6. சமய இலக்கியம்

இயேசு

பாடல்
Poem


சத்துருவை நேசிக்கும் தன்மை காட்டித்

தனி நிலையாம் இறையருளின் தயவைக் காட்டிச்

சுத்தமிலா அற்பர்களைத் தூர ஓட்டித்

தூய்மையதே இறையென்று துளங்கக் காட்டி

வித்தகமாய்ச் சீடருக்கு விளைவு காட்டி

விண்ணிடத்தும் மண்ணிடத்தும் விழிப்புக்காட்டி

எத்திசையும் இறையருளே காட்டிக் காட்டி

இன்பநிலை எய்திட்ட இயேசு வாழி!

- அ.மு.பரமசிவானந்தம்