இன்பம்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இன்பமும் துன்பமும் கலந்ததே ---------- ஆகும்.
இன்பமும் துன்பமும் கலந்ததே மனித வாழ்க்கை ஆகும்.
2. எல்லாரும் ---------- ஆக வாழவே விரும்புவர்.
எல்லாரும் இன்பம் ஆக வாழவே விரும்புவர்.
3. திருவாரூர் மாவட்டம் ----------- சுரதா பிறந்த ஊர்.
திருவாரூர் மாவட்டம் பழையனூர் சுரதா பிறந்த ஊர்.
4. சுரதாவின் தந்தையார் ----------- ஆவார்.
சுரதாவின் தந்தையார் திருவேங்கடம் ஆவார்.
5. சுரதாவின் இயற்பெயர் ----------- என்பதாகும்.
சுரதாவின் இயற்பெயர் இராசகோபால் என்பதாகும்
6. சுரதாவின் ----------- பல பரிசுகளை வென்றது.
சுரதாவின் தேன்மழை பல பரிசுகளை வென்றது.
7. சுரதா என்ற பெயர் ---------- மேல் கொண்ட பற்றின் காரணமாக அமைந்தது.
சுரதா என்ற பெயர் பாரதிதாசன் மேல் கொண்ட பற்றின் காரணமாக அமைந்தது.
8. தமிழுலகம் சுரதாவை ------------- என அழைக்கின்றது.
தமிழுலகம் சுரதாவை உவமைக் கவிஞர் என அழைக்கின்றது.
9. வாழ்வில் ------------- தரும் செயல்களைச் செய்வது இன்பமாகும்.
வாழ்வில் வெற்றி தரும் செயல்களைச் செய்வது இன்பமாகும்.
10. பெற்றதைப் பிறருக்கு வழங்கும் ---------- இன்பமாகும்.
பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருங்குணம் இன்பமாகும்.