6. சமய இலக்கியம்

இயேசு

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் ஆவார். இவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். முறையாகத் தமிழ் பயின்று புலவர் பட்டங்களும் எம்.ஏ., எம்.லிட். பட்டமும் பெற்றவர். ஆழ்ந்தகன்ற புலமை நலம் பெற்றவர்.

இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து பல்லாண்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஏசுநாதரின் சிறப்புகளைக் கவிதை உள்ளம் என்னும் நூலில் விளக்கியுள்ளார். இந்நூலிலிருந்து ஒரு பாடல் உங்களுக்குப் பாடமாக கொடுக்கப் பெற்றுள்ளது.