6. சமய இலக்கியம்

திருமால்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  குலசேகர ஆழ்வார் எந்நாட்டு மன்னராக இருந்தார்?

குலசேகர ஆழ்வார் சேரநாட்டு மன்னராக இருந்தார்.

2.  வைணவ ஆழ்வார்கள் எத்தனைப் பேர்?

வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர்.

3.  ‘பிரபந்தம்’ என்பதன் பொருள் என்ன?

‘பிரபந்தம்’ என்பதன் பொருள் சிற்றிலக்கியம்.

4.  பெருமாள் திருமொழி பாடியவர் யார்?

பெருமாள் திருமொழி பாடியவர் குலசேகர ஆழ்வார்.

5.  திருவேங்கடமலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் யார்?

திருவேங்கடமலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் குலசேகர ஆழ்வார்.

6.  திருவேங்கடமலையின் இயற்கைக் காட்சியைக் கூறுக.

திருவேங்கடமலை தேன்சிந்தும் மலர்களுடைய சோலைகளைக் கொண்டது.

7.  அரம்பையர் என்போர் யார்?

அரம்பையர் என்போர் அழகிய விண்ணுலக மகளிர் ஆவர்.

8.  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை் தொகுத்தவர் நாதமுனி.

9.  பிறவி வேண்டும் என்று பாடிய ஆழ்வார் யார்?

பிறவி வேண்டும் என்று பாடிய ஆழ்வார் குலசேகர ஆழ்வார்.

10.  விண்ணுலக அழகிய மகளிர் மூவர் யாவர்?

விண்ணுலக அழகிய மகளிர் மூவர் அரம்பை, உருபசி, மேனகை ஆவர்.