சுயமரியாதை உலகு
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. பாரதிதாசன் எங்குப் பிறந்தார்?
பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்தார்.
2. பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
பாரதிதாசனின் பெற்றோர் கனகசபை, இலக்குமி அம்மாள் ஆவர்.
3. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
4. சுப்புரத்தினம் யார் மீது கொண்ட ஈடுபாட்டால் தம்பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றினார்?
சுப்புரத்தினம் பாரதியார் மீது கொண்ட ஈடுபாட்டால் தம்பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றினார்.
5. பாரதிதாசன் படைத்த நூல்கள் சிலவற்றைக் கூறுக.
பாரதிதாசன் கவிதைகள், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம் முதலியவை பாரதிதாசன் படைத்த நூல்கள்.
6. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப் பெற்றார்?
புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பாரதிதாசன் அழைக்கப் பெற்றார்.
7. பாரதிதாசன் காலம் எத்தகையக் காலம்?
பாரதிதாசன் காலம் சமுதாயச் சீர்திருத்தக் காலம் ஆகும்.
8. இந்த உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் ?
இந்த உலகம் சண்டைச் சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
9. உலகத்தை எவ்வாறு படைக்க வேண்டும்?
சாதிமத வேறுபாடு இல்லாமல் புதியதோர் தன்மான உலகமாகப் படைக்க வேண்டும்.
10. உலகத்தில் எவை அழிய வேண்டும்?
உலகத்தில் சண்டை, சச்சரவு, சாதி, சமய, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவை அழிய வேண்டும்.