திருமால்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. குலசேகர ஆழ்வார் ----------- இருந்தவர்
குலசேகர ஆழ்வார் சேர மன்னராக இருந்தவர்.
2. வைணவ ஆழ்வார்கள் ----------.
வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர்
3. பிரபந்தம் என்றால் ---------- என்று பொருள்.
பிரபந்தம் என்றால் சிற்றிலக்கியம் என்று பொருள்.
4. திருவேங்கடமலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் ---------.
திருவேங்கடமலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் குலசேகர ஆழ்வார்.
5. பெருமாள் திருமொழி பாடியவர் -----------.
பெருமாள் திருமொழி பாடியவர் குலசேரக ஆழ்வார்
6. திருவேங்கடமலையில் தேன்சிந்தும் மலர்களைக் கொண்ட -------- உள்ளன.
திருவேங்கடமலையில் தேன்சிந்தும் மலர்களைக் கொண்ட சோலைகள் உள்ளன.
7. விண்ணுலக அழகியர்க்கு ---------- என்று பெயர்.
விண்ணுலக அழகியர்க்கு அரம்பையர் என்று பெயர்.
8. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் ----------.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி
9. பிறவி வேண்டும் என்ற ஆழ்வார் ---------.
பிறவி வேண்டும் என்ற ஆழ்வார் குலசேகர ஆழ்வார்
10. விண்ணுலகில் வாழும் அழகிய மங்கையர் ---------, --------, ------.
விண்ணுலகில் வாழும் அழகிய மங்கையர் அரம்பை, உருபசி, மேனகை.