புதுக்கவிதை
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மரபுக்கவிதையிலிருந்து மாறுபட்ட புதுவடிவம் கொண்டதை --------- என்கிறோம்.
மரபுக்கவிதையிலிருந்து மாறுபட்ட புதுவடிவம் கொண்டதை புதுக்கவிதை என்கிறோம்.
2. புதுக்கவிதையை ----------- என்றும் கூறலாம்.
புதுக்கவிதையை உரைவீச்சு என்றும் கூறலாம்.
3. வல்லிக்கண்ணன் பிறந்த ஊர் ---------- ஆகும்.
வல்லிக்கண்ணன் பிறந்த ஊர் இராசவல்லிபுரம் ஆகும்.
4. வல்லிக்கண்ணன் எழுதிய ----------- என்ற நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
வல்லிக்கண்ணன் எழுதிய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
5. அமுதபாரதி ---------- பகுதியைச் சேர்ந்தவர்.
அமுதபாரதி திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்.
6. அமுதபாரதியின் தாயார் பெயர் --------- ஆகும்.
அமுதபாரதியின் தாயார் பெயர் வள்ளியம்மாள் ஆகும்.
7. அமுதபாரதி தமிழில் முதல் ---------- நூல் எழுதியவர்.
அமுதபாரதி தமிழில் முதல் ஐக்கூ நூல் எழுதியவர்.
8. அமுதபாரதி தமிழ்நாடு அரசின் --------- விருது பெற்றவர்.
அமுதபாரதி தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்.
9. கொடுத்தே தீரவேண்டியது --------- ஆகும்.
கொடுத்தே தீரவேண்டியது கடன் ஆகும்.
10. இந்தக் காட்டில் எந்த ----------- புல்லாங்குழல்?
இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?