5. இக்கால இலக்கியம்

இன்பம்

பாடல் கருத்து
Theme of the Poem


கற்றவர்களின் முன்னிலையில் தாம் கற்ற கல்வியைக் கூறுவது இன்பமாகும். வாழ்வில் வெற்றி தரும் செயல்களைச் செய்வது இன்பமாகும். தீயவர்களோடு சேராமல் வாழ்வது இன்பமாகும். தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கிவாழும் பெருமை மிக்க குணத்தைப் பெறுவதும் இன்பமாகும்.