சுயமரியாதை உலகு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பாரதிதாசன் காலம் ------------- உச்சக்கட்டத்தில் இருந்த காலம்.
பாரதிதாசன் காலம் சமுதாயச் சீர்திருத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம்.
2. பாரதிதாசனின் பாடுபொருள் சாதி, சமய, ---------- ஆகியவற்றை எதிர்ப்பதாகும்.
பாரதிதாசனின் பாடுபொருள் சாதி, சமய, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்ப்பதாகும்.
3. பாரதிதாசன் ---------- ஆம் ஆண்டு பிறந்தார்.
பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.
4. பாரதிதாசனின் இயற்பெயர் ----------- ஆகும்.
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்.
5. பாரதிதாசன் --------மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
பாரதிதாசன் பாரதியார் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
6. பாரதிதாசன் ------- என்ற கவிதை ஏட்டை நடத்தினார்.
பாரதிதாசன் குயில் என்ற கவிதை ஏட்டை நடத்தினார்.
7. பாரதிதாசன் -----------ஆகப் பணியாற்றினார்.
பாரதிதாசன் தமிழாசிரியர் ஆகப் பணியாற்றினார்.
8. தமிழ்நாடு பாரதிதாசனைப் ----------- என்றும், புரட்சிக்கவிஞர் என்றும் கொண்டாடுகிறது.
தமிழ்நாடு பாரதிதாசனைப் பாவேந்தர் என்றும், புரட்சிக்கவிஞர் என்றும் கொண்டாடுகிறது.
9. உலகம் சாதிமத ---------- தாங்கியுள்ளது.
உலகம் சாதிமத பேதங்கள் தாங்கியுள்ளது.
10. பேதமிலா உலகத்துக்கு --------- எனப் பெயர் வைப்போம்.
பேதமிலா உலகத்துக்கு தன்மான உலகு எனப் பெயர் வைப்போம்.