லாம்
 நம்பி குமரரும் தந்துறை முற்றினர்

 



365




370

 வல்லவை எல்லாம் வில்லோன் மக்களை
 நல்லவை படுப்பது நாளை ஆதலின்
 என்னறி அளவையின் ஒண்றுதல் கொண்ட
 தைவரற்கு இயைந்த தான்பயில் வீணையைக்
 கையினுஞ் செவியினுஞ் செவ்விதின் போற்றி
 ஆராய்க என்பது நேரிழைக் குரையென
 விசும்பாடு ஊசல் வெள்வளைக்கு இயற்றிய
 பசும்பொன் ஆகத்துப் பக்கம் பரந்த
 நறும்புகை முற்றத்து நம்பி நடக்கெனக்
 குறும்புழை போயினன் கோலவர் தொழவென்.