6. சமய இலக்கியம்

சமய இலக்கியம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

வழிபாடு என்பதற்குப் ‘பின்பற்றி ஒழுகுதல்’ என்பது பொருள். வழிபடு என்ற சொல்லிலிருந்து வழிபாடு என்ற சொல் தோன்றியது. தான் வழிபடும் இறைவனின் அருள் நெறிகளைப் பின்பற்றி ஒழுகுதல் எனப் பொருள்பெறும். எல்லாம்வல்ல பரம்பொருளைப் பாடவும், அவன் பாதம் தேடவும், இசையுடன் கூடிய பாடல்கள் எழுந்தன. அவைதான் வழிபாட்டுப் பாடல்கள் எனப்பெறுகின்றன. இவை தமிழில் சமய இலக்கியம் எனப் போற்றப் பெறுகின்றன.